Skip to main content

இந்தியாவும் பாகிஸ்தானும்: இருவேறு அணுகுமுறைகள்



இம்முறை பாகிஸ்தான் அணியில் அஜ்மல் இல்லை. நான்கு இளம் வீச்சாளர்களுடன் இறங்கி ஆஸ்திரேலியாவை முதல் டெஸ்டில் 221 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. என்னை மிகவும் கவர்ந்த விசயங்கள் இரண்டு.


ஒன்று, அவர்கள் இறுக்கமாக ஒழுக்கமாக பந்து வீசி நெருக்கடியை உருவாக்குவது. மட்டையாளர்கள் இந்த அழுத்தம் தாளாமலே அவுட் ஆகி விடுவார்கள். அது போல் சாதாரணமாய் ஒரு லைன் மற்றும் லெங்தில் வீசினால் கூட, பந்து ஒன்றும் பெரிதாய் செய்யாமல் இருந்தாலும் கூட அவர்களின் பந்து வீச்சாளர்களின் உடல் மொழி ஆக்ரோசமாக ஆவேசமாக உள்ளது. மொத்த களத்தடுப்பாளர்களும் பத்து வாடகை கொலையாளிகள் பொருட்களுடன் சூழ்வது போல் மட்டையாளனை சூழ்வார்கள். இது உருவாக்கும் ஒரு அச்சமூட்டும் சூழல் முக்கியமானது. இதுவே இந்தியா என்றால் களத்தடுப்பாளர்கள் ஏதோ திருவிழாவுக்கு போன குழந்தைகள் போல் நின்று கொண்டிருப்பார்கள். ஓஜ்ஹா முதலிரவு பெண் போல் அலுங்காமல் வந்து செல்லமாக வீசுவார். விட்டால் மட்டையாளனை அணைத்து முத்தமிடுவாரோ என அச்சமாக இருக்கும். அப்படி ஒரு இட்லி வடை அணுகுமுறை நம் வீச்சாளர்களுக்கு.

இன்னொரு வித்தியாசம் லைன். பாகிஸ்தான் வீச்சாளர்கள், அனுபவமற்ற புது சுழல் வீச்சாளர்களான பாபர், யாசிர் ஷாஹ் கூட மிகச் சரியாக ஆப் ஸ்டம்பில் வீசுகிறார்கள். ஓஜஹா போல் வைடாக அல்ல. மேலும் ஒரே இடத்தில் பந்தை திரும்ப திரும்ப விழ வைக்கும் கூர்மை வியப்பேற்படுத்துகிறது. நம் ஓஜ்ஹா என்றால் பாபர் வீசுவதில் இருந்து நான்கு அங்குலமாவது வைடாக தான் வீசுவார். இது ஒரு எதிர்மறை மனநிலையில் இருந்து வருகிறது. போன முறை ஆஸ்திரேலிய பயணத்தில் அஷ்வின் நன்றாக வீசினார் என்றாலும் அவரை நம்ப முடியாது. T20யும் ஒருநாள் ஆட்டங்களும் அவரை சீர்குலைத்து விட்டன. அவர் பந்து வீசும் போது கட்டாயமாக இரண்டு பந்துகளாவது ஆப் ஸ்டம்புக்கு வெளியே குறைநீளத்தில் விழும். இன்னும் ரெண்டு லெக் ஸ்டெம்புக்கு வெளியே போகும். இப்படி ஏதோ ரெண்டு வார நாய்க்குட்டி விளையாடுவது போல் அவரது பந்துகள் விழும். மிஷ்ரா கூட கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறார். ஆனால் பாகிஸ்தானின் பகுதிநேர சுழலரான ஹபீஸ் அஷ்வினை விட நூறு மடங்கு அதிக கூர்மையுடன் கட்டுப்பாடுடன் வீசுகிறார். இந்த கட்டுப்பாடும் அவேசமான அணுகுமுறையும் தான் பாகிஸ்தானின் பலம். இந்த டெஸ்டில் ஆடுதளம் அவ்வளவு தட்டையானது. சுழலவே இல்லை. அதில் ஆஸ்திரேலியாவை முன்னூறுக்கு கீழ் சுருட்டியது ஒரு சாதனை தான். இந்தியாவுக்கு எதிரே என்றால் ஆஸ்திரேலியா நிச்சயம் 450 மேல் எடுத்திருக்கும். அதனால் தான் எந்த அணியை தோற்கடிக்கவும் நமக்கு அதிகமாய் சுழலும் ரெடிமேட் ஆடுதளங்கள் தேவைப்படுகின்றன.


இறுதியாய் என்னைக் கவர்ந்த அந்த இரண்டாவது விசயம் ஆட்டம் முடிந்ததும் பரிசளிப்பின் போது அணித்தலைவர் மிஸ்பா பேசியது. அவர் பிரதானமாய் தன் பந்து வீச்சாளர்களைத் தான் புகழ்ந்தார். இத்தனைக்கும் யூனிஸ்கான் இரு சதங்களும், ஷேஸாத் பிரமாதமாய் ஆடி ஒரு சதமும் அடித்திருந்தனர். இதுவே தோனி என்றால் ஆட்டத்தை வென்றதற்கு மட்டையாளர்கள் தாம் காரணம் என மீண்டும் மீண்டும் புகழ்ந்திருப்பார். எனக்கு பிரவீன் குமாரின் பேட்டி ஒன்றில் அவர் சொன்னது நினைவு வந்தது. உத்தர பிரதேச அணியில் குமார் ஆடும் போது அங்கே வேகப் பந்து வீச்சாளர்கள் ஒரு குழுவாக சேர்ந்து சதா பந்து வீச்சு பற்றி பேசுவது, பயிற்சி செய்வது என இருப்பார்கள். அவர் அங்கு நிறைய கற்றுக் கொள்கிறார். ஆனால் இந்திய அணிக்கு போன பின் அங்கு யாரும் பந்து வீச்சு பற்றி விவாதிப்பதோ உற்சாகமாய் தகவல் பரிமாறுவதோ இல்லை. முழுக்க சதா மட்டையாட்டம் பற்றின விவாதம் தான். அந்த சூழலில் பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஊக்கமும் அங்கு இல்லை என்றார் பிரவீன் குமார். எந்த நல்ல வீச்சாளர்கள் நம் அணிக்கு வந்தாலும் உடனே காயடிக்கப்படுவதன் ரகசியம் இது தான்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...