முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமோகன் ஒரு இடதுசாரியா?



என்னுடைய உயிரெழுத்து பேட்டியில்இன்று கடுமையான இடதுசாரி எழுத்தாளராய் தோன்றும் ஜெயமோகனிடம் முரணியக்க சிந்தனை சார்ந்து ஒரு இடதுசாரித்தனம் உள்ளது.”என சொல்லி இருந்தேன். நண்பர் வி.மு அது எப்படி எனக் கேட்டார்.

இது என் பதில்: “ஹெகலின் டையலிக்டிக்ஸின் தாக்கம் அவரிடம் உள்ளது. அதை சொன்னேன். உதாரணமாய் தீமையும் நன்மையும் சேர்ந்து முயங்கும் போது தான் வாழ்க்கை உருவாகிறது என்றால் அது முரணியக்க சிந்தனை. அதை ஜெயமோகனிடம் பார்க்கலாம். ஒருமுறை அவர் அடிமைத்தனம் உள்ள சமூகம் தான் இலக்கியம், கலை ஆகியவற்றை மேலெடுக்கும் என்றார். அதாவது கலை, இலக்கியம் அடிமைத்தனத்துக்கு எதிரானது. ஆனால் அடிமைகளும், சுரண்டலும் உள்ள சமூகத்தில் தான் ஒரு தட்டினருக்கு கலை இலக்கியத்தில் ஈடுபடும் வசதியை நேரத்தை அதற்கான சூழலும் தோன்றுகிறது. அதாவது ஒருவர் வசதியாய் உட்கார்ந்து பண்பாட்டுக்காய யோசிக்க இன்னொருவர் இருமடங்கு உடல் உழைப்பு செலுத்த வேண்டும். இவர் சோம்பலாய் இருந்து அவர் எப்படி உடலுழைப்பின் சுரண்டிலில் இருந்து தப்பிக்கலாம் என யோசித்து ஒரு கோட்பாட்டை உருவாக்குவார். அடிமைத்தனம் ஒரு அநியாயம். ஆனால் ஒரு அநியாயம் இருக்கும் போது தான் இன்னொரு பக்கம் நியாயம் பிழைக்க முடியும். அது போல் சாத்தான் இல்லாத உலகில் கடவுளுக்கு இடமில்லை. ஏமாற்றம் இல்லாத போது ஆசை தோன்றாது. கடும் கட்டுப்பாடுகள் உருவாகும் போது அங்கு கலக சிந்தனை தோன்றும். உடம்பில் வியாதி பரப்பும் கிருமிகள் இருந்தால் தான் எதிர்ப்பு சக்தி தோன்றும். கிருமிகளே இல்லாத சூழலில் மனிதன் வலுவற்று போவான். அதாவது கிருமிகளும் வேண்டும், தடுப்பு சக்தியும் வேண்டும். இரண்டுக்கும் ஒரு சமநிலை வேண்டும். அப்போது தான் வாழ முடியும். ஒன்று கூடினாலோ குறைந்தாலோ உயிர் இருக்காது. இப்படி முரண்கள் தான் வாழ்க்கையின் இயக்கத்துக்கு காரணமாகின்றன என்பது  முரணியக்க சிந்தனை. இடதுசாரிகள் கார்ப்பரேட்-பாட்டாளி போராட்டமாக வாழ்க்கையை பார்ப்பது போலத் தான் இது. ஷிஷெக் இதே போல் மிகப்பெரிய அன்பு வெறுப்பை சரிசமமாய் கொண்டது என்பார். அதாவது ஒரு பெண்ணை ஆவேசமாய் முத்தமிடும் போது அடிமனதில் அவளது கழுத்தை நெரிக்கும் உக்கிரமும் தோன்றுகிறது. கொலை விருப்பம் இல்லாமல் காமம் இல்லை. முயக்கம் இல்லை. 
அடிப்படையில் இவர்கள் எல்லாம் ஒரே மாதிரி யோசிக்கிறவர்கள். அதாவது நிலைப்பாடுகளில் மாறுபட்டாலும் ஜெயமோகன் மற்றும் இடதுசாரிகளின் ஆயுதமும், அடவு முறையும் ஒன்று தான். ஒரே தர்க்கத்தை தான் இருவேறு விதமாய் பயன்படுத்துகிறார்கள். அதாவது ஹெகலின் தாக்கத்தில் தான் மார்க்ஸியம் உருவானது. அதன் குட்டிக் கிளையாக ஜெயமோகனிஸமும் தோன்றியது”

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
face book சுத்த வேஸ்ட்ன்னு சொன்னவரு, இப்ப நடக்கப்போற அவரோட விழாவுக்காக,
அதுல புது கணக்கு ஆரம்பிச்சுருக்காரு. எல்லாம் மகாபாரதத்தின் மகிமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...