முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமையின் மாதம்



உயிர்மை எனக்கு சொந்த வீடு போல. உயிர்மையில் எழுதின கட்டுரைகள் வழியாக அதன் பல முகங்களில் ஒன்றாகவே நான் அறியப்பட்டு வருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு மாதம் கூட தவறாமல் உயிர்மையில் எழுதி வந்திருக்கிறேன். இம்மாதம் முதன்முறையாய் இடநெருக்கடி காரணமாய் என் கட்டுரை இடம்பெறவில்லை. இனியும் தொடர்ந்து எழுதத் தான் போகிறேன் என்றாலும் ஒரு பெரிய உறவு முடிந்து போகிற கலக்கமும் பதற்றமும் என்னை சட்டென தாக்கின. நீண்ட நேரமாய் இதழை கையில் வைத்து பார்த்தபடியே இருந்தேன்.


முதன்முறையாய் என் கட்டுரை கவர் ஸ்டோரியாய் இடம் பெற்ற போது அத்தகவலை மனுஷ்யபுத்திரன் எனக்கு போனில் அழைத்து தெரிவித்தார். அப்போது நான் கொடைக்கானலில் ஒரு காட்டேஜில் இருந்தேன். மலைச்சரிவின் பக்கச்சுவர் ஒன்றை பிடித்து நின்றபடி அவரிடம் மனக்கிளர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி எனக்கு மீண்டும் மீண்டும் நினைவு வந்தது. உயிரோசையில் நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அவர் என்னிடம் வாராவாரம் போனில் பேசுவார். என்ன கட்டுரை எழுத உத்தேசிக்கிறேன் என விசாரிப்பார். கட்டுரை படித்த பின் விரிவாக அக்கறையுடன் நிறைய பேசுவார். எந்த எடிட்டரும் இது போல் ஒரு இளைய எழுத்தாளனிடம் அக்கறை காட்டியிருக்க மாட்டார்கள். உயிர்மையில் தொடர்ந்து எழுதிய வருடங்களிலும் மாதாமாதம் அவர் நான் எழுதப் போகிற கட்டுரை பற்றி கேட்காமல் இருந்ததில்லை. இம்மாதம் மட்டும் நேரமின்மை காரணமாய் அவருக்கு பேச இயலாமல் போயிற்று. இது ஒரு சின்ன விசயம் தான். ஆனால் எழுத்தாளனுக்கு இந்த விசாரிப்பும் அக்கறையும் ஒரு முக்கியமான அரவணைப்பு. அது இல்லாமல் போவது, ஒரே ஒரு தடவை என்றாலும், அவன் தவித்துப் போகிறான். படைப்பு பிரசுரமாவதை விட அவர் கேட்பதும், அவருக்காய் நான் அதை எழுதுவதும் எனக்கு அளித்துள்ள உவகையும் திருப்தியும் வர்ணிக்க இயலாத ஒன்று. ஐந்து வருடங்களில் முதன்முறையாய் இன்று நான் மிகவும் தனிமையாய் உணர்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...