முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரம்பலூர் கூட்டமும் பின்நவீனத்துவமும்





பெரம்பலூர் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக மலையில் எழுத்தாளர்களை அழைத்து பேச வைத்தார்கள். ஒவொரு நாளும் மூன்று எழுத்தாளர்கள் அல்லது பேச்சாளர்கள். எட்டாம் தேதி நான் பேசினேன்.
நிகழ்ச்சியை அற்புதமாக ஒருங்கிணைத்திருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியின் எழுத்தாளர் சந்திப்பு அல்லது கூட்டங்களுக்கு வருவதை விட ஐந்து மடங்கு கூட்டம். இரவு பத்து மணிவரை கூட்டம் கலையாமல் ஆர்வமாக கேட்டது. பெரம்பலூர் போன்ற ஒரு சின்ன ஊரில் இது வியத்தகு சாதனை. ஒவ்வொரு பஞ்சாயத்தும் நிதி சேகரித்து ஆயிரக்கணக்கான நூல்களை வாங்கி நூலகத்துக்கு அளித்திருக்கிறார்கள். விற்பனை குறைவான ஸ்டால்களில் இருந்து அதிகமாக வாங்கும்படி ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்ள அதன்மூலம் அனைவருக்கும் நியாயமான விற்பனை அமையும்படி பார்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக சென்னையை விட ஸ்டால்களில் விற்பனை திருப்திகரமாய் உள்ளதாய் கூறினார்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ் அகமதின் இலக்கிய ஆர்வமும் ஒருங்கிணைப்பு திறனும் தான் இச்சிறப்புக்கு முக்கிய காரணம். அவருடன் இணைந்து நன்றாக பணியாற்றும் அரசு ஊழியர்களையும் பாராட்டியாக வேண்டும்.
தரேஸ் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ஆனாலும் அவருக்கு முக்கியமான தமிழ் எழுத்தாளர்களையும் நூல்களையும் தெரிந்திருக்கிறது. நான் முராகாமி பற்றி பேசப் போவதாக அறிந்ததும் தரேஸ் என்னிடம் சொன்னார் “இவங்களுக்கு முராகாமி எல்லாம் தெரியாது. அதனால கொஞ்சம் எளிமையா சொல்லுங்க”. மேலும் என்னுடன் பாரதி கிருஷ்ண குமார் பேச இருந்தார். அவர் பேசுவது என்றால் ரஜினி பட ரிலீஸ் போல. வேறு யாரும் பக்கத்தில் நிற்க முடியாது. நான் பேசுவதற்காக நிறைய குறிப்புகளை எழுதி என் டெப்லெட்டில் வைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக என்னை முதலில் பேச அழைத்தார்கள். என்னால் உடனே குறிப்புகளை திறக்க முடியவில்லை. பத்து நிமிடங்கள் தேடினதில் ஒரு கோப்பு மட்டுமே கிடைத்தது. சரி இருப்பதை வைத்து பேசுவோம் என முழுக்க என் நினைவுகளில் இருந்தே பேசினேன். பேசி முடித்ததும் தரேஸ் சைகையால் என்னை பாராட்டினார். மேடையில் இருந்த சு.வெங்கடேசன் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டியதுடன் மேடையிலும் என் பேச்சை வெகுவாக பாராட்டினார். பாரதி கிருஷ்ணகுமார் என்னிடம் வந்து “மிகச்சிறந்த பேச்சு. நீங்கள் சொன்ன சில விசயங்கள் என்னை ரொம்ப தொந்தரவு செய்து விட்டன” என்றார். எவ்வளவு பெரிய பேச்சாளர்! என்னையெல்லாம் பாராட்டுகிறார் என்றால் அவரது தாளார மனதை, திறந்த மனதை புரிந்து கொள்ளலாம். மேடையில் அவர் பேசும் போதும் என் உரையை பலமுறை பாராட்டினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் என்னுடைய வாசகர்கள் சிலரை சந்தித்தேன். அவர்களும் என் பேச்சை பாராட்டினர். நான் நிஜமாகவே நன்றாக பேசி விட்டேனா என குழம்பினேன். எனக்குத் தான் பேசவே வராதே? ஒரு தம்பதி வந்து என் “ரசிகன்” நாவலுக்கு கையெழுத்து வாங்கிப் போயினர். இப்படி அக்கூட்டம் திருப்திகரமாக அமைந்தது. சென்னை கண்காட்சியில் உள்ள ஒரு அந்நியத்தன்மை பெரம்பலூரில் இல்லை என்ப்து குறிப்பிடத் தக்க அம்சம்.
மாவட்ட ஆட்சியர் ரசனைக்காரர். கூர்மையான நகைச்சுவை உணர்வு அவருக்கு. அவர் எனக்கு விடைகொடுக்கும் போது சொன்னார்: “முராகாமி பின்நவீன எழுத்தாளரோ இல்லையோ நீங்கள் பெரம்பலூர் மாதிரி ஒரு ஊருக்கு வந்து முராகாமி பற்றி பேசினது நிச்சயம் பின்நவீனத்துவம் தான்”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...