முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமையின் மாதம்



உயிர்மை எனக்கு சொந்த வீடு போல. உயிர்மையில் எழுதின கட்டுரைகள் வழியாக அதன் பல முகங்களில் ஒன்றாகவே நான் அறியப்பட்டு வருகிறேன். கடந்த ஐந்து வருடங்களாக ஒரு மாதம் கூட தவறாமல் உயிர்மையில் எழுதி வந்திருக்கிறேன். இம்மாதம் முதன்முறையாய் இடநெருக்கடி காரணமாய் என் கட்டுரை இடம்பெறவில்லை. இனியும் தொடர்ந்து எழுதத் தான் போகிறேன் என்றாலும் ஒரு பெரிய உறவு முடிந்து போகிற கலக்கமும் பதற்றமும் என்னை சட்டென தாக்கின. நீண்ட நேரமாய் இதழை கையில் வைத்து பார்த்தபடியே இருந்தேன்.


முதன்முறையாய் என் கட்டுரை கவர் ஸ்டோரியாய் இடம் பெற்ற போது அத்தகவலை மனுஷ்யபுத்திரன் எனக்கு போனில் அழைத்து தெரிவித்தார். அப்போது நான் கொடைக்கானலில் ஒரு காட்டேஜில் இருந்தேன். மலைச்சரிவின் பக்கச்சுவர் ஒன்றை பிடித்து நின்றபடி அவரிடம் மனக்கிளர்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி எனக்கு மீண்டும் மீண்டும் நினைவு வந்தது. உயிரோசையில் நான் எழுத ஆரம்பித்த காலத்தில் அவர் என்னிடம் வாராவாரம் போனில் பேசுவார். என்ன கட்டுரை எழுத உத்தேசிக்கிறேன் என விசாரிப்பார். கட்டுரை படித்த பின் விரிவாக அக்கறையுடன் நிறைய பேசுவார். எந்த எடிட்டரும் இது போல் ஒரு இளைய எழுத்தாளனிடம் அக்கறை காட்டியிருக்க மாட்டார்கள். உயிர்மையில் தொடர்ந்து எழுதிய வருடங்களிலும் மாதாமாதம் அவர் நான் எழுதப் போகிற கட்டுரை பற்றி கேட்காமல் இருந்ததில்லை. இம்மாதம் மட்டும் நேரமின்மை காரணமாய் அவருக்கு பேச இயலாமல் போயிற்று. இது ஒரு சின்ன விசயம் தான். ஆனால் எழுத்தாளனுக்கு இந்த விசாரிப்பும் அக்கறையும் ஒரு முக்கியமான அரவணைப்பு. அது இல்லாமல் போவது, ஒரே ஒரு தடவை என்றாலும், அவன் தவித்துப் போகிறான். படைப்பு பிரசுரமாவதை விட அவர் கேட்பதும், அவருக்காய் நான் அதை எழுதுவதும் எனக்கு அளித்துள்ள உவகையும் திருப்தியும் வர்ணிக்க இயலாத ஒன்று. ஐந்து வருடங்களில் முதன்முறையாய் இன்று நான் மிகவும் தனிமையாய் உணர்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.