முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போகன் சங்கர்


கடந்த ஐந்து வருடங்களில் கவனம் பெற்ற எழுத்தாளர்களில் போகன் சங்கர் ஒரு நட்சத்திரம். பொதுவாக, குழந்தைக்கு சோறூட்டும் அம்மாக்களை போன்றவர்கள் கவிஞர்கள். அப்படியான ஒரு அம்மா என்னிடம் சமீபத்தில் சொன்னார், குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைக்கு ஊட்டி மீதமாகிற உணவை சாப்பிட்டே குண்டாகி விடுகிறார்கள் என்று. பெரும்பாலான நம் கவிஞர்கள் தம் கவிதைகளையும் சுற்றி உள்ளோர் கவிதைகளையும் படித்து படித்தே மூச்சுத்திணறி விடுகிறார்கள். அவர்கள் நாவல், கட்டுரை, தத்துவம், அரசியல், சமூகவியல், வரலாறு என நகர மாட்டார்கள் (விதிவிலக்குகள் உண்டு). போகன் அப்படி அல்ல. அவரது பரவலான தீவிரமான வாசிப்பு வியப்பூட்டுவது. மன அழுத்தம் பற்றின Noonday Demon எனும் தடிமனான நூலை வாசிக்க தொடங்கினேன். எதேச்சையாய் ஒரு நூலகத்தில் கண்டெடுத்த நூல் அது. மிக முக்கியமான அடர்த்தியான பதிவு. தன்வரலாறும் உளவியலும் கோட்பாடுகளுமாய் மன அழுத்தத்தை ஆராயும் ஒரு சாதனை நூல். ஒரு நாள் எதேச்சையாய் போகன் அந்நூலைப் பற்றி முகநூலில் போகிற போக்கில் குறிப்பிட்ட போது ஆச்சரியமானேன். ஆனால் வாசிப்பதை அப்படி முழுங்கி எழுத்தில் மேற்கோள்களாய் துப்ப மாட்டார். சுருக்கி தன் கட்டுரையாக எழுத மாட்டார். அதை ஜீரணித்து தன் கருத்தாக்கி புது பார்வையில் அளிப்பார். போகனின் கவிதைகளில் காணும் ஆழ அகலத்துக்கு இந்த வாசிப்பும் தீராத் தேடலும் ஒரு காரணம்.
முகநூலில் ஒரு விளையாட்டுத்தனமான முகமூடி அணிந்து பகடி பண்ணித் திரிவார். முகநூலில் பல நல்ல கவிதைகளையும், பல அரைகுறை கவிதைகளையும் சமமாக எழுதியிருக்கிறார். எழுதுகிற அனைத்தையும் பிரசுரித்து விடுவார். அவரது கவிதை மனம் அடையும் ஏற்ற இறக்கங்களை முகநூலில் அவரை தொடர்ந்தாலே பட்டவர்த்தமாகி விடும். எந்த மறைவுகளும் அற்ற இன்றைய காலத்துக்கான டிப்பிக்கல் கவிஞர்.
போகனின் மொழியின் அழகு யார் கண்ணிலும் படாத அவரது அற்புதமான உவமைகள். ஒரு கதையில் குழந்தையின் உதட்டைப் பற்றி சொல்லும் போது குளிர்ந்த ஆரஞ்சு சுளை போல என்பார். இப்படி பல எதிர்பாராமல் முதுகைத் தொட்டழைக்கும் உவமைகள் அவரிடம் உண்டு. அவரது impressionable ஆன மனம் எலிகளை பிடிப்பதற்கான பசை அட்டை போல என நினைக்கிறேன். அதில் கோடிக்கணக்கான காட்சிகள் ஒட்டிக் கிடந்து கைகால்களை போட்டடிக்கின்றன. அவை அவர் மொழி வழி இறங்கி வெளியே ஓடுகின்றன. நான் அடிக்கடி படித்து பொறாமைப்படுகிற மொழி போகனுடையது. அந்த மொழி, நாம் நம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் பலவித நெருக்கடிகளின் உளவியல், அறம் போன்ற அவரது தீவிரமான பேசுபொருட்கள், பகடி ஆகியவை தான் இத்தனை பேரை அவரது எழுத்து நோக்கி கடந்த சில வருடங்களில் இழுத்து வந்துள்ளது.
போகனை ஒருமுறை சென்னையில் இரு கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். காப்காவின் விசாரணை நாவலில் வரும் நாயகன் போலவே நடந்து கொள்வார். ரொம்ப சிரித்து பேசினால் கைது பண்ணி விடுவார்களோ எனும் பாவனை. கசப்பான ஒரு நகைச்சுவை பேச்சில் தொனிக்கும். முகத்தை இறுக்கமாய் வைத்துக் கொண்டு சுண்டு விரலால் கண்ணாடியை அடிக்கடி மூக்கின் மேல் அட்ஜஸ்ட் செய்யும் மேனரிசம். குறிப்பாக மனதிற்குள் எதையோ நோண்டியெடுத்து வெளியே சொல்லும் போது அப்படி செய்வாராக இருக்கலாம். பார்த்தவுடன் ஒட்டிக் கொள்கிற மனிதராக தெரியவில்லை. ஒரு சின்ன நுண்ணோக்கியுடன் தனக்குள் ஓடும் கடிகாரத்தை ஆய்வு செய்து நகர்கிற அகவயமான மனிதர்.
ஆனால் அவருக்குத் தான் எத்தனை எத்தனை ரசிகைகள். இரண்டாம் முறையாக அவரை உயிர்மை கூட்டத்தில் சந்தித்த போது “உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண் விசிறிகள் அமைகிறார்கள்?” என்றேன். “எனக்கே தெரியலீங்க” என்றார். அவரது உணர்ச்சி கொப்புளிக்கும் மொழி, அதன் எளிமை, நாடகீயம், மென்மை, தொட்டாற் சிணுங்கும் குழந்தை போன்ற தொனி ஆகியவை காரணமாய் இருக்கலாம் என என் மூளை சொன்னது. அதே மேடையில் இருந்த மனுஷ்யபுத்திரனிடம் முன்பு பலமுறை இக்கேள்வியை கேட்டிருக்கிறேன். “அதுக்கு நீங்க கவிதை எழுதணுங்க” என்பார். கவிஞர்கள் பேரழகர்களாக இருக்க வேண்டியதில்லை. கவிமொழியில் ஒரு மேஜிக் இருந்தால் போதும்!


இந்த பீடிகை எல்லாம் இன்று பிறந்த நாள் காணும் போகன் சங்கருக்கு வாழ்த்து சொல்லத் தான். தமிழ்க் கவிதையில் ஒரு அற்புத நிகழ்வு நீங்கள் நண்பா! தொடர்ந்து பயணியுங்கள்.

கருத்துகள்

Kumky இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லா பக்கங்களையும் தொட்டு போகனை முப்பரிமானகோணங்களில் காண்பித்திருக்கிறீர்கள் அபிலாஷ். வெகு நுட்பமான அவரின் நகைச்சுவையுணர்வினையும் பதிவில் சுட்டியிருக்கலாம்..
rajasundararajan இவ்வாறு கூறியுள்ளார்…
போகன் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...