முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புழுவை சாப்பிடும் சிங்கம்

மனிதர்கள் பற்றின நம் புரிதல் நாம் பார்க்கிறவர்களிடம் இருந்து உருவாகிறது. என்னுடன் இருப்பவர்கள் பளிச்சென்று புது சட்டை போட்டால் நான் சாயம் வெளுத்த சட்டை போடுவது பற்றி அவமானமாய் உணர்வேன். இப்படித் தான் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஒரு தரத்தை நமக்காய் நிர்ணயிக்கிறோம். அதன்படி நம்மை நாமே மதிப்பிடுகிறோம்.
 “லயன் கிங்” படத்தில் ஒரு அழகான காட்சி வரும். சிம்பா எனும் குட்டி சிங்கம் ஒரு பாலைவனத்திற்கு வந்து சேர்ந்து பசியிலும் களைப்பிலும் சோர்ந்து விழும். அப்போது அங்கு டிமன் எனும் மீர்க்கட்டும் (ஒரு சின்ன பாலூட்டி வகை) பும்பா எனும் பன்றியும் அவனுக்கு தோஸ்தாவார்கள். அவர்கள் அவனை உணவருந்த அழைப்பார்கள். சுற்றும் முற்றும் பார்த்தால் சாப்பிட மானோ முயலோ இல்லை. சிம்பா எதை சாப்பிட என யோசிக்கும் போது டிமனும் பும்பாவும் ஒரு பாறையை புரட்டிப் போடுவார்கள். கீழே ஈரமான இடத்தில் நிறைய புழுக்கள் நெளியும். டிமனும் பூம்பாவும் எச்சில் ஒழுக அவற்றை எடுத்து சுவைப்பார்கள். சிம்பாவுக்கு முதலில் குமட்டலெடுத்தாலும் மெல்ல மெல்ல அவற்றின் சுவையையும் அறிந்து ஏற்பான். நம்முடைய பழக்கத்தால் இதற்கு மேல் நம்மால் கீழே இறங்க முடியாது என நினைப்போம். ஆனால் எவ்வளவு கீழே போனாலும் உலகம் ஒன்று தான்.
சில வாரங்களுக்கு முன் என் டி.வி பழுதாகியது. கம்பெனி ஆள் பார்த்து விட்டு ரிப்பேர் செய்த பத்தாயிரம் ஆகும். புதிதாய் வாங்கி விடுங்கள் என்றார். புது டி.வி வாங்க என்னிடம் பணம் இல்லை. வீட்டில் அம்மா இருந்தார்கள். அவர்களுக்கு டி.வி இல்லாவிட்டால் வெறுப்பாகி விடும். முன்பு நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் புது டி.வி தேவையென்றால் நேரே கடைக்கு போய் பணத்தை நீட்டி வாங்கி விடுவேன். அன்று சாத்தியமான ஒரு எளிய விசயம் இன்று அசாத்தியம். சரி பழைய டி.வி ஒன்று வாங்கலாம் என முடிவு செய்து பழைய பொருட்களை விற்கும் கடைகளுக்கு சென்று தேடினேன். பழைய டிவியே பெரிய விலை சொன்னார்கள். நான் ரெண்டாயிரம் ரூபாய்க்குள் தேடினேன். ஆரம்பத்தில் ரெண்டாயிரத்தை ஒரு பெரிய தொகையாக நினைக்கும் நிலை வந்து விட்டதே என சங்கடம் ஏற்பட்டது. ஆனால் பாருங்கள் என் பட்ஜெட்டுக்குள் பழைய டிவி கூட மாட்டவில்லை. ரெண்டு நாள் கழித்து வாருங்கள் என்றார்கள். ரெண்டு நாள் கழித்தும் கிடைக்கவில்லை.
 பிறகு எதேச்சையாய் இன்னொரு கடையில் ஒரு டி.வி மாட்டியது. அதன் போர்டை மட்டும் மாற்றி உள்ளதாய் கூறினார்கள். அதை வாங்க அங்கு காத்து நின்ற போது என் நிலைமை வேறு யாருக்கும் இருக்காது என தோன்றியது. அப்போது ஒரு இளம் தம்பதி அங்கு என்னைப் போல பழைய டிவி தேடி வந்தார்கள். பார்க்க ரொம்ப ஏழைகளாய் படவில்லை. ஆனால் அவர்கள் பட்ஜெட்டோ என்னை விட கீழே இருந்தது. ரெண்டாயிரம் ரூபாய் டிவி கூட அவர்களுக்கு கட்டுப்படியாக வில்லை. நான் அங்கு நின்றிருந்த கொஞ்ச நேரத்தில் இந்த உலகில் எல்லா நிலையிலும் மக்கள் இருக்கிறார்கள் என உணர்ந்தேன். பொருளாதார நிலையை பொறுத்து மதிப்பீடும் தேவையும் ரசனையும் மாறுகின்றன.
பழைய டிவி அங்கங்கே அழுக்குப் படிந்து ஒரு புராதனப் பொருள் போல் இருக்கிறது. சில இடங்களில் அழுக்கு கறை துடைத்தாலும் நீங்கவில்லை. யார் எப்படி பயன்படுத்தினார்களோ என நினைக்க அருவருப்பு ஏற்பட்டது. ஆனாலும் என்ன ஒழுங்காய் வேலை செய்கிறது. என்னிடம் முதலில் இருந்த எல்.ஜி எல்.சி.டி டிவி போல் இதில் நிறங்கள் துல்லியமாய் தெரியவில்லை. நீலம் பச்சையாகவும் சிவப்பு ஊதா போலவும் தோன்றியது. இடது பக்கம் மேல் ஓரத்தில் அலையலையாய் நெளிகிறது. சிலநேரம் நெளிவில் மட்டையாடும் தோனி டிஸ்கோ நடனம் ஆடுகிறார். ஆனாலும் இப்போது பழகி விட்டது. எந்த குறையும் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் பணம் வந்தாலும் புது டிவி வாங்க தோன்றாது என நினைக்கிறேன்.
இப்போதெல்லாம் அந்த டிவியை பார்க்கும் போது கல்லைப் புரட்டிப் போட சிம்பாவின் முன் தோன்றின நெளியும் புழுக்களின் சித்திரம் தான் எனக்கு நினைவு வருகிறது. சிம்பா அதை சாப்பிட்டு பழகி பெரிதான பின் புழுக்களை மட்டும் தின்னும் சாதுவான சிங்கம் ஆகி விடுவான். எதற்கு கஷ்டப்பட்டு துரத்தி மான், மாடெல்லாம் வேட்டையாட வேண்டும், எதற்கு வேறு சிங்கங்களுடன் போட்டியிட்டு சண்டையெல்லாம் போட வேண்டும் என அவனுக்கு தோன்றும். கொஞ்சம் மாற்றி யோசித்தால் எல்லாம் இயல்பாகி விடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...