முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாலி சர்ச்சையும் மிகையும்

Image result for puthiya thalaimurai attack

இன்றைய ஆங்கில இந்துவின் நடுபக்கத்தில் வித்யா வெங்கட் புதிய தலைமுறையின் நிகழ்ச்சி சம்மந்தமான தாலி சர்ச்சை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் வைக்கிற விவாதம் சுவாரஸ்யமானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பல நகர்வாழ் பெண்கள் தாம் தாலியை எப்போதும் அணிவதில்லை என்கிறார்கள். குறிப்பாக அலுவலகம் போகும் போது. குடும்பமும் இதற்கு ஏற்றபடி வளைந்து கொடுக்கிறது. நிகழ்ச்சியில் ஒரு பெண் தாலி ஒரு நாயின் சங்கிலி போல் தன்னை பிணைத்துள்ளதாக கூறுகிறார். இது அனைத்து பெண்களுக்கும் பொருந்துகிற செய்தியும் அல்ல.

 பெண்களின் கல்வி, வாழ்க்கைத்தரம், குடும்பத்தின் மரபு சார்ந்த நிலைப்பாடு, குடும்பத்துக்குள் பெண்ணுக்குள்ள அதிகாரம் பொறுத்து தாலி ஒரு விலங்காகவோ சமசரப் பொருளாகவோ ஆகிறது. நன்கு படித்த, வேலை பார்க்கிற, பொருளாதார சுதந்திரம் கொண்ட பெண்கள் இன்று தாலியை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மை தான். அதாவது குடும்ப நிகழ்ச்சிகளில் அணிகிறார்கள். அல்லது ஆடைக்கு பொருத்தமாக இருந்தால் அணிகிறார்கள். சிலர் அலுவலகத்துக்கு அணிவதில்லை. சிலர் அலுவலகத்தில் அணிவார்கள், ஆனால் வீட்டில் அணிய மாட்டார்கள். கிராமத்திலும் படித்து வேலைக்கு போகிற பெண்கள் வெளியே செல்லும் போது முன்பு போல தாலியை வெளியே தெரியும் படி முந்தானைக்கு வெளியே போட்டுக் கொண்டு போவதில்லை.
ஆக ஒரு பக்கம் தாலியினால் பெண்கள் அடிமைப்படுகிறார்கள் என்பதும் முழுக்க உண்மையல்ல. காலமும் நிலைமையும் மாற நமது மரபு சடங்குகளும் அதற்கேற்றபடி எப்படி தகவமைகின்றன என்பது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு பார்வை. எதுவும் நீண்ட காலத்துக்கு புனிதமாக இருப்பதில்லை. பொருளாதாரம், சமகால வாழ்க்கைப் பார்வை காரணமாய் நாம் நம்மையே அறியாமல் நம் மரபை சற்றே மாற்றியமைக்கிறோம்; எந்த நம்பிக்கைகளையெல்லாம் பாதுகாக்கலாம், எவையெல்லாம் பெயருக்கு தக்க வைக்கலாம், கைவிடலாம் என நம் சமூக மனம் முடிவெடுக்கிறது. நாம் நுணுக்கமான வகையில் மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை நாமே பெரும்பாலும் உணர்வதில்லை. இது போன்ற சர்ச்சைகள் தாம் நாம் அடைகிற மாற்றங்களை காட்டுகின்றன.


வித்யாவின் கட்டுரையில் இன்னொரு பக்கம் தாலி செண்டிமண்ட் பற்றி நமக்குள்ள மனோபாவமும் போலி தான் என வருகிறது. சினிமா தான் இந்த செண்டிமெண்டுக்கான ஆதாரம் என்கிறார். இது முழுக்க உண்மையில்லை தான். சமூகத்தில் இன்றும் தாலி செண்டிமெண்ட் உள்ளது. அப்படிப்பட்ட பெண்கள் நகரத்தில் இருக்கிறார்கள். நன்கு படித்து வேலைக்கு போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஒரு கலவை. இருவகையான ஆட்களும் இருக்கிறார்கள். தாலியை அடிமை சங்கிலி என்பதும், அதை கேள்வி கேட்டால் இந்து அமைப்பினர் கொந்தளிப்பதும் இரண்டுமே மிகை தான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...