Skip to main content

பீகார் தேர்தல் முடிவு சொல்வதென்ன?

பீகார் தேர்தலில் பா.ஜ.க பெற்றுள்ள பெரும் தோல்வி பற்றி சில செய்திக் கட்டுரைகள் படித்தேன். பா.ஜ.க மதவாத, பிரிவினைவாத பிரச்சாரம் செய்ததால் தோற்றது எனத் தான் பொதுவாக பல கட்டுரையாளர்களும் சொல்கிறார்கள். இத்தோல்வி ஒரு பலத்தமான அடி எனும் மீடியா கணிப்பு சரி தான். அடுத்து வரப் போகும் தமிழக, மேற்கு வங்காள தேர்தல்களில் எப்படியும் பா.ஜ.கவுக்கு எலும்புத் துண்டுகளே கிடைக்கும். அஸாம் தேர்தலில் பா.ஜ.க நிமிர வாய்ப்புண்டு என்கிறார்கள். எப்படியும் மீண்டும் ஒரு வலுவான தேர்தல் வெற்றி கிடைக்க பா.ஜ.க அடுத்து இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


 பீகார் தேர்தலில் மிகவும் மும்முரமாய் பிரச்சாரம் செய்த மோடி மக்களிடம் தன் அபிமானத்தை இழந்து விட்டதான ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு பிரதமர் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து மைக் பிடித்து உள்ளூர் கட்சியை போட்டிக்கு இழுப்பதன் சிக்கல் இது. நம் வரலாற்றில் எந்த பிரதமரும் இந்தளவுக்கு மாநில பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை. மோடி கட்சித் தலைவரா அல்லது தொண்டரா எனும் குழப்பம் ஏற்படுகிறது. ஏனென்றால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கிழித்த கோட்டை தாண்டாத ஒரு பள்ளி மாணவனைப் போன்றே அவர் நடந்து கொள்கிறார். அவர் அதிகாரங்களை முழுக்க தன்னிடத்து மையமாக்கிய சர்வாதிகாரி என்றார்கள். ஆனால் கட்சியின் துக்கடாக்களை கூட அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஏதோ மாவட்ட செயலாளர் போல் கூப்பிட்ட இடங்களில் எல்லாம் போய் கலந்து கொண்டு சின்ன தலைவர்களுடன் மல்லுக்கு நின்று மண்ணைக் கவ்வுகிறார். இதனோடு ஒப்பிடுகையில் காங்கிரஸ் தலைமை மாநில தேர்தல் பிரச்சாரங்களை இன்னும் கவனமாய் கௌரவமாய் கையாண்டதாய் கூறலாம். காங்கிரஸின் மாநில தேர்தல் தோல்விகளை யாரும் சோனியாவின் முகத்தில் பூசப்பட்ட கரியாக காணவில்லை. கட்சி மீது வாஜ்பாய்க்கு இருந்த பிடிமானமும் அதிகாரமும் கூட மோடிக்கு உள்ளதா என்பது சந்தேகம் தான்.

மோடியின் பிம்பம் நிஜமாகவே சரிந்து விட்டதா? பழைய நகை போல் அவர் சற்று மங்கி விட்டார். முக்கியமான காரணம் அருண் ஷோரி சொல்வது போல மோடியால் தான் முன்வைத்த பொருளாதார சீர்திருத்த/ முன்னேற்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பது. பொருளாதாரம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போலத் தான் இப்போதும் உள்ளது. தேசிய அளவில் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளை துவங்குவதிலோ புது தொழில்களை ஊக்குவிப்பதிலோ மோடிக்கு கவனம் இல்லை. உண்மையில் இந்த அரசாங்கத்துக்கு செலவு செய்ய காசும் இல்லை தான். அது battery saving modeஇல் இருக்கிறது. நிதியை செலவு செய்யாமல் சிக்கனம் பிடிக்கிறது. நிதியை செலவிடாவிட்டால் மக்கள் அதிக வறுமையில் மூழ்குவார்கள். செலவிட்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். குரங்கின் வால் ஆப்பில் மாட்டியது போல் தான்.

 மோடி பிரதமாராகும் தருணத்தில் சொர்க்க ராஜ்ஜியம் மண்ணில் வரும் என புகழ்ந்தார்கள். அப்போது நான் உயிர்மையில் எழுதிய கட்டுரையில் (என்ன செய்ய போறீங்க மிஸ்டர் மோடி?) நமது பொருளாதார மந்தநிலை மாறாமல் தொடரும் என்றிருந்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அசோகமித்திரனை சந்தித்த போது “இப்போ தானே ஆட்சிக்கு வந்திருக்காங்க. இப்பவே தீர்ப்பெழுதினா எப்பிடி?” என்றார். ஆனா இப்போது போதுமான காலம் கடந்து விட்டது. இந்த தேசத்தில் எதுவும் மாறவில்லை. மாற்றத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள் எதையும் மாற்றாவிட்டால் மக்கள் ஏமாற்றம் கொள்வார்கள் தானே? இன்றும் கிராமங்களில் வேலையில்லை. நகரங்களில் வேலையுண்டு. ஆனால் கிடைக்கிற சம்பளத்தில் சாதாரணமாய் வாழவே தடுமாற வேண்டி உள்ளது. நாம் ஒரு மூட்டை நிறைய பணத்துடன் ஓட்டலில் சாப்பிட போகும் காலம் விரைவில் வரும் என இயக்குநர் ராம் ஒரு பேட்டியில் சொன்னார். அக்காலம் வந்து கொண்டே இருக்கிறது. மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் போது மோடியை இன்னும் நம்பிக்கை நாயகனாக காட்டி வாக்கு வாங்க முடியாது என்பதையே பீகார் தேர்தல் காட்டுகிறது.

பீகார் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் பா.ஜ.க பிரச்சாரத்தை பொருளாதார வளர்ச்சியில் இருந்து மதவாதம், பிரிவினைவாதம் நோக்கி நகர்த்தியதாகவும் அதுவே பெரும் சறுக்கலுக்கு காரணம் என்றும் கூறுகிறார்கள். அவர்களின் ’பொருளாதார மாற்றம்’ பிரச்சாரம் நடப்பில் சொதப்பியதை உணர்ந்து கொண்டதால் தான் அவசரமாய் பிரிவினைவாதத்தை கையில் எடுத்தார்கள் என புரிந்து கொள்கிறேன். மற்றபடி மதவாதம், இட ஒதுக்கீடு ஆகியவை முழுமையான தோல்வி காரணங்களாய் இருக்காது. ஏனென்றால் போன முறை பா.ஜ.க வென்ற போது அது ஒரு இந்துத்துவா கட்சியாகத் தானே இருந்தது? இம்முறை பீகார் மக்கள் நித்தீஷை நம்ப தலைப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான்.

 ஆட்சிக்கு வந்த பின் பா.ஜ.க தன்னை எவ்விதத்திலும் நிரூபிக்காததை ஒரு முக்கிய காரணமாய் சொல்லலாம். அதே போல மதவாத ஆயுதத்தை எல்லா மாநிலங்களிலும் வெற்றிகரமாய் பிரயோகிக்க முடியாது என்பதையும் பா.ஜ.க இத்தோல்வியில் இருந்து புரிந்து கொண்டிருக்கும்.
ஒரு மாநிலத்தேர்தலின் முடிவுகளை வைத்து ஒரு கட்சி பலவீனமாகி விட்டதாய் கணிப்பதும் தவறு தான். தொடர்ந்து வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வேலையே செய்யாமல் இருந்தால் இறுதியில் என்ன கதியாகப் போகிறார்கள் என்பதற்கு மக்கள் கொடுத்த ஒரு சிறு எச்சரிக்கை என புரிந்து கொள்ளலாம். விரைவில் பொருளாதாரம் சீரடையாவிட்டால், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மாற்றம் வராவிட்டால் மோடி அடுத்த முறை பிரதமராவது சாத்தியமில்லை. இஸ்லாமியர்கள் மிக மிக சிறுபான்மையினராய் இருப்பவர்கள். அவர்களை ஒரு பொது எதிரியாய் இந்துக்கள் கருதுவதற்கான விகிதாச்சார பிரதிநுத்துவம் கூட அவர்களுக்கு இல்லை. இங்குள்ள பெரும்பான்மை இந்துக்களுக்கு இஸ்லாமியர் மீது அச்சமோ வெறுப்போ இல்லை. விதிவிலக்காய் மேற்தட்டு இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் போன்ற சில மாநிலங்களை சொல்லலாம். பொருளாதார வளர்ச்சி எனும் கனவு பலிக்காது எனத் தெரிந்ததும் பா.ஜ.க இல்லாத மத எதிரியை கட்டமைத்து அரசியலில் அறுவடை செய்யப் பார்ப்பது அபத்தமான வியூகம். ஒரு மத தலைவராக மோடி மீது பெரும்பான்மை இந்துக்களுக்கு இன்னும் வசீகரம் இருக்கலாம். ஆனால் மதத்தலைவருக்கும் மதவாதத் தலைவருக்கும் வித்தியாசம் உண்டு.  

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...