முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடியும் யாகூப்பும்

ஏன் மதக்கலவரம் நடத்திய மத,சாதிய பெரும்பான்மைவாதிகளுக்கு தூக்குத்தண்டனை அளிக்கப்படவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். ஏன் யாகூப்பும் கலவரக்காரர்களும் ஒரே தட்டில் வைத்து பார்க்கப்படுவதில்லை?


இரண்டு விசயங்கள்

 1) பாகிஸ்தான் துணையோடு நடத்தப்பட்ட மும்பை வெடிகுண்டு தாக்குதல் தேசத்திற்கு எதிரான போராக கருதப்படுகிறது. இது போன்ற குற்றங்களுக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை அளிக்க தலைப்படுகிறது. ஆனால் மதக்கலவரங்களை நடத்துபவர்களை இதே போல் நடத்துவதில்லை. நாம் எதிர்காலத்தில் மதக்கலவரக்காரர்களை தேசத்துரோகிகளாய் கருதும் சட்டம் ஒன்றை கொண்டு வர முயலலாம். அப்போது நீங்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு விடை கிடைக்கும்.


2) சீக்கியர்களை கொன்ற காங்கிரஸுக்கும் இஸ்லாமியரைக் கொன்ற பா..கவுக்கு மக்கள் ஏன் திரும்பத் திரும்ப ஓட்டளித்தனர்? என்னைப் பொறுத்தவரையில் இத்தேர்தலில் பா..கவுக்கு ஓட்டளித்தவர்கள் ஒவ்வொருவரும் குஜராத் படுகொலைகளுக்கு பொறுப்பு தான். இக்கோணத்தில் யோசிக்க ஏன் தயங்குகிறீர்கள்? ஏன் கட்சிகளையும் தலைவர்களையும் சாடி விட்டு திருப்தியாகிறோம்? ஓட்டளித்த மக்களை என்ன செய்வது? ஆக இது நம் ஜனநாயகத்தின் பிரச்சனையும் தான். இந்திய சட்டங்களை உருவாக்கியவர்கள் இச்சிக்கல்களை கருத்தில் கொள்ளவில்லை. அடுத்த தேர்தலில் எல்லாருக்கும் வாய்ப்புள்ளது. அதை பயன்படுத்தி மக்களே தண்டனை அளிக்கலாமே? ஏன் செய்ய மறுக்கிறார்கள்? இந்தியாவின் பெருவாரியான குடிமகன்களின் அடிமனதில் சிறுபான்மையினர் மேல் கடுமையான வெறுப்பும் வன்மமும் உள்ளது. அவர்கள் மறைமுகமாய் இக்கலவரங்களை ஆதரிக்கிறார்கள். அதனால் தான் கலவரங்களை நடத்தி ஆயிரக்கணக்கானோர் சாக காரணமாய் இருந்தவர்களை ஓட்டளித்து பதவியில் அமர வைக்கிறார்கள். இந்த வன்மத்தின் அடிப்படையை களைவது பற்றி யோசிக்க வேண்டும். ஒரு கருத்தில் இருந்து தான் பெரும் குற்றங்கள் நிகழ்கின்றன. அக்கருத்தை வேரறுக்க வேண்டும். அத்வானிகளும் மோடிகளும் அக்கருத்தின் வெறும் புறவடிவங்கள். அவர்கள் இடத்தில் நாளை நூறு பேர் வருவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...