முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெங்கட் சாமிநாதன்



திரு.வெங்கட் சாமிநாதன் மறைந்தார். அவருக்கு என் துயரார்ந்த அஞ்சலி. வெங்கட் சாமிநாதனுக்கு இரு முகங்கள். ஒன்று உக்கிரமானது. கண்ணை மூடி வாளை சுழற்றும் போர் வீரனுக்கு உரியது. இன்னொன்று மென்மையானது. கனிவானது.

நான் அவரை முதலில் சந்தித்தது என் பத்தொன்பதாவது வயதில். ஜெயமோகன் ஊட்டியில் நடத்திய இலக்கிய முகாமில் கலந்து கொண்டிருந்தேன். நித்ய சைதன்ய யதி ஆசிரமத்தின் அறைகளில் முகாமில் பங்கு பெற்றோர் தங்கி இருந்தோம். தாழ்வான கூரை கொண்ட ஜன்னலற்ற சின்ன அறை. அங்கே என்னுடன் கவிஞர் தேவதேவன் தங்கி இருந்தார். அவர் மிகவும் அமைதியாக இருந்தார். இரவில் உணவருந்த போகும் போது “வாங்க” என கண்களை மென்மையாய் தாழ்த்தி சொல்வார். அதற்கு மேல் பேச மாட்டார். என்னை அழைத்து விட்டு அவர் ஒரு தென்றலை போல் கழன்று மிதந்து சென்று விடுவார். பக்கத்து அறையில் வெங்கட் சாமிநாதன் இருந்தார். நான் அவருடனும் ஆசிரமத்தின் தலைமை துறவியான வினய சைதன்ய யதியுடனும் ஓயாமல் பேசிக் கொண்டிருப்பேன். வினய சைதன்ய யதி விளையாட்டுத்தனமும் துடுக்கும் மிக்கவர். வெங்கட் சாமிநாதன் ஒரு தாத்தாவின் பரிவும் கனிவும் மிக்கவர். நான் அவரிடம் மிகவும் நெருக்கமாய் உணர்ந்தேன். ஒவ்வொரு நாளும் காலையில் உணவருந்துவதில் துவங்கி கூட்டங்களில் கலந்து கொண்டு இரவு உணவு வரை அவர் என் கூடவே வந்து என்னை மென்மையாய் கவனித்துக் கொள்வார். ஒரு பெரியவர் நம்மை கட்டுப்பாட்டில் வைத்து பார்த்துக் கொள்ளும் உணர்வே இராது. ஒரு நண்பனைப் போல், சமவயதினனைப் போல் நடத்தினார். ஊருக்கு வந்த பின்னரும் நான் அவருடன் தொடர்பில் இருந்தேன். சென்னைக்கு படிக்க வந்த போது அவரை சந்திக்க விரும்பினேன். ஆனால் “என் வீடுள்ள தெரு ரொம்ப குண்டு குழியாக இருக்கும். நீங்க சிரமப்பட்டு வர வேண்டாம்” என்று விட்டார்.
 அவர் பொதுவாய் மிக மெதுவாய் அமைதியாய் குறிப்பிட்ட ஒரு விசயத்தை மட்டும் வலியுறுத்தி பேசுவார். பேச்சில் எப்போதும் கருத்து/கவன சிதறல் இராது. ஆனால் எழுத்தில் நாம் பார்க்கும் வெங்கட் சாமிநாதன் முதிர்ச்சியின்மையும் ஆவேசமும் கொண்டவர். பேச்சில் உள்ள நிதானத்தை அவரது எழுத்தில் காண இயலாது. அன்றுள்ள நவீனத்துவர்களைப் போல் அவர் புறவயமான கருத்தியல்களில் ஆர்வம் காட்டவில்லை. கலையை கலையின் மொழி மூலமே அறியலாம் என நம்பினார். உதாரணமாய் ஒரு சிறந்த கவிதையை மற்றொரு சிறந்த கவிதையுடன் ஒப்பிட்டு மதிப்பிட்டு அறிவது. அவருக்கு இடதுசாரிகளுடன் இருந்த முரண்பாடு இந்த அக-புற பார்வைகள் சார்ந்ததே. வாழ்க்கையை முழுக்க புறவயமாய் வகுத்து புரிய முயன்ற இடதுசாரிகளிடம் அவர் இயல்பாகவே மாறுபட்டார்.
அவருக்கு நாட்டார் நிகழ்த்து கலைகளின் மீது அபார ஈடுபாடு இருந்தது. இன்று நாட்டார் கலைகளை சமூக அறிவுக்காய் ஆய்வு செய்யும் நோக்கு பரவலாய் உள்ளது. ஆனால் வெங்கட் சாமிநாதன் இக்கலைகளின் சன்னத நிலை, அப்போது கூடி வரும் அனுபூதி மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். ஊட்டி முகாமிலும் பின்னர் என்னிடம் தனிப்பட்ட முறையிலும் மிகவும் ஆர்வத்துடன் இது குறித்து உரையாடினார். உலக உண்மையை அறிவை கைவிடுவதன் மூலம் மட்டுமே உணர முடியும் என நம்பினார். இலக்கியத்தையும் பண்பாட்டையும் கோட்பாடுகளாய் வகுத்துப் பார்க்க முயன்றவர்கள் மீது கடும் அதிருப்தி கொண்டார்.
ஆனால் இந்த முரண்பாட்டை, மாறுபட்ட நிலையை தர்க்கரீதியாய் முன்வைக்க, விவாதித்து புது கருத்து நிலையை சென்றடைய அவரால் முடிந்ததில்லை. அவருக்கு தர்க்க விவாதம் ஒவ்வாதது. ஆனால் தன் அதர்க்கவாதத்தை நிறுவ அவருக்கு தர்க்கம் தேவைப்பட்டது. கருத்தியல்களில் அவரது பயிற்சியின்மையை இன்று அவரது கட்டுரைகளை வாசிக்கையில் உணர முடிகிறது. பல இடதுசாரி நிலைப்பாடுகளை அவர் மூர்க்கமாய் எதிர்க்க முனைகிறாரே ஒழிய அவர் முன்வைக்கும் வாதங்கள் சொதப்பலாய் உள்ளன. வெற்று உணர்ச்சியும் இலக்கற்ற வார்த்தைக் குவியல்களூமாய் இன்று அவரது எழுத்து நமக்கு தோன்றுகிறது.
ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் அவரது எழுத்துக்களை படிக்க நேர்கையில் எனக்கு ஆயாசமும் ஏமாற்றமும் தான் எஞ்சியது. ஆனால் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மனிதராய் அவரை எனக்குத் தெரியும். அவர் சனாதனி என கூறுகிறவர்கள் உண்டு. ஆனால் சாதி வெறுப்பை மனித உறவுகளில் காட்டுபவர் அல்ல. சொல்லப்போனால் பல முற்போக்காளர்களை விட பரிவும் கனிவும் மிக்கவராகவே அவர் எனக்கு தென்பட்டார். மனிதன் முரண்பட்ட குணாதசியங்களால் ஆனவன். இதில் எதை ஒருவரது ஆதார குணமாய் எடுத்துக் கொள்வது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...