முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா அமளிதுமளி

Image result for jayalalithaa + aiadmk + adyar

அம்மாவின் கவர்னர் சந்திப்பை ஒட்டி சின்னமலையில் ஆரம்பித்து அடையார், கோட்டூர்புரம் வரை அமளிதுமளி தான். வட்டச்செயலாளர்களும், நிர்வாகிகளுமாய் வேன்களில் அழைத்து வரும் மக்கள், வேன் மீது கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் முழங்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள், பேண்ட்மேளம், அங்கங்கே சிறுமேடை அமைத்து அபஸ்வரமாய் பாடும் புரட்சித்தலைவி கானங்கள், வழியெங்கும் பதாகைகள், சுவரொட்டிகள், இரட்டை இலை தோரணங்கள் இப்படி விழாக்கோலம் பூண்டிருந்தது. நேற்றிரவு அவ்வழி வீடு திரும்பும் போது நிறைய போலிசார் குவிக்கப்பட்டிருந்தது பார்த்தேன். நாளை இப்பாதையில் போக்குவரத்தை உறைய வைத்து விடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் போக்குவரத்து பெரும்பாலும் இயல்பாகவே இருந்தது. அதிமுகவினரும் சாலையில் நாணயங்கள் போல் இறையாமல் ஒழுக்கமாகவே நடந்து கொண்டனர். கிண்டியின் சிறு தெருக்களில் கழகத்தினர், சாதிக் கட்சியினர் கூட்டம் போட்டாலும் வாகனங்களை நடுசாலையில் நிறுத்தி, பாதையை மறித்து உயிரை வாங்குவார்கள். ஆனால் நகரத்தின் பிரதான பகுதி என்பதாலோ ஏனோ கட்சிக்காரர்கள் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள்.


எனக்கு இந்த சூழல், அதன் குதூகலம், கொண்டாட்டம், சத்தம், வண்ணமயம் பிடித்திருந்தது. அடையார் பொதுவாக ஒரு கறுப்பு வெள்ளை, நாசூக்கான பகுதி. அங்கே ஒலி, வண்ணங்கள், அசைவுகள் மிக மெத்தனமாக மணிரத்னம் படக்காட்சிகள் போன்றே இருக்கும். மனிதர்கள் ஏதோ விண்வெளியில் இருந்து இப்போ தான் இறங்கி வந்தேன் எனும் கணக்கில் நடப்பார்கள். இன்றைய நிகழ்வுகள் இந்த எலைட் பகுதிக்குள் கீழ்மட்ட மக்களை கொண்டு வந்து ஒரு விநோத சூழலை உருவாக்கியது. இது ஒரு தற்காலிக கலாச்சார ஊடுருவல். இன்றைக்கு மட்டும் அடையாறும் கோட்டூர்புரமும் வேறு மக்களால் கைப்பற்றப்பட்டு விட்டது. அப்பகுதிகளின் குணம் தற்காலிகமாய் மாறி விட்டது. இதை நான் மிகவும் ரசித்தேன்.

இந்த கொடூரமான வெயிலில் பாதுகாப்பு பணி செய்யும் நூற்றுக்கணக்கான போலீசாரைப் பற்றியும் ஒரு நிமிடம் கருணையுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். போக்குவரத்தின் ஒழுங்கு குலையாமல் பாதுகாத்த போக்குவரத்து காவலர்களையும் பாராட்ட வேண்டும்.

நான் எம்.ஜி.ஆர் பாடல்களின் ரசிகன். என் சிறுவயது முழுக்க அப்பாடல்களாலே நிரம்பினது. அப்பா தினமும் குடிபோதையில் ஒருமணிநேரமாவது எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடுவார். பாடித் தான் என்னை குழந்தையாய் இருக்கையில் தூங்க வைப்பார். அதனாலே எம்.ஜி.ஆர் பாடல்கள் கேட்டால் சட்டென சோர்விலிருந்து மீண்டு விடுவேன். வீட்டுப்பக்கத்தில் அம்மன் பாடல்களை ஸ்பீக்கரில் இட்டு கழுத்தறுக்கும் போது எனக்கு ரத்தக் கண்ணீர் வரும். ஆனால் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் என்றால் கொண்டாட்டம் தான். காலையில் விழித்ததும் பல அற்புதமான பாடல்கள் கேட்டபடி இருக்கலாம். வெளியே போனாலும் எங்காவது ஒரு மூலையில் மேடை அமைத்து அப்பாடல்கள் ஒலிக்க வைத்திருப்பார்கள். அன்று முழுக்க ஒரு புன்னகையுடனே இருப்பேன். அதனாலே இன்று இப்பகுதியில் வீறிடும் பல்வேறு பாடல்கள் எனக்கு அந்நியமாய் தோன்றவில்லை. எட்டு வயது குழந்தையாய் அப்பா மடியில் இருந்த நினைவு தான் மேலிடுகிறது.


இறுதியாக, இதே தொண்டர்கள் தாம் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது கடைகளை அடித்து நொறுக்கி அழிவு செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதையும், பின்னர் அவர் விடுதலையான போது நீதி என்றால் என்னவென்பதை மறந்து விட்டு குமாரசாமியை போற்றி சுவரொட்டி ஒட்டினார்கள் என்பதையும் நாம் மறந்து விட வேண்டாம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...