முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பையை வெல்ல நியுசிலாந்த் என்ன செய்ய வேண்டும்?

.

1.    எதிரணியின் பலவீனத்தை அறிந்து தாக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனம் என்ன? துவக்க மட்டையாளர்களும் 4ஆம் எண்ணில் வரும் கிளார்க்கும் நல்ல ஆட்டநிலையில் இல்லை. அதன் பிறகு பந்தை தூக்கி அடிக்கும் ஆல்ரவுண்டர்கள் தாம் வருகிறார்கள். ஆஸ்திரேலிய மட்டையாட்டத்தின் அச்சு ஸ்மித் தான். பிறரை முதல் பத்து அல்லது இருபது ஓவர்களுக்குள் வீழ்த்தி விட்டு மேக்ஸ்வெல்லை இருபத்தைந்து ஓவருக்குள் ஆட வைத்து விட்டால் ஆஸ்திரேலியாவை கடும் நெருக்கடிக்குள் தள்ளலாம். சுருக்கமாக சவுதி மற்றும் போல்ட் சேர்ந்து நான்கு விக்கெட்டாவது தமது முதல் ஸ்பெல்லில் எடுக்க வேண்டும்

2.   ஆஸ்திரேலியாவின் இன்னொரு பலவீனம் பந்து வீச்சு. அவர்களிடம் முழுநேர பந்து வீச்சாளர்கள் மூவரே உள்ளனர். அவர்களையும் முதல் பத்து ஓவர்கள், பவர் பிளே, இறுதி பத்து ஓவர்கள் என பிரித்து வீச வைப்பார் கிளார்க். இதனிடையே இவர்களுக்கு விக்கெட் கொடுக்காமல் இருந்தால் மேக்ஸ்வெல், பாக்னர் மற்றும் வாட்ஸன் வீசும் 20 ஓவர்களில் குறைந்தது 160 எண்களாவது எடுக்கலாம். மிச்ச மூவரின் முப்பது ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்தால் முன்னூறை சுலபமாய் அடையலாம். 160 ஓட்டங்கள் எடுக்க முழுநேர வீச்சாளர்களுக்கு சுலபத்தில் விக்கெட் கொடுக்க கூடாது. அப்படி என்றால் தான் மேக்ஸ்வெல் போன்றோரின் அல்வா பந்து வீச்சை அடித்து கிழிக்க முடியும்.
3.   என்னதான் திட்டமிட்டு போனாலும் ஆஸ்திரேலியாவின் காட்டுசுற்றல் மட்டையாட்டம் உங்கள் ஆசனவாயில் சூட்டைக் கிளப்பி மண்டையை குழப்பி விடும். ஆனால் நிதானமாய் பந்து வீசுவது அவசியம்.
4.   ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை. ஒற்றை, இரட்டை ஓட்டங்களை நிறைய எடுப்பவர்கள் 300 ஓட்டங்களை அடைவது எளிது. கிளார்க் இதை செய்ய நியுசிலாந்தை அனுமதிக்க மாட்டார். பெரிய ஷாட்களை அடிக்க தூண்டுவார். களத்தடுப்பை உள்வட்டத்துக்கு கொண்டு வந்து நெருக்கடி கொடுத்து உயரப் பந்துகள் இட வைப்பார். இந்த பொறியில் மாட்டி பந்தை தூக்கி அடித்தால் அம்பேல். பொறுமை முக்கியம்.

5.   நியுசிலாந்தின் வெற்றி வாய்ப்பு 30-40% தான். ஆனாலும் ஒரு சின்ன எறும்பு யானையின் காதுக்குள் நுழைந்து செம குடைச்சல் கொடுக்க முடியும். நாளை பார்ப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...