முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரம்பலூர் கூட்டமும் பின்நவீனத்துவமும்





பெரம்பலூர் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக மலையில் எழுத்தாளர்களை அழைத்து பேச வைத்தார்கள். ஒவொரு நாளும் மூன்று எழுத்தாளர்கள் அல்லது பேச்சாளர்கள். எட்டாம் தேதி நான் பேசினேன்.
நிகழ்ச்சியை அற்புதமாக ஒருங்கிணைத்திருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியின் எழுத்தாளர் சந்திப்பு அல்லது கூட்டங்களுக்கு வருவதை விட ஐந்து மடங்கு கூட்டம். இரவு பத்து மணிவரை கூட்டம் கலையாமல் ஆர்வமாக கேட்டது. பெரம்பலூர் போன்ற ஒரு சின்ன ஊரில் இது வியத்தகு சாதனை. ஒவ்வொரு பஞ்சாயத்தும் நிதி சேகரித்து ஆயிரக்கணக்கான நூல்களை வாங்கி நூலகத்துக்கு அளித்திருக்கிறார்கள். விற்பனை குறைவான ஸ்டால்களில் இருந்து அதிகமாக வாங்கும்படி ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்ள அதன்மூலம் அனைவருக்கும் நியாயமான விற்பனை அமையும்படி பார்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக சென்னையை விட ஸ்டால்களில் விற்பனை திருப்திகரமாய் உள்ளதாய் கூறினார்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ் அகமதின் இலக்கிய ஆர்வமும் ஒருங்கிணைப்பு திறனும் தான் இச்சிறப்புக்கு முக்கிய காரணம். அவருடன் இணைந்து நன்றாக பணியாற்றும் அரசு ஊழியர்களையும் பாராட்டியாக வேண்டும்.
தரேஸ் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ஆனாலும் அவருக்கு முக்கியமான தமிழ் எழுத்தாளர்களையும் நூல்களையும் தெரிந்திருக்கிறது. நான் முராகாமி பற்றி பேசப் போவதாக அறிந்ததும் தரேஸ் என்னிடம் சொன்னார் “இவங்களுக்கு முராகாமி எல்லாம் தெரியாது. அதனால கொஞ்சம் எளிமையா சொல்லுங்க”. மேலும் என்னுடன் பாரதி கிருஷ்ண குமார் பேச இருந்தார். அவர் பேசுவது என்றால் ரஜினி பட ரிலீஸ் போல. வேறு யாரும் பக்கத்தில் நிற்க முடியாது. நான் பேசுவதற்காக நிறைய குறிப்புகளை எழுதி என் டெப்லெட்டில் வைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக என்னை முதலில் பேச அழைத்தார்கள். என்னால் உடனே குறிப்புகளை திறக்க முடியவில்லை. பத்து நிமிடங்கள் தேடினதில் ஒரு கோப்பு மட்டுமே கிடைத்தது. சரி இருப்பதை வைத்து பேசுவோம் என முழுக்க என் நினைவுகளில் இருந்தே பேசினேன். பேசி முடித்ததும் தரேஸ் சைகையால் என்னை பாராட்டினார். மேடையில் இருந்த சு.வெங்கடேசன் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டியதுடன் மேடையிலும் என் பேச்சை வெகுவாக பாராட்டினார். பாரதி கிருஷ்ணகுமார் என்னிடம் வந்து “மிகச்சிறந்த பேச்சு. நீங்கள் சொன்ன சில விசயங்கள் என்னை ரொம்ப தொந்தரவு செய்து விட்டன” என்றார். எவ்வளவு பெரிய பேச்சாளர்! என்னையெல்லாம் பாராட்டுகிறார் என்றால் அவரது தாளார மனதை, திறந்த மனதை புரிந்து கொள்ளலாம். மேடையில் அவர் பேசும் போதும் என் உரையை பலமுறை பாராட்டினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் என்னுடைய வாசகர்கள் சிலரை சந்தித்தேன். அவர்களும் என் பேச்சை பாராட்டினர். நான் நிஜமாகவே நன்றாக பேசி விட்டேனா என குழம்பினேன். எனக்குத் தான் பேசவே வராதே? ஒரு தம்பதி வந்து என் “ரசிகன்” நாவலுக்கு கையெழுத்து வாங்கிப் போயினர். இப்படி அக்கூட்டம் திருப்திகரமாக அமைந்தது. சென்னை கண்காட்சியில் உள்ள ஒரு அந்நியத்தன்மை பெரம்பலூரில் இல்லை என்ப்து குறிப்பிடத் தக்க அம்சம்.
மாவட்ட ஆட்சியர் ரசனைக்காரர். கூர்மையான நகைச்சுவை உணர்வு அவருக்கு. அவர் எனக்கு விடைகொடுக்கும் போது சொன்னார்: “முராகாமி பின்நவீன எழுத்தாளரோ இல்லையோ நீங்கள் பெரம்பலூர் மாதிரி ஒரு ஊருக்கு வந்து முராகாமி பற்றி பேசினது நிச்சயம் பின்நவீனத்துவம் தான்”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...