முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உட்கார்ந்து விளையாடு பாப்பா!

1.22 பில்லியன் மக்கள் உள்ள ஒரு நாட்டில் ஏன் ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளி வருவதற்காக வீரர்கள் இல்லாமல் போயிற்று என்பது நாம் அடிக்கடி வீராவேசமாக கேட்கும் கேள்வி. ஆனால் நமக்கு ஒரு விளையாட்டு கலாச்சாரம் ஏன் இல்லை என நாம் யோசிக்க தலைப்படுவதில்லை. ஒரு ஓய்வு நாளில் நாம் கடற்கரையிலோ பூங்காவிலோ நண்பர்களுடனோ குடும்பமாகவோ சென்று விளையாடுவதுண்டா?

 ஆனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியுசிலாந்தில் அத்தகைய கலாச்சாரம் உள்ளது. கோவா, கோவளம் கடற்கரைகளில் வரும் வெள்ளைக்காரர்கள் தம் சிறுகுழந்தைகளைக் கூட அலைச்சறுக்கு பலகையில் ஏற்றி விட்டு விளையாட பழக்குகிறார்கள்.
நம் சீதோஷ்ண நிலை காரணமாகவோ அரிசி, சைவ உணவு காரணமாகவோ உடலை வருத்தி சுறுசுறுப்பாய் இருப்பதில் ஆர்வமற்றவர்களாக இருக்கிறோம். இன்று நகரங்களில் மட்டுமல்ல கணிசமான கிராமங்களில் கூட நம்முடைய ஒரு முழுநாள் என்பது உடலை வருத்தாமல், வெயிலில் வாடாமல் கழிகிறது. அவ்வாறு இருப்பது தான் மேற்தட்டினரின் நிலை என நாம் உள்ளார நம்புகிறோம். நம் பிள்ளைகள் புழுதியில் விளையாடினால், வியர்த்து களைத்து வந்தால் அவர்களின் அந்தஸ்து தாழ்வதாக நம்புகிறோம். நம்முடைய விளையாட்டு அணுகுமுறைக்கு பின்னால் ஒரு நுணுக்கமான சாதிய மனப்பான்மை உள்ளது.
 நீண்ட தூரம் நடப்பது, விளையாடுவது, வீட்டு வேலைகளை தாமே செய்வது, மலை ஏறுவது போன்ற உடலுழைப்பு சார்ந்த விசயங்கள் ஐரோப்பாவில் உயர்வர்க்கத்தினர் இடையிலும் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் உடலை வருத்துவது, வியர்ப்பது என்பது தாழ்ந்த சாதியினரின் அடையாளமாக உள்ளது. அதனாலே கணிசமான இந்தியர்கள் அதை தவிர்க்க விரும்புகிறார்கள். விளைவாக விளையாட்டு என்பதே வாழ்வில் இருந்து கிட்டத்தட்ட காணாமல் போய் விட்டது. இந்தியாவின் ஒரே பிரபல விளையாட்டான கிரிக்கெட்டிலும் கூட பந்து வீச்சிலும் நாம் காலகாலமாக மிக பலவீனமாக இருப்பது இந்த தீட்டு மனோபாவத்தால் தான். யாரோ ஒருவர் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து பந்தை வீச நின்ற நிலையில் அதை ஸ்டைலாக அடிப்பது நமக்கு பிடித்திருக்கிறது. கிரிக்கெட் ஆடுபவர்களில் இங்கு கணிசமானோர் மட்டையாளர்களாகவே விரும்புகிறார்கள். பந்து வீச்சாளனை நாம் நம் வீடுகளை சுத்தமாகி, நம் சாக்கடைகளை அள்ளும் கூலிக்காரர்களாக பார்க்கிறோம். 

இத்தனை கோடி பேரில் ஒரு சின்ன சதவீதம் தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள். அதிலும் மிக மிக சிறுபான்மையினர் தான் பிற விளையாட்டுகளை முயன்று பார்க்கிறார்கள். நமக்குத் தேவை விளையாட்டு அமைப்புகள், உள்கட்டமைப்புகளோ மட்டுமல்ல. மூளையுழைப்புக்கு நிகராக உடலுழைப்பையும் கருதும் ஒரு அணுகுமுறை மாற்றம் தான்.

நம்முடைய பல வீரவிளையாட்டுகள் காணாமல் போனது பற்றி யோசித்ததுண்டா? மற்போர், சிலம்பம், தொடுவர்மம், நாட்டுச்சண்டைக்கலை ஆகியவற்றில் இன்றும் பயில்பவர்கள் மிகச் சிலர் தான். ஆனால் நாம் இங்கு மிக பரவலாக கற்கும் கராத்தே இங்கிருந்து சீனா சென்று குங் பூவாகி, அங்கிருந்து ஜப்பானுக்கு உலகப்போரின் போது பயணித்து புது வடிவம் பெற்ற ஒரு பாரம்பரியக் கலை வடிவமே. சீனர்களால் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைய ஒரு கலை வடிவை தக்க வைத்து உலகம் பூரா பரப்ப முடிகையில் நம்மால் நம் சிலம்பம், அடிமுறைகளை ஏன் உள்ளூரில் கூட பாதுகாக்க இயலவில்லை? 

சீனாவில் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் குங் பூ சிறுவயதில் இருந்து பயில்வது ஒரு முக்கியமான ஒழுக்க கல்வியாக நினைத்து அதை ஊக்குவித்தனர் என்கிறார் புரூஸ் லீ. அதனால் அங்கு காலை வேளையில் பொதுவிடங்களில் எங்கு பார்த்தாலும் யாராவது சிறுகுழுவாக நின்று சண்டைக்கலை பயின்று கொண்டிருப்பார்கள் என்கிறார் அவர். இதனால் அக்கலை மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிப் போயிருந்தது. ஆனால் இந்தியாவில் பொதுவிடங்களில் உட்கார்ந்து வம்பு பேசுவோம். நமக்குத் தெரிந்த ஒரே உடற்பயிற்சி நாவை போட்டு அடிப்பது தான்.

நம்முடைய பிள்ளைகளை அந்தஸ்தை கருதி கர்நாடக சங்கீதம் கற்க அனுப்புகிறோம். ஆனால் அதை தக்க வைப்பதில்லை. சில உயர்தட்டு பள்ளிகளில் சிறுவயதில் இருந்தே குதிரையேற்றம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் அக்குழந்தை அதை சென்னையில் எங்கே விளையாடப் போகிறது என எனக்கு புரியவில்லை. இப்படி நாம் விளையாட்டை பழக்கினாலும் நிதர்சனத்துக்கு பொருந்தாத மேற்தட்டு மோஸ்தர்களை தான் திணிக்க நினைக்கிறோம்.

விளையாட்டு என்பது சர்வதேச அரங்கில் பதக்கம், கோப்பைகள் வெல்வதற்காக மட்டுமல்ல. அதன் முக்கிய நோக்கம் வாழ்வில் ஒரு சமநிலை அளிப்பது. விளையாட்டு பயிற்சி ஒரு இயல்பான உடல் சார்ந்த தன்னம்பிக்கையை அளிக்கிறது. மனதை நிதானமாக்குகிறது. மனம் நிதானமற்று போகும் போது தான் குடி போதை, மிதமிஞ்சிய கேளிக்கைகளை நோக்கி செல்கிறோம். இன்றைய ஒரு தலைமுறை முழுக்க சுய அழிவு கலாசாரம் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்கு, குடித்தும், போதை மருந்துகளில் சிக்கியும், பாலியல் குற்றங்களில் மாட்டியும் அழிவதற்கு இந்த சமநிலையின்மை தான் காரணம். மனம் ஒரு காற்றாடி என்றால் அதன் நூல் நம் உடல். உடல் அறுந்தால் மனதை பிடிக்க முடியாது.
நன்றி: கல்கி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...