தினமணியில் செவ்வாய்
தோறும் வெளியாகும் இளைஞர் மணி இணைப்பிதழில் ஒரு தொடர் எழுத துவங்கியிருக்கிறேன். கதை
வடிவில் சில ஆங்கில சொற்களையும் தொடர்களையும் அறிமுகப்படுத்துவது நோக்கம். ஒரு பக்கம்
காது கேட்காத ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர், சரளமாய் ஆங்கிலம் பேசும் அவரது நாய் ஜூலி
மற்றும் அவரிடம் ஆங்கிலம் கற்க விரும்பும் மாணவர் கணேஷ், அவர்களுக்கு பரிச்சயமானவர்கள்
என பாத்திரங்கள் வருவார்கள். கொஞ்சம் நகைச்சுவை, பகடி, அன்றாட நடப்பு பற்றின சேதிகள்
கொண்டு எழுதலாம் என இருக்கிறேன். இந்த இணைப்பில் தொடரின் முதல் பகுதியை பார்க்கலாம்:
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

Comments