முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அற்பங்களின் உலகம்



சின்ன வயதில் இருந்து நான் நடக்கும் போது அடிக்கடி விழுந்து கொண்டிருப்பேன். வீட்டுக்குள் விழுந்து காயம் ஏற்படுவதை தவிர்க்க நான் வீட்டுக்குள் சக்கர நாற்காலி பயன்படுத்த துவங்கினேன். வெளியில் நடக்கையில் என் காலில் அணிந்திருக்கும் காலிப்பரின் லாக் சரியாக பொருந்தாமல் விழுந்து விடுவேன். இதில் ஒரு விசயம் என்னவென்றால் விழும் போது அந்த அரைநொடி எனக்கு இரண்டு மூன்று நிமிடங்களாய் ஸ்லோமோஷனில் போகும். அப்போது நான் “விழுந்து காலிப்பர் ஒடியக் கூடாதே” என மனதுக்குள் கவலைப்படுவேன். கவலைப்பட்டு முடிக்குமுன் கீழே கிடப்பேன். சரியாய் கீழே விழுந்து தரையில் தொடுகிற தருணம் என் நினைவில் இருக்காது.

 இது போன்ற நேரங்களில் எனக்கு வருத்தமோ பயமோ அவமானமோ ஏற்படுவதில்லை. சீவும் போது சீப்பில் நான்கு தலைமயிர்கள் கொத்தாய் வருவதை பார்ப்பது போல் ஒரு உணர்வு. இதுவரை விழுந்து ஒருமுறை கூட எனக்கு உடம்பில் அடிபட்டதும் இல்லை. விழுந்து விழுந்து அப்படி பழகி விட்டது. ஆனால் பார்ப்பவர்கள் பயந்து விடுவார்கள். அவர்கள் ரொம்ப கவலைப்படுவார்கள். முன்பு ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது. கிண்டி இண்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் என் வண்டியில் ஏறும் தவறி விழுந்து விட்டேன். மாலை ஏழரை இருக்கும். இருட்டான தனியான பகுதி. ஒருவர் அவ்வழியாய் வந்தார். அவரை அழைத்து என்னை தூக்கி எழுப்பி விடுமாறு கேட்டேன். அவர் என்னை ஏதோ குடித்து விட்டு கிடக்கிறவர் என நினைத்தார். எதற்கு வம்பு என என் பக்கத்தில் வரவே தயங்கினார். நான் அவரிடம் நான் போதையில் எல்லாம் விழவில்லை என விளக்கினேன். பிறகு என் வண்டியை பார்த்ததும் ஊனமுற்றவர் என நம்பிக்கை ஏற்பட்டு உதவி செய்தார். அந்த பகுதி வழியாக இப்போது போகும் போதெல்லாம் எனக்கு இதை நினைத்து சிரிப்பு வரும்.
இன்று ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது காலிப்பர் லாக் விழாமல் நான் விழுந்து விட்டேன். விழுந்த தாக்கத்தில் காலிப்பரின் நான்கைந்து ஆணிகள் கழன்று தெறித்து விட்டன. அதை குத்துமதிப்பாய் பொருத்தி நடந்து வீட்டுக்கு வந்து விட்டேன். நாளை மறுநாள் மதுரையில் சாகித்ய அகாதெமியின் கருத்தரங்கில் பேசுகிறேன். என்னுடன் நண்பர் லஷ்மி சரவணகுமார் மற்றும் வீரபாண்டியன் (பருக்கை நாவல்) ஆகியோர் பேசுகிறார்கள். நாளை மாலை ரயிலில் புறப்பட வேண்டும். நாளைக்குள் காலிப்பரை ரிப்பேர் பண்ண முடியாவிட்டால் பயணத்தை ரத்து பண்ண வேண்டியது தான்.
 நானெல்லாம் நாய்க்கு மாதம் ஐயாயிரம் ரூபாய்க்கு மீன் வாங்கி போடுவது பற்றியோ பத்தாயிரம் ரூபாய்க்கு ரெமி மார்டின் எப்படி குடிப்பது என்றோ கவலைப்படுவதில்லை. என் பிரச்சனைகள் சாதாரணமானவை. அற்பமானவை. செருப்பு வார் அறுத்தால் அதை ஒரு தெருவோரக் கடையில் நின்று பொறுமையாய் தைத்து வாங்கி போகும் இந்த நாட்டின் லட்சக்கணக்கான பேர்களைப் போன்றவன் நான். சுதந்திரம் சமத்துவம் போன்ற உயர்ந்த லட்சியங்களை பற்றி யோசிக்கவெல்லாம் நேரம் இருப்பதில்லை. நல்ல சாப்பாடு, வலியில்லாத உடல், கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் பெரிய திருப்தி. வாழ்க்கை என்றால் விலையுயர்ந்த அனைத்து இன்பங்களையும் அனுபவித்து கொண்டாட வேண்டும், அதிகாரத்துக்கு எதிராய் கலகம் செய்ய வேண்டும் என சொல்பவர்களை பார்த்தால் எனக்கு அந்நியமாய் தோன்றும். என் உலகம் சின்ன சின்ன விசயங்களால் ஆனது. இதை ஒரு நண்பரிடம் சொன்னால் “ஏன் கம்யூனிஸ்டுங்க மாதிரி பேசுறீங்க?” என்கிறார்.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அற்பர்க்ளின் உலகம் மிகவும் யதார்த்தம், எளிய சுவையான நடை
ஜம்புநாதன் டி.எஸ்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...