Skip to main content

தமிழ் எழுத்தாளன் விருதை திரும்ப அளிக்க வேண்டுமா?




இதுவரை மூன்று எழுத்தாளர்கள் மோடி அரசை கண்டித்து தம் சாகித்ய அகாதெமி விருதை திரும்ப கொடுத்திருக்கிறார்கள். விருதை திரும்ப அளிக்கும் மனநிலை ஒரு தொற்றுநோய் போல், தற்கொலை விருப்பம் போல் பரவுகிறது. தமிழில் எழுத்தாளர்களும் திரும்ப கொடுப்பார்களா என கேட்கிறார்கள். எனக்கு இது ஒரு கவன ஈர்ப்பு, குறியீட்டு நடவடிக்கையை நாம் தவறாய் புரிந்து கொள்வதன் விளைவு என தோன்றுகிறது.
நான் ஏற்கனவே சாஹல் பற்றி ஒரு விசயம் எழுதியிருந்தேன். கூட்டங்கூட்டமாய் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட இரு வருடங்கள் கழித்து காங்கிரஸ் அரசாட்சியின் போது அவர் எந்த தயக்கமும் இன்றி சாகித்ய அகாதெமி விருதை பெற்றார். இத்தனைக் காலமும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க அரசுகளின் ஆட்சிகளில் பல தவறுகள், குற்றங்கள், பாதகங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் சாஹல் அப்போதெல்லாம் பொறுத்தார். இப்போது அவர் அவநம்பிக்கையின் உச்சிக்கு சென்று விட்டார். இந்த அரசுடன் விவாதிக்கவே முடியாது எனும் கசப்புணர்வில் அவர் விருதை திருப்பி அளிக்க போவதாய் சொல்கிறார். அவரைத் தொடர்ந்து ஒவ்வொருவராய் விருதை திரும்ப அளிக்கிறார்கள்.


ஆனால் இது ஒரு போராட்ட முறைமை அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களூக்கு நீதி வேண்டி பெண்கள் மேலாடை இன்றி பொதுவில் சென்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதற்காய் ஊரிலுள்ள மிச்ச பெண்களிடம் எல்லாம் போய் நீங்களும் மேலாடை இன்றி நடக்க வேண்டும் என கேட்க முடியாது. ஒரு பிரச்சனை கொழுந்து விட்டு எரியும் போது சிலர் தம்மை தீக்கிரையாக்குவார்கள். அதற்காய் போராடுபவர்கள் எல்லாரும் தம்மை எரிப்பதில்லை. அப்படி எரித்தால் போராட ஆட்களே இருக்க மாட்டார்கள். வறுமையின்/மணவாழ்க்கையின் கொடுமை தாளாமல் குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் குதித்து சாகும் அம்மாக்கள் உண்டு. அதற்காய் பிரச்சனை ஏற்படும் போது எல்லாரும் பிள்ளைகளை கிளற்றில் எறிய வேண்டுமா? உணர்ச்சி மேலிடும் போது நாம் நம் உடைமை, அங்கீகாரம் அல்லது உயிரை கூட தியாகம் செய்ய நினைக்கலாம். அதற்கு ஒரு மதிப்பு நிச்சயம் உண்டு. ஆனால் ஒரு குறியீடு என்பதைக் கடந்து இச்செயல்களுக்கு அர்த்தம் இல்லை. எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப கொடுப்பதால் இந்துத்துவா படுகொலைகள் நின்று விடும் என எதிர்பார்ப்பது பத்தாம்பசலித்தனம்.

 மதப்படுகொலைகள் மற்றும் மனித உரிமை குற்றங்களுக்கு எதிராய் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைவது தான் சரியான போராட்ட முறைமை. ஒருவர் விருதை திரும்ப அளிப்பது துவக்கமாய், உணர்ச்சிகரமான இணைப்பு புள்ளியாய் இருக்கலாம். ஆனால் எழுத்தாளர்கள் மொத்தமாய் விருதுகளை திரும்ப அளிப்பது என்பது இப்போராட்டத்தை நீர்த்து போகவே வைக்கும். அடுத்த வாரத்துடன் மக்களூம் மீடியாவும் இதில் ஆர்வம் இழந்து விடுவார்கள். பத்து நாள் கழித்து நீங்கள் விருதை திரும்ப அளிப்பதாய் சொன்னால் ஒருவரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் வாங்கிய போதே அவர்கள் பொருட்படுத்தவில்லையே!

ஆனால் எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக மீடியாவிலும் பொதுவெளியிலும் இந்துத்துவா அடக்குமுறைக்கு எதிராய் செயல்படுவதற்கு ஒரு நீடித்த தாக்கம் இருக்கும். இந்தியாவில் முற்போக்காளர்கள் ஒரு சிறிய கூட்டம் மட்டுமே. அவர்களுக்கு அதிகாரமோ மக்கள் பின்புலமோ குறைவு. ஆனால் சமூக மனசாட்சியிடம் தொடர்ந்து உரையாட அவர்களால் மட்டுமே முடியும். ஒருவேளை ஒருவர் தீக்குளிப்பது போன்றோ விருதை திரும்ப கொடுப்பது போன்றோ இவ்வுரையாடல் பரபரப்பாய் இருக்காது. ஆனால் நீதியை காப்பாற்றுவதற்கு நீண்ட கால போராட்டங்களும் உரையாடல்களும் தான் அவசியமே அன்றி தற்காலிக சலசலப்புகள் அல்ல. வா.கீதாவோ, அ.மார்க்ஸோ தீக்குளிக்கவோ நிர்வாண ஊர்வலம் செல்லவோ மாட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு நீடித்த போராட்ட பாணியும் வரலாறும் உள்ளது. நாம் இன்று நின்று பேசும் களத்தை அவர்கள் உருவாக்கி அளித்தார்கள். ஒரு பரபரப்பின், திடீர் கோபத்தின் அடிப்படையில் கிளம்பும் சமூக போராட்டம் சீக்கிரமே பிசுபிசுத்துப் போகும். டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் போல. கடைசியில் எல்லாமே மீடியா யானைக்கு கவளங்களை ஊட்டும் வேடிக்கை செயலாக மாறி விடும்.

இடதுசாரி இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நிலப்பிரபுத்துவ குடும்பங்களை சேர்ந்தவர்களும் தான் கணிசமாய் கலந்து தீவிரமாய் போராடினார்கள். அவர்கள் தம் சொத்துக்கள் அனைத்தையும் கைவிட்டு நிலங்களை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை. அப்படியான ஸ்டண்டுகளுக்கு நடைமுறையில் இடமிருப்பதில்லை. ஒரு அமைப்புக்குள் இருந்தபடி சிறுக சிறுக அதனுடன் உரையாடி அதை மாற்றுவது தான் நம்மால் சாத்தியமான ஒன்று. ஒரு சமூக பிரச்சனைக்கு மீடியா இரண்டு நாள் அவகாசம் மட்டுமே அளிக்கும். அதற்காய் இரண்டே நாளில் அது முடிந்து போகாது. இரண்டு நாட்களுக்குள் எல்லாரும் தத்தம் ஆடைகளை களைந்து, உயிரை துறந்து, விருதுகளையும், அங்கீகாரங்களயும் விட்டுக் கொடுத்து, குழந்தைகளை கிணற்றில் எறிந்து மீடியா ஆவேசத்தில் பங்கு கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் பத்தினி இல்லை என வற்புறுத்துவது என்ன அபத்தம்!

அதனால் நண்பர்களே சில நாட்களில் இப்பிரச்சனை முடிந்ததும் விருதை திரும்ப அளித்த எழுத்தாளர்கள் தம் சோலியை பார்க்க போய் விடுவார்கள். இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறவர்கள் எந்த சத்தமும் இன்றி அதை தொடர்ந்து நடத்துவார்கள். மதவாத அநீதிகள் அடுத்த நூற்றாண்டிலும் தொடரும். அப்போதும் அதற்கு எதிராய் காத்திரமாய் செயல்படுகிறவர்கள் இருந்து கொண்டிருப்பார்கள். நடுநடுவே ஸ்டண்ட் அடிப்பவர்களும் வருவார்கள். இது நிதர்சனம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...