முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ரசிகன்” – அபத்தங்களின் நாயகன் - பா.சரவணன்


மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் சூதாட்டத்தில்ரம்மிசேர்ந்துவிடாதபடி மனிதர்கள் வாழ்க்கையையும், வாழ்க்கை மனிதர்களையும் கலைத்துப்போட்டுக்கொண்டே இருக்கின்றன இந்த நாவலில்.

இரண்டுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வரும் இடங்கள் மிகத் துள்ளலுடன் எழுதப்பட்டிருக்கின்றன. பெண்கள் வேறுபட்ட பின்ணணியும் குணங்களும் கொண்டவர்களாகவும் , சிக்கலான நேரங்களில் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடந்துகொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.
மதம்மாறித் திருமணம் செய்தல், சரிவிலிருப்பவனைக் காதலித்தல் எனச் சிலசினிமாத்தனமானசூழல்கள் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளின் பின்னால் ஓடாமல், நிதானத்துடன் நகர்வது குறிப்பிடத்தக்கது .சாதிக்கின் சிறு பத்திரிகை அனுபவம், ‘கதைசொல்லிசங்கரின் பத்திரிகை அனுபவம் போன்ற இடங்கள் தகவல்களின், செய்திகளின் தொகுப்பாக மட்டும் நின்றுவிடுகின்றன. போதையுடன் நிகழும் சில உரையாடல்கள் நீண்டுகொண்டே போவது போன்ற உணர்வைத் தருகின்றன.
ரசிகர் மன்றச் செயல்பாடுகளில் நடிகரின் (ரஜினி) பெயரைப் பயன்படுத்தியிருப்பதை (நடிகரைப் பற்றி எதிர்மறையாக அதிகம் சொல்லாவிட்டாலும்) துணிச்சலான செயல் என்றே சொல்லவேண்டும்.
இடதுசாரிகள் , சிறுபத்திரிகைச் சூழல் குறித்த பல இடங்கள் திட்டமிடப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன ( Premeditated shot). அவ்விடங்களில் பந்துபௌண்டரிக்குச் செல்லவில்லை.
நாவலின் வடிவத்தில் நண்பர்களில் வாழ்க்கை , இடதுசாரி/சிறுபத்திரிகை அறிவுச்சூழலின், மனிதர்களின் வீழ்ச்சி , தற்கால ஊடகங்களின் தாக்கம் என்ற மூன்று கதைகள்கொலாஜ்செய்யப்பட்டிருப்பது போல் இருக்கிறது. இது நாவலுக்கு பலமாகவும், சில இடங்களில் பலவீனமாகவும் ஆகிறது. அதிர்ச்சியூட்டக்கூடிய சில இடங்களில்டரண்டினோபடம் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
மக்களை விட்டு விலகி மேட்டிமைத்தனமான இதிகாசங்கள்,இற்றுப்போன சுயபுனைவுகள், பாவனைகள் மிகுந்த உணர்வுகள் பொங்கி வழியும் சொற்குவியல்களின் பின்னால் மூத்த தலைமுறை (உரைநடை எழுதும் ) இலக்கியவாதிகள் சிலர் திரியும்( Pun intended!) நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் தன்னைச் சுற்றியுள்ள மக்களை , வாழ்க்கையைப் பேசும் புதிய (‘இளம்அல்ல) எழுத்தாளர்களின் பல நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில் மனிதர்களின் சீரழிவின் வாயிலாக சமூகத்தின் வீழ்ச்சியைப் புனைய முயன்றிருக்கிறது ஆர்.அபிலாஷ் எழுதியரசிகன்’.
ரசிகன் (நாவல்) – ஆர்.அபிலாஷ் , உயிர்மை வெளியீடு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...