Skip to main content

ஓரினச்சேர்க்கையும் இன்றைய விவாதமும்


ஓரினச்சேர்க்கை பற்றின ஜெயமோகனின் பழைய கட்டுரை ஒன்றை படித்த போது அவர் பாலினம் (sex) மற்றும் பாலியலுக்கு (gender) இடையிலான வித்தியாசம் இப்பிரச்சனையை எந்தளவுக்கு தீர்மானிக்கிறது என்பதை கவனிக்கத் தவறி விட்டார் எனத் தோன்றியது.

அதற்கு முன் வேறொரு விசயம். சமூகத்தின் பொதுப்புத்தியில் உள்ள ஆண்மை பிம்பம் தான் ஓரினச்சேர்க்கையை ஒரு தவறான நடத்தையாக பார்க்க காரணம் என கூறுகிறார். எனக்கு இதை விட குழந்தைப்பேறு மிக முக்கிய காரணம் எனப் படுகிறது. ஓரினச்சேர்க்கை மட்டுமல்ல ஆசனவழிப்புணர்தல், சுயமைதுனம் கூட உலகெங்கிலும் ஆதிகாலம் முதற்கொண்டே கடுமையான ஒழுக்க சாடலுக்கு ஆளாகி வந்துள்ள பழக்கங்கள். காரணம் இவை விந்தை வீணடிப்பவை என்பது தான். பழங்காலத்தில் மனிதனின் பிரதான சம்பாத்தியமே குழந்தை செல்வம் தான். அதனால் ஓரினச்சேர்க்கை அதற்கு பெரும் தடையாக இருந்திருக்க வேண்டும். இன்றும் தன் மகனோ மகளோ ஓரினச்சேர்க்கையாளர் என அறியும் பெற்றோருக்கு ஏற்படும் முதல் பயம் சந்ததி தொடர்ச்சியின்றி போகுமே என்பது தானே! (அறிவியல் இதற்கு தீர்வுகள் கண்டாலும் கூட)

நாம் முதலில் சொன்ன விசயத்துக்கு வருவோம். ஒருவன் ஆண் உடலுடன் பிறந்து பௌதிகமாய் ஆணாய் இருப்பது அவனது பாலினம் (sex). அது மாறாதது. ஆனால் அதுவே அவனது பால் அடையாளமோ உடலுறவு விருப்பத் தேர்வைத் தீர்மானிப்பதாகவோ இருக்காது. அவனது பால் அடையாளம் அவனது பாலியல் (gender). இன்றைய உடல் விவாதங்கள், ஆண்மை ஆய்வுகள் (masculinity studies) ஆகியவை இந்த வித்தியாசத்தை ஒட்டித் தான் இருக்கின்றன. பெண்ணியம் கூட இந்த மையக்கோட்டை ஒட்டியே மறுவரைவு செய்யப்படுகிறது.

 எளிதாக சொல்வதானால் ஒரு ஆண் தனக்குள் பெண்ணின் மனதுடன், பால் ஆசைகளுடன் இருக்கலாம். அவன் ஒரு ஆணுடன் கூடும் போது ஆணுடலில் உள்ள பெண்ணாக இருக்கிறான். பிறகு அவன் ஒரு பெண்ணுடன் கூட போது ஆண் உடலில் உள்ள ஆணாக இருக்கிறான். இதுவே பெண்களுக்கும் பொருந்தும். ஓரினச்சேக்கையாளப் பெண்கள் இருவர் சேரும் போது அவர்கள் இரு பெண்கள் அல்ல. ஆணும் பெண்ணுமே. இப்போது ஆணாதிக்கம் பற்றி ஒரு பெண் பேசும் போது ஆண் வடிவில் இருக்கும் ஆணை சொல்கிறாரா அல்லது பெண் வடிவில் உள்ள ஆணைச் சொல்கிறாரா? இன்றைய பின்நவீனத்துவ விவாதங்களில் பாலியல் என்பது தற்காலிகமானதாய் அல்லது பாலினத்தோடு தொடர்பற்றதாய் பார்க்கப்படுகிறது. ஆண் உடலுக்குள் ஆண் மட்டுமே இருப்பான், இருக்க முடியும் எனும் பத்தொன்பதாம் நூற்றாண்டு சிந்தனை தான் ஓரினச்சேர்க்கையை கடுமையாய் எதிர்க்க செய்கிறது. இதுவே தான் திருநங்கைகளை வெறுக்க செய்கிறது. பெண்மை கொண்ட ஆணையும் ஆண்மை மிகுந்த பெண்ணையும் கேலி செய்ய வைக்கிறது. ஆனால் இந்த இறுக்கமான பார்வை நகரமய சூழலில் மெல்ல மெல்ல நெகிழ்ந்து வருகிறது. ஜெயமோகன் இதை ஒரு நிலப்பிரபுத்துவ மனநிலை ஏற்படுத்தும் பிரச்சனையாக பார்க்கிறார். ஆனால் அது உண்மை என்றால் முதலாளித்துவம் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் (சில மாகாணங்களில் சட்டபூர்வமாய் ஏற்கப்பட்டாலும் கூட) ஏன் ஓரின உறவு கடும் கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாக வேண்டும்?


உடலையும் வாழ்நிலையும் ஒன்றோடு ஒன்று பொருத்தமானதாய் பார்க்கிற பார்வை நீங்கி உடலுக்கும் செயலுக்கும் நெகிழ்வான தொடர்பே உள்ளது என சமூகம் சிந்திக்கிற காலத்தில் ஓரினச்சேர்க்கை இயல்பானதாய் ஏற்கப்படும். அதற்கு பெரும் புரட்சி ஏதும் அவசியமில்லை என நினைக்கிறேன். நாம் மெல்ல மெல்ல அக்காலத்தை நோக்கியே நகர்ந்து வருகிறோம். அடுத்த ஒரு நூற்றாண்டில் மனிதர்கள் திருமணம் செய்வது வெகுவாய் குறையும். தற்காலிகமாய் மட்டும் சேர்ந்து வாழ்வார்கள். குழந்தை வளர்ப்பதற்கு வேறு ஏற்பாடுகள் தோன்றும். ஆண்மைக்குறைபாடு அதிகரித்து குழந்தைப்பேறும் குறையும். ஒருவனை தன் உடலால் மட்டுமே ஆண் என அழைக்க மாட்டார்கள். அன்று துணை மட்டுமே முக்கியமாய் இருக்கும். துணையின் பால்நிலை அல்ல. 

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...