முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நயன்தாரா சீஹல்லின் விருது அதிர்ச்சி மதிப்பு போராட்டம்



தாத்ரியில் இந்துத்துவா அரசியல்வாதிகள் நடத்திய படுகொலையை கண்டித்து நயன்தாரா சாஹல் தனது சாகித்ய அகாதெமி விருதை திரும்ப அளிப்பதாய் கூறியுள்ளார். அவர் 1987இல் விருது பெற்றார். அதற்கு இரு வருடங்களுக்கு முன்பு தான் சீக்கியர்களை காங்கிரஸ் அரசு கொடுமையான முறையில் வேட்டையாடி கொன்றது. அந்த படுகொலைகளைக் கண்டித்து ஏன் சாஹல் அப்போதே விருதை வாங்க மறுக்கவில்லை. அதன் பின்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும், மதக்கலவரங்கள் நடத்தப்பட்ட போதும் அவர் ஏன் விருதை திரும்ப அளிக்கவில்லை ஆகிய கேள்விகளை ராஜ்திப் சர்தேசாய் இக்கட்டுரையில் எழுப்புகிறார்.

 சாஹல் இதற்கு அளிக்கும் பதிலான “இப்போது மட்டுமே இந்துத்துவா அரசு ஆட்சியில் இருக்கிறது” என்பது ஏற்கும் படியாய் இல்லை. ஏனென்றால் காங்கிரசும் மென்மையான இந்துத்துவா அரசியல் கொண்டது தான். நரசிம்மராவ் ஆட்சியில் அவர் மதக்கலவரங்களை, இஸ்லாமியர்களின் படுகொலைகளை தடுக்கவில்லை. ஏனென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ் சார்பு கொண்டவர். அறுபதுகளிலேயே ஐந்து மாநிலங்களில் பசுவதை சட்டத்தை இயற்றியது காங்கிரஸ் அரசாங்கம் தான். காந்தியின் மரணத்துக்கு கருத்தியல் பின்புலம் நல்கிய சவார்க்கரை விடுதலை போராட்ட தியாகி என வர்ணித்து அவர் மீதான தடையை நீக்கி அவரை சுதந்திரமாய் இயங்க அனுமதித்ததும் காங்கிரஸ் தான். எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி சீக்கியர்களின் படுகொலைக்கு எதிராய் அன்று தீவிரமாய் போராடிய சாஹல் ஏன் விருதை மட்டும் ஏற்றுக் கொண்டார் என்பது.
 நான் அடிப்படையில் இதை ஒரு அதிர்ச்சி மதிப்பு போராட்டமாகத் தான் பார்க்கிறேன். ஆனால் அத்தகைய போராட்டங்கள் தற்காலிகமானவை. அரசை நாம் கண்டிக்கலாம், விமர்சிக்கலாம், ஆனால் ஒரேயடியாய் அதனுனான உறவை துண்டிக்கும் விதத்தில் செயல்படக் கூடாது. அது ஒருவிதத்தில் இந்துத்துவா சக்திகளுக்கே சாதகமாய் முடியக் கூடும்.

87இல் அவர் விருதை ஏற்றதில் தவறில்லை. அது அவரது இலக்கிய செயல்பாட்டுக்காய் வழங்கப்பட்டது. நீங்கள் ஒரு அரசை விமர்சிக்கும் வேளையில் அது அளிக்கும் அங்கீகாரத்தை மறுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம் விமர்சனத்துக்கு உள்ளாகிறவர்கள் நம் எதிர்தரப்பினரே அன்றி எதிரிகள் அல்ல. எதிர்தரப்பினோடு முரண்படும் போது அவர்களை முழுக்க நிராகரிக்க வேண்டியதில்லை. முரண்படுவது ஒருவரை மாற்றத்தானே ஒழிய மறுக்க அல்ல.

சாஹலை தொடர்ந்து அஷோக் வஜ்பய் என்னுடம் இன்னொரு பெருந்தலையும் விருதை திரும்ப அளிக்கிறார். சாஹல் நேருவின் சகோதரியின் மகள். அஷோக் வஜ்பய் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் லலித் கலா அகாதெமியின் தலைவராய் இருந்தவர். முன்னாள் அரசு அதிகாரி. இருவருக்குமே ஒரு மறைமுக காங்கிரஸ் தொடர்பு உள்ளது. இருவரும் அதிகார வட்டத்தை சேர்ந்தவர்கள். எலைட்டுகள். சாஹல் தான் காங்கிரசோடு தொடர்பற்றவர் என கூறினாலும் அவரது போராட்டங்களுக்கு என்று ஒரு தொடர்ச்சி இல்லை என்பது சிக்கலானது. கடந்த பத்து வருடங்களில் இதைவிட கொடுமையான மதக்கலவரங்களை பா.ஜ.க நடத்திய போது அவர் எங்கு போனார்? காங்கிரஸ் ஆட்சியில் மோசமான ஊழல்கள் நடந்த போது என்ன செய்து கொண்டிருந்தார்? ஒருவேளை இப்போது அவர் தன் சகிப்புத்தன்மையை இழந்திருக்கலாம். ஆனால் அரசியல் எதிர்வினை ஆற்றுகிறவர்கள் அவ்வப்போது மட்டுமே உயிர்கொள்கிறவராய் இருக்க கூடாது. அது பல சந்தேகங்களை தூண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...