முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடியும் யாகூப்பும்

ஏன் மதக்கலவரம் நடத்திய மத,சாதிய பெரும்பான்மைவாதிகளுக்கு தூக்குத்தண்டனை அளிக்கப்படவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். ஏன் யாகூப்பும் கலவரக்காரர்களும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்படுவதில்லை?


இரண்டு விசயங்கள்

 1) பாகிஸ்தான் துணையோடு நடத்தப்பட்ட மும்பை வெடிகுண்டு தாக்குதல் தேசத்திற்கு எதிரான போராக கருதப்படுகிறது. இது போன்ற குற்றங்களுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை அளிக்க தலைப்படுகிறது. ஆனால் மதக்கலவரங்களை நடத்துபவர்களை இதே போல் நடத்துவதில்லை. நாம் எதிர்காலத்தில் மதக்கலவரக்காரர்களை தேசத்துரோகிகளாய் கருதும் சட்டம் ஒன்றை கொண்டு வர முயலலாம். அப்போது நீங்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு விடை கிடைக்கும்.


2) சீக்கியர்களை கொன்ற காங்கிரஸுக்கும் இஸ்லாமியரைக் கொன்ற பா..கவுக்கு மக்கள் ஏன் திரும்பத் திரும்ப ஓட்டளித்தனர்? என்னைப் பொறுத்தவரையில் இத்தேர்தலில் பா..கவுக்கு ஓட்டளித்தவர்கள் ஒவ்வொருவரும் குஜராத் படுகொலைகளுக்கு பொறுப்பு தான். இக்கோணத்தில் யோசிக்க ஏன் தயங்குகிறீர்கள்? ஏன் கட்சிகளையும் தலைவர்களையும் சாடி விட்டு திருப்தியாகிறோம்? ஓட்டளித்த மக்களை என்ன செய்வது? ஆக இது நம் ஜனநாயகத்தின் பிரச்சனையும் தான். இந்திய சட்டங்களை உருவாக்கியவர்கள் இச்சிக்கல்களை கருத்தில் கொள்ளவில்லை. அடுத்த தேர்தலில் எல்லாருக்கும் வாய்ப்புள்ளது. அதை பயன்படுத்தி மக்களே தண்டனை அளிக்கலாமே? ஏன் செய்ய மறுக்கிறார்கள்? இந்தியாவின் பெருவாரியான குடிமகன்களின் அடிமனதில் சிறுபான்மையினர் மேல் கடுமையான வெறுப்பும் வன்மமும் உள்ளது. அவர்கள் மறைமுகமாய் இக்கலவரங்களை ஆதரிக்கிறார்கள். அதனால் தான் கலவரங்களை நடத்தி ஆயிரக்கணக்கானோர் சாக காரணமாய் இருந்தவர்களை ஓட்டளித்து பதவியில் அமர வைக்கிறார்கள். இந்த வன்மத்தின் அடிப்படையை களைவது பற்றி யோசிக்க வேண்டும். ஒரு கருத்தில் இருந்து தான் பெரும் குற்றங்கள் நிகழ்கின்றன. அக்கருத்தை வேரறுக்க வேண்டும். அத்வானிகளும் மோடிகளும் அக்கருத்தின் வெறும் புறவடிவங்கள். அவர்கள் இடத்தில் நாளை நூறு பேர் வருவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...