முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“ரசிகன்” – அபத்தங்களின் நாயகன் - பா.சரவணன்


மனிதர்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையே நடக்கும் சூதாட்டத்தில்ரம்மிசேர்ந்துவிடாதபடி மனிதர்கள் வாழ்க்கையையும், வாழ்க்கை மனிதர்களையும் கலைத்துப்போட்டுக்கொண்டே இருக்கின்றன இந்த நாவலில்.

இரண்டுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வரும் இடங்கள் மிகத் துள்ளலுடன் எழுதப்பட்டிருக்கின்றன. பெண்கள் வேறுபட்ட பின்ணணியும் குணங்களும் கொண்டவர்களாகவும் , சிக்கலான நேரங்களில் தங்கள் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப நடந்துகொள்பவர்களாகவும் இருக்கின்றனர்.
மதம்மாறித் திருமணம் செய்தல், சரிவிலிருப்பவனைக் காதலித்தல் எனச் சிலசினிமாத்தனமானசூழல்கள் மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளின் பின்னால் ஓடாமல், நிதானத்துடன் நகர்வது குறிப்பிடத்தக்கது .சாதிக்கின் சிறு பத்திரிகை அனுபவம், ‘கதைசொல்லிசங்கரின் பத்திரிகை அனுபவம் போன்ற இடங்கள் தகவல்களின், செய்திகளின் தொகுப்பாக மட்டும் நின்றுவிடுகின்றன. போதையுடன் நிகழும் சில உரையாடல்கள் நீண்டுகொண்டே போவது போன்ற உணர்வைத் தருகின்றன.
ரசிகர் மன்றச் செயல்பாடுகளில் நடிகரின் (ரஜினி) பெயரைப் பயன்படுத்தியிருப்பதை (நடிகரைப் பற்றி எதிர்மறையாக அதிகம் சொல்லாவிட்டாலும்) துணிச்சலான செயல் என்றே சொல்லவேண்டும்.
இடதுசாரிகள் , சிறுபத்திரிகைச் சூழல் குறித்த பல இடங்கள் திட்டமிடப்பட்டு எழுதப்பட்டிருக்கின்றன ( Premeditated shot). அவ்விடங்களில் பந்துபௌண்டரிக்குச் செல்லவில்லை.
நாவலின் வடிவத்தில் நண்பர்களில் வாழ்க்கை , இடதுசாரி/சிறுபத்திரிகை அறிவுச்சூழலின், மனிதர்களின் வீழ்ச்சி , தற்கால ஊடகங்களின் தாக்கம் என்ற மூன்று கதைகள்கொலாஜ்செய்யப்பட்டிருப்பது போல் இருக்கிறது. இது நாவலுக்கு பலமாகவும், சில இடங்களில் பலவீனமாகவும் ஆகிறது. அதிர்ச்சியூட்டக்கூடிய சில இடங்களில்டரண்டினோபடம் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
மக்களை விட்டு விலகி மேட்டிமைத்தனமான இதிகாசங்கள்,இற்றுப்போன சுயபுனைவுகள், பாவனைகள் மிகுந்த உணர்வுகள் பொங்கி வழியும் சொற்குவியல்களின் பின்னால் மூத்த தலைமுறை (உரைநடை எழுதும் ) இலக்கியவாதிகள் சிலர் திரியும்( Pun intended!) நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் தன்னைச் சுற்றியுள்ள மக்களை , வாழ்க்கையைப் பேசும் புதிய (‘இளம்அல்ல) எழுத்தாளர்களின் பல நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வரிசையில் மனிதர்களின் சீரழிவின் வாயிலாக சமூகத்தின் வீழ்ச்சியைப் புனைய முயன்றிருக்கிறது ஆர்.அபிலாஷ் எழுதியரசிகன்’.
ரசிகன் (நாவல்) – ஆர்.அபிலாஷ் , உயிர்மை வெளியீடு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...