Skip to main content

பெரம்பலூர் கூட்டமும் பின்நவீனத்துவமும்





பெரம்பலூர் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக மலையில் எழுத்தாளர்களை அழைத்து பேச வைத்தார்கள். ஒவொரு நாளும் மூன்று எழுத்தாளர்கள் அல்லது பேச்சாளர்கள். எட்டாம் தேதி நான் பேசினேன்.
நிகழ்ச்சியை அற்புதமாக ஒருங்கிணைத்திருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியின் எழுத்தாளர் சந்திப்பு அல்லது கூட்டங்களுக்கு வருவதை விட ஐந்து மடங்கு கூட்டம். இரவு பத்து மணிவரை கூட்டம் கலையாமல் ஆர்வமாக கேட்டது. பெரம்பலூர் போன்ற ஒரு சின்ன ஊரில் இது வியத்தகு சாதனை. ஒவ்வொரு பஞ்சாயத்தும் நிதி சேகரித்து ஆயிரக்கணக்கான நூல்களை வாங்கி நூலகத்துக்கு அளித்திருக்கிறார்கள். விற்பனை குறைவான ஸ்டால்களில் இருந்து அதிகமாக வாங்கும்படி ஒருங்கிணைப்பாளர்கள் அவர்களிடம் கேட்டுக் கொள்ள அதன்மூலம் அனைவருக்கும் நியாயமான விற்பனை அமையும்படி பார்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக சென்னையை விட ஸ்டால்களில் விற்பனை திருப்திகரமாய் உள்ளதாய் கூறினார்கள். பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தரேஸ் அகமதின் இலக்கிய ஆர்வமும் ஒருங்கிணைப்பு திறனும் தான் இச்சிறப்புக்கு முக்கிய காரணம். அவருடன் இணைந்து நன்றாக பணியாற்றும் அரசு ஊழியர்களையும் பாராட்டியாக வேண்டும்.
தரேஸ் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ஆனாலும் அவருக்கு முக்கியமான தமிழ் எழுத்தாளர்களையும் நூல்களையும் தெரிந்திருக்கிறது. நான் முராகாமி பற்றி பேசப் போவதாக அறிந்ததும் தரேஸ் என்னிடம் சொன்னார் “இவங்களுக்கு முராகாமி எல்லாம் தெரியாது. அதனால கொஞ்சம் எளிமையா சொல்லுங்க”. மேலும் என்னுடன் பாரதி கிருஷ்ண குமார் பேச இருந்தார். அவர் பேசுவது என்றால் ரஜினி பட ரிலீஸ் போல. வேறு யாரும் பக்கத்தில் நிற்க முடியாது. நான் பேசுவதற்காக நிறைய குறிப்புகளை எழுதி என் டெப்லெட்டில் வைத்திருந்தேன். எதிர்பாராத விதமாக என்னை முதலில் பேச அழைத்தார்கள். என்னால் உடனே குறிப்புகளை திறக்க முடியவில்லை. பத்து நிமிடங்கள் தேடினதில் ஒரு கோப்பு மட்டுமே கிடைத்தது. சரி இருப்பதை வைத்து பேசுவோம் என முழுக்க என் நினைவுகளில் இருந்தே பேசினேன். பேசி முடித்ததும் தரேஸ் சைகையால் என்னை பாராட்டினார். மேடையில் இருந்த சு.வெங்கடேசன் என்னை தனிப்பட்ட முறையில் பாராட்டியதுடன் மேடையிலும் என் பேச்சை வெகுவாக பாராட்டினார். பாரதி கிருஷ்ணகுமார் என்னிடம் வந்து “மிகச்சிறந்த பேச்சு. நீங்கள் சொன்ன சில விசயங்கள் என்னை ரொம்ப தொந்தரவு செய்து விட்டன” என்றார். எவ்வளவு பெரிய பேச்சாளர்! என்னையெல்லாம் பாராட்டுகிறார் என்றால் அவரது தாளார மனதை, திறந்த மனதை புரிந்து கொள்ளலாம். மேடையில் அவர் பேசும் போதும் என் உரையை பலமுறை பாராட்டினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் என்னுடைய வாசகர்கள் சிலரை சந்தித்தேன். அவர்களும் என் பேச்சை பாராட்டினர். நான் நிஜமாகவே நன்றாக பேசி விட்டேனா என குழம்பினேன். எனக்குத் தான் பேசவே வராதே? ஒரு தம்பதி வந்து என் “ரசிகன்” நாவலுக்கு கையெழுத்து வாங்கிப் போயினர். இப்படி அக்கூட்டம் திருப்திகரமாக அமைந்தது. சென்னை கண்காட்சியில் உள்ள ஒரு அந்நியத்தன்மை பெரம்பலூரில் இல்லை என்ப்து குறிப்பிடத் தக்க அம்சம்.
மாவட்ட ஆட்சியர் ரசனைக்காரர். கூர்மையான நகைச்சுவை உணர்வு அவருக்கு. அவர் எனக்கு விடைகொடுக்கும் போது சொன்னார்: “முராகாமி பின்நவீன எழுத்தாளரோ இல்லையோ நீங்கள் பெரம்பலூர் மாதிரி ஒரு ஊருக்கு வந்து முராகாமி பற்றி பேசினது நிச்சயம் பின்நவீனத்துவம் தான்”

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...