முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓரினச்சேர்க்கையும் இன்றைய விவாதமும்


ஓரினச்சேர்க்கை பற்றின ஜெயமோகனின் பழைய கட்டுரை ஒன்றை படித்த போது அவர் பாலினம் (sex) மற்றும் பாலியலுக்கு (gender) இடையிலான வித்தியாசம் இப்பிரச்சனையை எந்தளவுக்கு தீர்மானிக்கிறது என்பதை கவனிக்கத் தவறி விட்டார் எனத் தோன்றியது.

அதற்கு முன் வேறொரு விசயம். சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ள ஆண்மை பிம்பம் தான் ஓரினச்சேர்க்கையை ஒரு தவறான நடத்தையாக பார்க்க காரணம் என கூறுகிறார். எனக்கு இதை விட குழந்தைப்பேறு மிக முக்கிய காரணம் எனப் படுகிறது. ஓரினச்சேர்க்கை மட்டுமல்ல ஆசனவழிப்புணர்தல், சுயமைதுனம் கூட உலகெங்கிலும் ஆதிகாலம் முதற்கொண்டே கடுமையான ஒழுக்க சாடலுக்கு ஆளாகி வந்துள்ள பழக்கங்கள். காரணம் இவை விந்தை வீணடிப்பவை என்பது தான். பழங்காலத்தில் மனிதனின் பிரதான சம்பாத்தியமே குழந்தை செல்வம் தான். அதனால் ஓரினச்சேர்க்கை அதற்கு பெரும் தடையாக இருந்திருக்க வேண்டும். இன்றும் தன் மகனோ மகளோ ஓரினச்சேர்க்கையாளர் என அறியும் பெற்றோருக்கு ஏற்படும் முதல் பயம் சந்ததி தொடர்ச்சியின்றி போகுமே என்பது தானே! (அறிவியல் இதற்கு தீர்வுகள் கண்டாலும் கூட)

நாம் முதலில் சொன்ன விசயத்துக்கு வருவோம். ஒருவன் ஆண் உடலுடன் பிறந்து பௌதிகமாய் ஆணாய் இருப்பது அவனது பாலினம் (sex). அது மாறாதது. ஆனால் அதுவே அவனது பால் அடையாளமோ உடலுறவு விருப்பத் தேர்வைத் தீர்மானிப்பதாகவோ இருக்காது. அவனது பால் அடையாளம் அவனது பாலியல் (gender). இன்றைய உடல் விவாதங்கள், ஆண்மை ஆய்வுகள் (masculinity studies) ஆகியவை இந்த வித்தியாசத்தை ஒட்டித் தான் இருக்கின்றன. பெண்ணியம் கூட இந்த மையக்கோட்டை ஒட்டியே மறுவரைவு செய்யப்படுகிறது.

 எளிதாக சொல்வதானால் ஒரு ஆண் தனக்குள் பெண்ணின் மனதுடன், பால் ஆசைகளுடன் இருக்கலாம். அவன் ஒரு ஆணுடன் கூடும் போது ஆணுடலில் உள்ள பெண்ணாக இருக்கிறான். பிறகு அவன் ஒரு பெண்ணுடன் கூட போது ஆண் உடலில் உள்ள ஆணாக இருக்கிறான். இதுவே பெண்களுக்கும் பொருந்தும். ஓரினச்சேக்கையாளப் பெண்கள் இருவர் சேரும் போது அவர்கள் இரு பெண்கள் அல்ல. ஆணும் பெண்ணுமே. இப்போது ஆணாதிக்கம் பற்றி ஒரு பெண் பேசும் போது ஆண் வடிவில் இருக்கும் ஆணை சொல்கிறாரா அல்லது பெண் வடிவில் உள்ள ஆணைச் சொல்கிறாரா? இன்றைய பின்நவீனத்துவ விவாதங்களில் பாலியல் என்பது தற்காலிகமானதாய் அல்லது பாலினத்தோடு தொடர்பற்றதாய் பார்க்கப்படுகிறது. ஆண் உடலுக்குள் ஆண் மட்டுமே இருப்பான், இருக்க முடியும் எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டு சிந்தனை தான் ஓரினச்சேர்க்கையை கடுமையாய் எதிர்க்க செய்கிறது. இதுவே தான் திருநங்கைகளை வெறுக்க செய்கிறது. பெண்மை கொண்ட ஆணையும் ஆண்மை மிகுந்த பெண்ணையும் கேலி செய்ய வைக்கிறது. ஆனால் இந்த இறுக்கமான பார்வை நகரமய சூழலில் மெல்ல மெல்ல நெகிழ்ந்து வருகிறது. ஜெயமோகன் இதை ஒரு நிலப்பிரபுத்துவ மனநிலை ஏற்படுத்தும் பிரச்சனையாக பார்க்கிறார். ஆனால் அது உண்மை என்றால் முதலாளித்துவம் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் (சில மாகாணங்களில் சட்டபூர்வமாய் ஏற்கப்பட்டாலும் கூட) ஏன் ஓரின உறவு கடும் கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாக வேண்டும்?


உடலையும் வாழ்நிலையும் ஒன்றோடு ஒன்று பொருத்தமானதாய் பார்க்கிற பார்வை நீங்கி உடலுக்கும் செயலுக்கும் நெகிழ்வான தொடர்பே உள்ளது என சமூகம் சிந்திக்கிற காலத்தில் ஓரினச்சேர்க்கை இயல்பானதாய் ஏற்கப்படும். அதற்கு பெரும் புரட்சி ஏதும் அவசியமில்லை என நினைக்கிறேன். நாம் மெல்ல மெல்ல அக்காலத்தை நோக்கியே நகர்ந்து வருகிறோம். அடுத்த ஒரு நூற்றாண்டில் மனிதர்கள் திருமணம் செய்வது வெகுவாய் குறையும். தற்காலிகமாய் மட்டும் சேர்ந்து வாழ்வார்கள். குழந்தை வளர்ப்பதற்கு வேறு ஏற்பாடுகள் தோன்றும். ஆண்மைக்குறைபாடு அதிகரித்து குழந்தைப்பேறும் குறையும். ஒருவனை தன் உடலால் மட்டுமே ஆண் என அழைக்க மாட்டார்கள். அன்று துணை மட்டுமே முக்கியமாய் இருக்கும். துணையின் பால்நிலை அல்ல. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.