முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்தோசைக்காரரும் டாஸ்மாக் எதிர்ப்பாளரும்



நேற்றிரவு ஒரு சின்ன கடையில் கல்தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடை முதலாளி தன் மூக்குக் கண்ணாடிக்கு மேலாக பார்க்கும் அந்த பாணி எனக்கு போகன் சங்கரை நினைவூட்டியது. அவர் சும்மா வானத்தை பார்வையிடும் பாணியில் லேசாய் முகவாயை தூக்கி பார்த்து தான் “கல் தோசை ரெண்டா போட்டிருட்டுமா?” என்று கேட்கையில் பல சிறுபத்திரிகை எழுத்தாளர்களை நினைவுபடுத்தினார். அது எப்படியோ போகட்டும். அவருக்கு ஒரு பழக்கம். தெரிந்தவர்கள் யாராவது கடைக்கு வந்தால் வராத ஒருத்தரைப் பற்றிக் கேட்பார். ஒரு பத்து வயது சோனிப் பெண் நைட்டி அணிந்து துள்ளலாய் குதித்தபடி பார்சல் வாங்க வந்தாள். அவளிடம் “ஏன் உன் அக்கா வரல? என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். அவளோ “இது போல நூற்றுக்கணக்காண ஆண்களை பார்த்தாச்சு” என்கிற கணக்கில் ஒரு பாவனை காட்டி விட்டு பழையபடி நின்ற வாக்கி ஆடிக் கொண்டிருந்தாள்.

 அப்போது வாடிய கீரையை போல் ஒரு பெண் வந்தாள். மிகவும் சின்ன வயதில் திருமணம் கொடுத்திருக்க வேண்டும். 24, 25 இருப்பாள். ஆனால் ஒரு யுகம் திருமணம் எனும் செக்கில் ஓடிய அலுப்பும் இளைப்பும் தெரிந்தது. அவளிடமும் நம் சிறுபத்திரிகை தோசை கடைக்காரர் “ஏம்மா ஒரு வாரமா ஆளையே காணலே?” என்றார். அவள் தனக்கு நான்கைந்து நாளாய் ஜுரம் என்றும், இப்போது தான் உடல் தணிந்து வெளியே வந்திருப்பதாயும் சொன்னாள். நம் ஆள் எப்போதும் வராத ஆளைப் பற்றித் தானே பேசுவார். உடனே அவள் கணவனைக் குறிப்பிட்டு சொன்னார். “அவன் நேத்து கூட வந்து பீப் வாங்கிப் போனானே”. அந்த பெண்ணின் முகமே மாறி விட்டது. தன் கணவன் சரியாய் வேலைக்கு போவதில்லை, தினமும் குடித்து குடித்தே பணத்தை அழிக்கிறார், வீட்டையே கவனிப்பதில்லை என ஒரே புலம்பல். கடைக்காரர் புது வாடிக்கையாளர்களைப் பார்க்க நகர்ந்து விட்டார். கேட்க ஆள் இல்லை என்றாலும் அப்பெண் கணவனை இரைந்து திட்டிக் கொண்டிருந்தார். அடுத்து அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கினார். பத்தடிக்கு ”நாலு கடையிருந்தா குடிக்காம என்ன பண்ணுவாங்களாம்? குடியால கெட்டுப் போற குடும்பங்களுக்கு இந்த அரசு என்ன நிவாரணம் பண்ணப் போகிறது?” என வரிசை வரிசையாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். அவர் ஒரு கண்காணாத படக்கருவியை நோக்கி கருத்து சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரு நிமிடம் சன் நியூஸ் விவாத மேடையில் இருக்கிறோமோ எனும் எண்ணம் வந்து விட்டது. அவ்வளவு தெளிவாக சரளமாக தர்க்கரீதியாய் திட்டினார். பொதுவாக யார் வேண்டுமானாலும் யாரையும் காறித் துப்பலாம். ஆனால் அடுக்கடுக்காய் கருத்து சொல்வது ஒரு கலை என இத்தனைக் காலமும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு. இந்த மீடியா யுகத்தில் இனி நிபுணர்கள் என தனியாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பொதுமக்கள் எல்லாரும் இனி நிபுணர்களே. மக்கள் இவ்வளவு criticalஆக மாறி வருவது ஒரு நல்ல விசயம்.
அது மட்டுமல்ல டாஸ்மாக் நடத்தி இப்படி பல குடும்பங்களின் வயிற்றில் அடிக்கும் அரசு மீது கணிசமான பெண்களுக்குள் கடும் கோபம் நொதிக்கிறது. அரசும் ஆளுங்கட்சி சாராய ஆலை முதலாளிகளும் சம்பாதிக்கும் கோடிகள் ஒரு கீழ்த்தட்டு குழந்தையின் ஒரு வேளை உணவு, படிக்க வேண்டிய புத்தகம், நிம்மதியான சூழல், கல்விக்கான செலவு என ஒவ்வொன்றையும் பறித்து உருவான பணம். ஒருநாள் இந்த கோபம் கண்ணகியின் ஒற்றை முலையைப் போல் இந்த அரசை எரித்து சாம்பலாக்க போகிறது.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...