Skip to main content

குடல் கிருமிகளால் ஆட்டுவிக்கப்படும் மனித மூளை


நியு யார்க் டைம்ஸில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை படித்தேன். நம்முடைய குடலில் இருக்கும் கிருமிகள் நம் மனநிலையை, மூளையின் செயல்பாட்டை தீர்மானிக்க கூடும் என சில ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. பேக்டீரியா சில நரம்பணு ரசாயனங்களை ரத்தம் வழி மூளைக்கு அனுப்பி தேவையான சமிஞைகளை உருவாக்கி நம் நடத்தையை தீர்மானிக்க முடியும். ஆட்டிஸம் போன்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடலில் உள்ள கிருமிகளை மாற்றும் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.


இப்போதைக்கு ஆய்வை எலிகளிலும் குரங்குகளிலுமே செய்து வருகிறார்கள். மன அழுத்தத்தை தூண்டும் ரசாயனங்களை சுரக்கும் கிருமிகளும், அதைத் தடுக்கும் ரசாயனங்களை சுரக்கும் கிருமிகளும் உள்ளன. இவற்றை எலிகளில் செலுத்தி நடத்தை மாற்றங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவென்றால் ஒரு கூண்டில் உள்ள எலியின் அருகே வியாதி தொற்றிய புது எலியை விடும் போது முதல் எலியின் உடலில் தற்காப்பு சக்தி உயர்கிறது. ஆனால் இதன் விளைவாக அதற்கு வியாதி எளிதில் தொற்றிக் கொள்கிறது. இது நம் தற்காப்பு சக்தி குடலில் உள்ள கிருமிகளை அழிப்பதனால் இருக்கலாம். பொதுவாக நமக்கு சீக்கு வரும் போது மனம் சோர்வடைவதை கவனிக்கலாம். இது சீக்கின் போது இக்கிருமிகளின் எண்ணிக்கை மிகுவதனாலோ குறைவதனாலோ இருக்கலாம். அதே போல மனம் சோர்வடையும் போது நோய்த்தொற்று எளிதில் ஏற்படும். இது குடலில் மனச்சோர்வை தடுக்கும் நல்ல கிருமிகள் இல்லாமல் ஆகி விட்டால், அதனால் நம் செரிமானம், உடலின் வேதியல் சமநிலை ஆகின சீரற்று போய் மனமும் உடலும் பலவீனமாய் எளிதில் நோய்க்கு அடிமையாகலாம் என்பதைக் காட்டுகிறது.

மனிதனின் பாலுறுப்புகளில் தோன்றும் சில வைரஸ்கள் அதிகமான உடலுறவு இசையை தூண்டி அதன் மூலமாய் பிற உடல்களுக்கு பரவும் என முன்னர் படித்திருக்கிறேன். நம் உடலில் உள்ள மரபணுக்கள் அடிப்படையில் நுண்ணுயிர்களில் இருந்து நாம் பெற்றவை என்றும் ஒரு கோட்பாடு உண்டு. எதை சாப்பிடுகிறோமோ அதுவாக ஆகிறோம் என்பது இந்திய பாரம்பரிய நம்பிக்கை. குண்டானவர்கள் களங்கம்ற்றவர்கள் என்றும், ஒல்லியனவர்கள் சூழ்ச்சியாளர்கள் என்றும் ஷேக்ஸ்பியரின் ஜுலியஸ் சீஸரில் ஒரு பாத்திரம் சொல்கிறது. சைவ உணவாளர்கள் சூழ்ச்சியாளர்கள் அல்லது சமூகத்தில் இருந்து விலகி நிற்கும் மேட்டிமைவாதிகள் என சில நண்பர்கள் என்னிடம் கூறி இருக்கிறார்கள். இவை எல்லாம் முன்னெண்ணங்கள் (prejudices). நம் சூழலும் அதற்கு நாம் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பதும் நம் குணம் மற்றும் நடத்தையை நிச்சயம் தீர்மானிக்கிறது. உதாரணமாய், சைவ உணவு உட்கொள்ளும் பிராமணர்கள், சைவவேளாளர்கள், ஜெயின் சமூகத்தினர் ஆகியோரிடம் முற்றிலும் வேறுபட்ட நடத்தைகளை கண்டிருக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் நல்ல மனநிலைக்கான உளவியல் மருந்தாக உணவுகள் பரிந்துரைக்கப்பட சாத்தியமுண்டு என்றாலும் அது எந்தளவுக்கு உதவும் எனத் தெரியவில்லை.


இன்னொரு மருத்துவ சாத்தியம் மனச்சோர்வு கொண்டோரின் குடலில் உள்ள கிருமிகளை மாற்றுவது. இப்போதைக்கு இது சிக்கலானதாக இருக்கிறது. 35 வருடங்களுக்கு மேலாய் நடந்து வரும் ஆய்வு இது. இப்போது தான் தகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...