முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமோகன் ஒரு இடதுசாரியா?



என்னுடைய உயிரெழுத்து பேட்டியில்இன்று கடுமையான இடதுசாரி எழுத்தாளராய் தோன்றும் ஜெயமோகனிடம் முரணியக்க சிந்தனை சார்ந்து ஒரு இடதுசாரித்தனம் உள்ளது.”என சொல்லி இருந்தேன். நண்பர் வி.மு அது எப்படி எனக் கேட்டார்.

இது என் பதில்: “ஹெகலின் டையலிக்டிக்ஸின் தாக்கம் அவரிடம் உள்ளது. அதை சொன்னேன். உதாரணமாய் தீமையும் நன்மையும் சேர்ந்து முயங்கும் போது தான் வாழ்க்கை உருவாகிறது என்றால் அது முரணியக்க சிந்தனை. அதை ஜெயமோகனிடம் பார்க்கலாம். ஒருமுறை அவர் அடிமைத்தனம் உள்ள சமூகம் தான் இலக்கியம், கலை ஆகியவற்றை மேலெடுக்கும் என்றார். அதாவது கலை, இலக்கியம் அடிமைத்தனத்துக்கு எதிரானது. ஆனால் அடிமைகளும், சுரண்டலும் உள்ள சமூகத்தில் தான் ஒரு தட்டினருக்கு கலை இலக்கியத்தில் ஈடுபடும் வசதியை நேரத்தை அதற்கான சூழலும் தோன்றுகிறது. அதாவது ஒருவர் வசதியாய் உட்கார்ந்து பண்பாட்டுக்காய யோசிக்க இன்னொருவர் இருமடங்கு உடல் உழைப்பு செலுத்த வேண்டும். இவர் சோம்பலாய் இருந்து அவர் எப்படி உடலுழைப்பின் சுரண்டிலில் இருந்து தப்பிக்கலாம் என யோசித்து ஒரு கோட்பாட்டை உருவாக்குவார். அடிமைத்தனம் ஒரு அநியாயம். ஆனால் ஒரு அநியாயம் இருக்கும் போது தான் இன்னொரு பக்கம் நியாயம் பிழைக்க முடியும். அது போல் சாத்தான் இல்லாத உலகில் கடவுளுக்கு இடமில்லை. ஏமாற்றம் இல்லாத போது ஆசை தோன்றாது. கடும் கட்டுப்பாடுகள் உருவாகும் போது அங்கு கலக சிந்தனை தோன்றும். உடம்பில் வியாதி பரப்பும் கிருமிகள் இருந்தால் தான் எதிர்ப்பு சக்தி தோன்றும். கிருமிகளே இல்லாத சூழலில் மனிதன் வலுவற்று போவான். அதாவது கிருமிகளும் வேண்டும், தடுப்பு சக்தியும் வேண்டும். இரண்டுக்கும் ஒரு சமநிலை வேண்டும். அப்போது தான் வாழ முடியும். ஒன்று கூடினாலோ குறைந்தாலோ உயிர் இருக்காது. இப்படி முரண்கள் தான் வாழ்க்கையின் இயக்கத்துக்கு காரணமாகின்றன என்பது  முரணியக்க சிந்தனை. இடதுசாரிகள் கார்ப்பரேட்-பாட்டாளி போராட்டமாக வாழ்க்கையை பார்ப்பது போலத் தான் இது. ஷிஷெக் இதே போல் மிகப்பெரிய அன்பு வெறுப்பை சரிசமமாய் கொண்டது என்பார். அதாவது ஒரு பெண்ணை ஆவேசமாய் முத்தமிடும் போது அடிமனதில் அவளது கழுத்தை நெரிக்கும் உக்கிரமும் தோன்றுகிறது. கொலை விருப்பம் இல்லாமல் காமம் இல்லை. முயக்கம் இல்லை. 
அடிப்படையில் இவர்கள் எல்லாம் ஒரே மாதிரி யோசிக்கிறவர்கள். அதாவது நிலைப்பாடுகளில் மாறுபட்டாலும் ஜெயமோகன் மற்றும் இடதுசாரிகளின் ஆயுதமும், அடவு முறையும் ஒன்று தான். ஒரே தர்க்கத்தை தான் இருவேறு விதமாய் பயன்படுத்துகிறார்கள். அதாவது ஹெகலின் தாக்கத்தில் தான் மார்க்ஸியம் உருவானது. அதன் குட்டிக் கிளையாக ஜெயமோகனிஸமும் தோன்றியது”

கருத்துகள்

Chitra இவ்வாறு கூறியுள்ளார்…
face book சுத்த வேஸ்ட்ன்னு சொன்னவரு, இப்ப நடக்கப்போற அவரோட விழாவுக்காக,
அதுல புது கணக்கு ஆரம்பிச்சுருக்காரு. எல்லாம் மகாபாரதத்தின் மகிமை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.