முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகக்கோப்பையை வெல்ல நியுசிலாந்த் என்ன செய்ய வேண்டும்?

.

1.    எதிரணியின் பலவீனத்தை அறிந்து தாக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனம் என்ன? துவக்க மட்டையாளர்களும் 4ஆம் எண்ணில் வரும் கிளார்க்கும் நல்ல ஆட்டநிலையில் இல்லை. அதன் பிறகு பந்தை தூக்கி அடிக்கும் ஆல்ரவுண்டர்கள் தாம் வருகிறார்கள். ஆஸ்திரேலிய மட்டையாட்டத்தின் அச்சு ஸ்மித் தான். பிறரை முதல் பத்து அல்லது இருபது ஓவர்களுக்குள் வீழ்த்தி விட்டு மேக்ஸ்வெல்லை இருபத்தைந்து ஓவருக்குள் ஆட வைத்து விட்டால் ஆஸ்திரேலியாவை கடும் நெருக்கடிக்குள் தள்ளலாம். சுருக்கமாக சவுதி மற்றும் போல்ட் சேர்ந்து நான்கு விக்கெட்டாவது தமது முதல் ஸ்பெல்லில் எடுக்க வேண்டும்

2.   ஆஸ்திரேலியாவின் இன்னொரு பலவீனம் பந்து வீச்சு. அவர்களிடம் முழுநேர பந்து வீச்சாளர்கள் மூவரே உள்ளனர். அவர்களையும் முதல் பத்து ஓவர்கள், பவர் பிளே, இறுதி பத்து ஓவர்கள் என பிரித்து வீச வைப்பார் கிளார்க். இதனிடையே இவர்களுக்கு விக்கெட் கொடுக்காமல் இருந்தால் மேக்ஸ்வெல், பாக்னர் மற்றும் வாட்ஸன் வீசும் 20 ஓவர்களில் குறைந்தது 160 எண்களாவது எடுக்கலாம். மிச்ச மூவரின் முப்பது ஓவர்களில் 150 ஓட்டங்கள் எடுத்தால் முன்னூறை சுலபமாய் அடையலாம். 160 ஓட்டங்கள் எடுக்க முழுநேர வீச்சாளர்களுக்கு சுலபத்தில் விக்கெட் கொடுக்க கூடாது. அப்படி என்றால் தான் மேக்ஸ்வெல் போன்றோரின் அல்வா பந்து வீச்சை அடித்து கிழிக்க முடியும்.
3.   என்னதான் திட்டமிட்டு போனாலும் ஆஸ்திரேலியாவின் காட்டுசுற்றல் மட்டையாட்டம் உங்கள் ஆசனவாயில் சூட்டைக் கிளப்பி மண்டையை குழப்பி விடும். ஆனால் நிதானமாய் பந்து வீசுவது அவசியம்.
4.   ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரியவை. ஒற்றை, இரட்டை ஓட்டங்களை நிறைய எடுப்பவர்கள் 300 ஓட்டங்களை அடைவது எளிது. கிளார்க் இதை செய்ய நியுசிலாந்தை அனுமதிக்க மாட்டார். பெரிய ஷாட்களை அடிக்க தூண்டுவார். களத்தடுப்பை உள்வட்டத்துக்கு கொண்டு வந்து நெருக்கடி கொடுத்து உயரப் பந்துகள் இட வைப்பார். இந்த பொறியில் மாட்டி பந்தை தூக்கி அடித்தால் அம்பேல். பொறுமை முக்கியம்.

5.   நியுசிலாந்தின் வெற்றி வாய்ப்பு 30-40% தான். ஆனாலும் ஒரு சின்ன எறும்பு யானையின் காதுக்குள் நுழைந்து செம குடைச்சல் கொடுக்க முடியும். நாளை பார்ப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...