Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

குடல் கிருமிகளால் ஆட்டுவிக்கப்படும் மனித மூளை


நியு யார்க் டைம்ஸில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். நம்முடைய குடலில் இருக்கும் கிருமிகள் நம் மனநிலையை, மூளையின் செயல்பாட்டை தீர்மானிக்க கூடும் என சில ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. பேக்டீரியா சில நரம்பணு ரசாயனங்களை ரத்தம் வழி மூளைக்கு அனுப்பி தேவையான சமிஞைகளை உருவாக்கி நம் நடத்தையை தீர்மானிக்க முடியும். ஆட்டிஸம் போன்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடலில் உள்ள கிருமிகளை மாற்றும் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.


இப்போதைக்கு ஆய்வை எலிகளிலும் குரங்குகளிலுமே செய்து வருகிறார்கள். மன அழுத்தத்தை தூண்டும் ரசாயனங்களை சுரக்கும் கிருமிகளும், அதைத் தடுக்கும் ரசாயனங்களை சுரக்கும் கிருமிகளும் உள்ளன. இவற்றை எலிகளில் செலுத்தி நடத்தை மாற்றங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவென்றால் ஒரு கூண்டில் உள்ள எலியின் அருகே வியாதி தொற்றிய புது எலியை விடும் போது முதல் எலியின் உடலில் தற்காப்பு சக்தி உயர்கிறது. ஆனால் இதன் விளைவாக அதற்கு வியாதி எளிதில் தொற்றிக் கொள்கிறது. இது நம் தற்காப்பு சக்தி குடலில் உள்ள கிருமிகளை அழிப்பதனால் இருக்கலாம். பொதுவாக நமக்கு சீக்கு வரும் போது மனம் சோர்வடைவதை கவனிக்கலாம். இது சீக்கின் போது இக்கிருமிகளின் எண்ணிக்கை மிகுவதனாலோ குறைவதனாலோ இருக்கலாம். அதே போல மனம் சோர்வடையும் போது நோய்த்தொற்று எளிதில் ஏற்படும். இது குடலில் மனச்சோர்வை தடுக்கும் நல்ல கிருமிகள் இல்லாமல் ஆகி விட்டால், அதனால் நம் செரிமானம், உடலின் வேதியல் சமநிலை ஆகின சீரற்று போய் மனமும் உடலும் பலவீனமாய் எளிதில் நோய்க்கு அடிமையாகலாம் என்பதைக் காட்டுகிறது.

மனிதனின் பாலுறுப்புகளில் தோன்றும் சில வைரஸ்கள் அதிகமான உடலுறவு இசையை தூண்டி அதன் மூலமாய் பிற உடல்களுக்கு பரவும் என முன்னர் படித்திருக்கிறேன். நம் உடலில் உள்ள மரபணுக்கள் அடிப்படையில் நுண்ணுயிர்களில் இருந்து நாம் பெற்றவை என்றும் ஒரு கோட்பாடு உண்டு. எதை சாப்பிடுகிறோமோ அதுவாக ஆகிறோம் என்பது இந்திய பாரம்பரிய நம்பிக்கை. குண்டானவர்கள் களங்கம்ற்றவர்கள் என்றும், ஒல்லியனவர்கள் சூழ்ச்சியாளர்கள் என்றும் ஷேக்ஸ்பியரின் ஜுலியஸ் சீஸரில் ஒரு பாத்திரம் சொல்கிறது. சைவ உணவாளர்கள் சூழ்ச்சியாளர்கள் அல்லது சமூகத்தில் இருந்து விலகி நிற்கும் மேட்டிமைவாதிகள் என சில நண்பர்கள் என்னிடம் கூறி இருக்கிறார்கள். இவை எல்லாம் முன்னெண்ணங்கள் (prejudices). நம் சூழலும் அதற்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதும் நம் குணம் மற்றும் நடத்தையை நிச்சயம் தீர்மானிக்கிறது. உதாரணமாய், சைவ உணவு உட்கொள்ளும் பிராமணர்கள், சைவவேளாளர்கள், ஜெயின் சமூகத்தினர் ஆகியோரிடம் முற்றிலும் வேறுபட்ட நடத்தைகளை கண்டிருக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் நல்ல மனநிலைக்கான உளவியல் மருந்தாக உணவுகள் பரிந்துரைக்கப்பட சாத்தியமுண்டு என்றாலும் அது எந்தளவுக்கு உதவும் எனத் தெரியவில்லை.


இன்னொரு மருத்துவ சாத்தியம் மனச்சோர்வு கொண்டோரின் குடலில் உள்ள கிருமிகளை மாற்றுவது. இப்போதைக்கு இது சிக்கலானதாக இருக்கிறது. 35 வருடங்களுக்கு மேலாய் நடந்து வரும் ஆய்வு இது. இப்போது தான் தகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...