முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிஷ்கினின் மன உலகம்



மிஷ்கினுடன் தனிப்பட்ட முறையில் பேசுகையில் மீடியாவில் உள்ள பிம்பத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மனிதர் என்பதை கவனித்தேன். முதிர்ச்சியானவர். ஆழமான பார்வை உள்ளவர். மிக மிக குறைவாய் பேசுகிறார். நிறைய கவனிக்க விரும்புகிறார். சினிமாவை கோட்பாட்டு ரீதியாய் விளக்குவதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் போது அல்லது வாசிக்கும் போது அதனை உள்வாங்கி தன் கற்பனை மூலம் உருமாற்றி மற்றொன்றாக்க நினைக்கிறார். நம்மூர் புத்திஜீவிகள் சிலர் இதை திருட்டு என தவறாய் புரிந்து கொள்கிறார்கள்.
அதனால் அவர் பல புத்தகங்களை முதல் சில அத்தியாயங்கள் படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அவருக்கு அதில் கிடைக்கும் ஐடியாக்கள், மன ஊக்கம், நிறங்கள், வாசனைகள் போதும். சினிமாவையும் அப்படித்தான் பார்க்கிறார்.  
ஏதாவது ஒரு படத்தின் காட்சியை கவனித்து தன் படைப்புலகின் பகுதியாக்கும் ஒரு ஆவல், குழந்தைத்தனமான வேட்கை அவரிடம் உள்ளது. ஒரு வாசகராக, பார்வையாளராக இலக்கியத்தையோ சினிமாவையோ அவர் பார்ப்பதில்லை. படைப்பாளியாக தன் கதையை உருவாக்கும் முனைப்புடனே பார்க்கிறார். தர்க்கரீதியாய் சிந்திப்பதற்கு முற்றிலும் எதிரானவர். உணர்வுரீதியாய் தான் கவனித்தவற்றை ஆழமாய் நம்புகிறார். அதுவே அவர் உலகம்.

உணர்வுரீதியாய் அவரிடம் தாக்கம் செலுத்திய ஒரு ஷாட் அல்லது காட்சி படிமம் அல்லது ஒரு வரி அவருடையதே என நம்பி விடுவார். இதில் போலித்தனம் இல்லை. அவரது மன அமைப்பு அது. ஒருமுறை மட்டுமே அவரிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. அவரது படங்களில் நவீன நாடகங்களின் தாக்கம் உள்ளதென சொன்னேன். அவர் அதை மறுத்து சினிமாவில் அப்படியான பார்வையே தவறு என என்னிடம் விளக்கினார். எதையொன்றும் தனித்தனியாய் பிரித்து பார்க்கக் கூடாது என நினைக்கிறார். வகுக்க முடியாத ஒரு ஒட்டுமொத்த உண்மை என வாழ்க்கையையும் படைப்புலகையும் சினிமாவையும் பார்க்கிறார். அன்று முழுக்க இந்த பார்வையை ஒட்டி அவரிடம் மோதிக் கொண்டு இருந்தேன்.

சில படைப்பாளிகளிடம் மன அலைகழிப்பையும் உக்கிரத்தையும் தன்முனைப்பையும் மிகுதியாக பார்த்திருக்கிறேன். ஆனால் மிஷ்கினிடம் ஒரு புரிதலையும் முதிர்ச்சியின் மென்மையையும் கண்டேன்.

அதே போல புத்தகம் வாசிப்பவர்கள் மீது அவர் கொள்ளும் வியப்பும் மரியாதையும் அச்சரியமானது. நான் எழுத்தாளர்களிடம் கூட வெறும் அகந்தையை தான் பார்த்திருக்கிறேன். மிஷ்கினின் தர்க்கத்துக்கு எதிரான பார்வை அவரது ஜென் ஆர்வத்தினால் தோன்றியதாக இருக்க வேண்டும். ஏனென்றால் தன் பார்வையை வலியுறுத்த அவர் வாதிடுவதில்லை.ஒரு அனுபவத்தை முன்வைக்கிறார். அவ்வளவே!

அறைமுழுக்க புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். புத்தகங்களோடு இருப்பதும் அவற்றை பார்ப்பதும் தொடுவதும் கூட அவருக்கும் போதும். ஏற்கனவே நான் சொன்னது போல் அவர் ஒரு வாசகராக புத்தக உலகினுள் நுழைவதில்லை. புத்தகங்கள் அவருக்கு அவர் படங்களில் வரும் prop போல. ஏனென்றால் ஜென்னும் நம்மை வாசிப்பதை குறைத்து உணர்வு ரீதியாய் உலககை கவனிக்கவே கேட்கிறது.

வரும் சனிக்கிழமை மாலை கோகலே ஹாலில் அவர் சினிமா பற்றி பேச இருக்கிறார். அது பொதுவாக சினிமா பற்றியதாக அல்லாமல், தன் கலைப்பார்வை மற்றும் படைப்புலகத்தின் உருவாக்கத்திற்கு உலக சினிமாவை எப்படி பயன்பட்டது என்பதாக இருக்கும் என ஊகிக்கிறேன். முடிவில் நாம் சினிமாவை விட அவரைப் பற்றியே அதிகம் தெரிந்து கொள்வோம். அதுவும் ஒரு நல்ல பாடம் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...