தினமணியில் வெளியாகும்
என் ஆங்கிலம் கற்பிக்கும் பத்தியின் இரண்டாவது கட்டுரை இது. இதில் குடிகாரர் என்றொரு
பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறேன். அவரை ஆளாளுக்கு குடிக்காதீர்கள் என அறிவுரை சொல்லி
டார்ச்சர் செய்வதால் தன் பெயரையே குடிகாரர் என மாற்றிக் கொள்கிறார். Drunkard,
drunk ஆகிய சொற்களின் அடிப்படை வித்தியாசத்தை விளக்குகிறார். அதே போல முரண்பாடு கொண்ட
ஆங்கில சொற்கள் பற்றியும் இதில் பேசியிருக்கிறேன். உதாரணமாய் coconut என்பது கொட்டை
வகை (nut) இல்லை. இந்த தொடுப்பில் முழு கட்டுரையையும் படிக்கலாம்.
மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

கருத்துகள்