முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாலி சர்ச்சையும் மிகையும்

Image result for puthiya thalaimurai attack

இன்றைய ஆங்கில இந்துவின் நடுபக்கத்தில் வித்யா வெங்கட் புதிய தலைமுறையின் நிகழ்ச்சி சம்மந்தமான தாலி சர்ச்சை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் வைக்கிற விவாதம் சுவாரஸ்யமானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பல நகர்வாழ் பெண்கள் தாம் தாலியை எப்போதும் அணிவதில்லை என்கிறார்கள். குறிப்பாக அலுவலகம் போகும் போது. குடும்பமும் இதற்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கிறது. நிகழ்ச்சியில் ஒரு பெண் தாலி ஒரு நாயின் சங்கிலி போல் தன்னை பிணைத்துள்ளதாக கூறுகிறார். இது அனைத்து பெண்களுக்கும் பொருந்துகிற செய்தியும் அல்ல.

 பெண்களின் கல்வி, வாழ்க்கைத்தரம், குடும்பத்தின் மரபு சார்ந்த நிலைப்பாடு, குடும்பத்துக்குள் பெண்ணுக்குள்ள அதிகாரம் பொறுத்து தாலி ஒரு விலங்காகவோ சமசரப் பொருளாகவோ ஆகிறது. நன்கு படித்த, வேலை பார்க்கிற, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள் இன்று தாலியை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை தான். அதாவது குடும்ப நிகழ்ச்சிகளில் அணிகிறார்கள். அல்லது ஆடைக்கு பொருத்தமாக இருந்தால் அணிகிறார்கள். சிலர் அலுவலகத்துக்கு அணிவதில்லை. சிலர் அலுவலகத்தில் அணிவார்கள், ஆனால் வீட்டில் அணிய மாட்டார்கள். கிராமத்திலும் படித்து வேலைக்கு போகிற பெண்கள் வெளியே செல்லும் போது முன்பு போல தாலியை வெளியே தெரியும் படி முந்தானைக்கு வெளியே போட்டுக் கொண்டு போவதில்லை.
ஆக ஒரு பக்கம் தாலியினால் பெண்கள் அடிமைப்படுகிறார்கள் என்பதும் முழுக்க உண்மையல்ல. காலமும் நிலைமையும் மாற நமது மரபு சடங்குகளும் அதற்கேற்றபடி எப்படி தகவமைகின்றன என்பது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பார்வை. எதுவும் நீண்ட காலத்துக்கு புனிதமாக இருப்பதில்லை. பொருளாதாரம், சமகால வாழ்க்கைப் பார்வை காரணமாய் நாம் நம்மையே அறியாமல் நம் மரபை சற்றே மாற்றியமைக்கிறோம்; எந்த நம்பிக்கைகளையெல்லாம் பாதுகாக்கலாம், எவையெல்லாம் பெயருக்கு தக்க வைக்கலாம், கைவிடலாம் என நம் சமூக மனம் முடிவெடுக்கிறது. நாம் நுணுக்கமான வகையில் மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாமே பெரும்பாலும் உணர்வதில்லை. இது போன்ற சர்ச்சைகள் தாம் நாம் அடைகிற மாற்றங்களை காட்டுகின்றன.


வித்யாவின் கட்டுரையில் இன்னொரு பக்கம் தாலி செண்டிமண்ட் பற்றி நமக்குள்ள மனோபாவமும் போலி தான் என வருகிறது. சினிமா தான் இந்த செண்டிமெண்டுக்கான ஆதாரம் என்கிறார். இது முழுக்க உண்மையில்லை தான். சமூகத்தில் இன்றும் தாலி செண்டிமெண்ட் உள்ளது. அப்படிப்பட்ட பெண்கள் நகரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைக்கு போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஒரு கலவை. இருவகையான ஆட்களும் இருக்கிறார்கள். தாலியை அடிமை சங்கிலி என்பதும், அதை கேள்வி கேட்டால் இந்து அமைப்பினர் கொந்தளிப்பதும் இரண்டுமே மிகை தான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...