Skip to main content

புழுவை சாப்பிடும் சிங்கம்

மனிதர்கள் பற்றின நம் புரிதல் நாம் பார்க்கிறவர்களிடம் இருந்து உருவாகிறது. என்னுடன் இருப்பவர்கள் பளிச்சென்று புது சட்டை போட்டால் நான் சாயம் வெளுத்த சட்டை போடுவது பற்றி அவமானமாய் உணர்வேன். இப்படித் தான் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஒரு தரத்தை நமக்காய் நிர்ணயிக்கிறோம். அதன்படி நம்மை நாமே மதிப்பிடுகிறோம்.
 “லயன் கிங்” படத்தில் ஒரு அழகான காட்சி வரும். சிம்பா எனும் குட்டி சிங்கம் ஒரு பாலைவனத்திற்கு வந்து சேர்ந்து பசியிலும் களைப்பிலும் சோர்ந்து விழும். அப்போது அங்கு டிமன் எனும் மீர்க்கட்டும் (ஒரு சின்ன பாலூட்டி வகை) பும்பா எனும் பன்றியும் அவனுக்கு தோஸ்தாவார்கள். அவர்கள் அவனை உணவருந்த அழைப்பார்கள். சுற்றும் முற்றும் பார்த்தால் சாப்பிட மானோ முயலோ இல்லை. சிம்பா எதை சாப்பிட என யோசிக்கும் போது டிமனும் பும்பாவும் ஒரு பாறையை புரட்டிப் போடுவார்கள். கீழே ஈரமான இடத்தில் நிறைய புழுக்கள் நெளியும். டிமனும் பூம்பாவும் எச்சில் ஒழுக அவற்றை எடுத்து சுவைப்பார்கள். சிம்பாவுக்கு முதலில் குமட்டலெடுத்தாலும் மெல்ல மெல்ல அவற்றின் சுவையையும் அறிந்து ஏற்பான். நம்முடைய பழக்கத்தால் இதற்கு மேல் நம்மால் கீழே இறங்க முடியாது என நினைப்போம். ஆனால் எவ்வளவு கீழே போனாலும் உலகம் ஒன்று தான்.
சில வாரங்களுக்கு முன் என் டி.வி பழுதாகியது. கம்பெனி ஆள் பார்த்து விட்டு ரிப்பேர் செய்த பத்தாயிரம் ஆகும். புதிதாய் வாங்கி விடுங்கள் என்றார். புது டி.வி வாங்க என்னிடம் பணம் இல்லை. வீட்டில் அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு டி.வி இல்லாவிட்டால் வெறுப்பாகி விடும். முன்பு நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் புது டி.வி தேவையென்றால் நேரே கடைக்கு போய் பணத்தை நீட்டி வாங்கி விடுவேன். அன்று சாத்தியமான ஒரு எளிய விசயம் இன்று அசாத்தியம். சரி பழைய டி.வி ஒன்று வாங்கலாம் என முடிவு செய்து பழைய பொருட்களை விற்கும் கடைகளுக்கு சென்று தேடினேன். பழைய டிவியே பெரிய விலை சொன்னார்கள். நான் ரெண்டாயிரம் ரூபாய்க்குள் தேடினேன். ஆரம்பத்தில் ரெண்டாயிரத்தை ஒரு பெரிய தொகையாக நினைக்கும் நிலை வந்து விட்டதே என சங்கடம் ஏற்பட்டது. ஆனால் பாருங்கள் என் பட்ஜெட்டுக்குள் பழைய டிவி கூட மாட்டவில்லை. ரெண்டு நாள் கழித்து வாருங்கள் என்றார்கள். ரெண்டு நாள் கழித்தும் கிடைக்கவில்லை.
 பிறகு எதேச்சையாய் இன்னொரு கடையில் ஒரு டி.வி மாட்டியது. அதன் போர்டை மட்டும் மாற்றி உள்ளதாய் கூறினார்கள். அதை வாங்க அங்கு காத்து நின்ற போது என் நிலைமை வேறு யாருக்கும் இருக்காது என தோன்றியது. அப்போது ஒரு இளம் தம்பதி அங்கு என்னைப் போல பழைய டிவி தேடி வந்தார்கள். பார்க்க ரொம்ப ஏழைகளாய் படவில்லை. ஆனால் அவர்கள் பட்ஜெட்டோ என்னை விட கீழே இருந்தது. ரெண்டாயிரம் ரூபாய் டிவி கூட அவர்களுக்கு கட்டுப்படியாக வில்லை. நான் அங்கு நின்றிருந்த கொஞ்ச நேரத்தில் இந்த உலகில் எல்லா நிலையிலும் மக்கள் இருக்கிறார்கள் என உணர்ந்தேன். பொருளாதார நிலையை பொறுத்து மதிப்பீடும் தேவையும் ரசனையும் மாறுகின்றன.
பழைய டிவி அங்கங்கே அழுக்குப் படிந்து ஒரு புராதனப் பொருள் போல் இருக்கிறது. சில இடங்களில் அழுக்கு கறை துடைத்தாலும் நீங்கவில்லை. யார் எப்படி பயன்படுத்தினார்களோ என நினைக்க அருவருப்பு ஏற்பட்டது. ஆனாலும் என்ன ஒழுங்காய் வேலை செய்கிறது. என்னிடம் முதலில் இருந்த எல்.ஜி எல்.சி.டி டிவி போல் இதில் நிறங்கள் துல்லியமாய் தெரியவில்லை. நீலம் பச்சையாகவும் சிவப்பு ஊதா போலவும் தோன்றியது. இடது பக்கம் மேல் ஓரத்தில் அலையலையாய் நெளிகிறது. சிலநேரம் நெளிவில் மட்டையாடும் தோனி டிஸ்கோ நடனம் ஆடுகிறார். ஆனாலும் இப்போது பழகி விட்டது. எந்த குறையும் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் பணம் வந்தாலும் புது டிவி வாங்க தோன்றாது என நினைக்கிறேன்.
இப்போதெல்லாம் அந்த டிவியை பார்க்கும் போது கல்லைப் புரட்டிப் போட சிம்பாவின் முன் தோன்றின நெளியும் புழுக்களின் சித்திரம் தான் எனக்கு நினைவு வருகிறது. சிம்பா அதை சாப்பிட்டு பழகி பெரிதான பின் புழுக்களை மட்டும் தின்னும் சாதுவான சிங்கம் ஆகி விடுவான். எதற்கு கஷ்டப்பட்டு துரத்தி மான், மாடெல்லாம் வேட்டையாட வேண்டும், எதற்கு வேறு சிங்கங்களுடன் போட்டியிட்டு சண்டையெல்லாம் போட வேண்டும் என அவனுக்கு தோன்றும். கொஞ்சம் மாற்றி யோசித்தால் எல்லாம் இயல்பாகி விடுகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...