Skip to main content

செக்ஸ் என்பது செக்ஸ் அல்ல



Image result for indian girls holding hands
நான் என்னுடைய நாய் ஜீனோவை கொஞ்சினால் அது உடனே மகிழ்ச்சியில் தன் மர்ம ஸ்தானத்தை நக்கி விடும். அடுத்து உடனே அதே நாவால் என் முகத்தை நக்க வரும் என்றாலும் நான் சுதாரித்து தப்பி விடுவேன். மனிதர்களுக்கு இந்த பழக்கம் உண்டா? சிறுகுழந்தைகளுக்கு இப்பழக்கம் உண்டு என பிராயிட் சொல்கிறார்.

 மனிதர்களுக்கு தம்மை யாரும் நேரடியாய் பாராட்டவோ கொஞ்சவோ அவசியம் இல்லை. பகற்கற்பனை செய்வது மனிதனின் தனித்துவமான திறன். அப்போது அவர்கள் தம்மையே பல கற்பனை சூழல்களில் எதிர்கொள்கிறார்கள். அப்போது மேற்கண்ட விசயத்தை குழந்தை செய்யக் கூடும் என பிராயிட் சொல்கிறார். ஆனால் நாம் சிறுவயதில் இருந்தே கடுமையாய் கண்காணித்தும் கட்டுப்படுத்தியும் அவர்களிடம் இருந்து இப்பழக்கத்தை அகற்றி விடுகிறோம். வளர்ந்த பின் இதை சமூகம் ஏற்கிற சைகைளாய் வெளிப்படுத்துகிறோம். ஏதாவது ஒரு சுவாரஸ்யமான விசயத்தை கிளர்ச்சியுடன் சொல்லும் ஆண்கள் தன்னிச்சையாய் தம் வயிற்றையே தடவுவது, ஆண்மையை காட்ட விரும்புகிறவர்கள் தம் புஜங்களை, மயிரடர்ந்த மாரை வருடுவதை, தோற்றம் பற்றி விருப்பம் கொண்டவர்கள் முடியை தாமே கோதுவது ஆகியவற்றை காணலாம். இனிமேல் யாருடனாவது பேசும் போது அவர்களின் கைகளை கவனியுங்கள். உதட்டை அடிக்கடி நாவால் ஈரப்படுத்தி பேசுகிறவர்கள் உண்டு. பெண்களிடம் இது அதிகம் என்றாலும் ஆண்களிடமும் உண்டு.
 ஆண்களை விட பெண்கள் தம் மனநிலையை அதிகமாய் உடல்மொழியில் வெளிப்படுத்தக் கூடியவர்கள். தெருமுனையில் பெண்கள் நின்று பேசுவதைப் பார்க்க சின்ன வயதில் ஏதாவது நாடக கம்பனியில் பயிற்சி எடுத்திருக்கிறார்களோ எனத் தோன்றும். கால் மேல் கால் இட்டு பேசுவது, கூந்தலை விரல்களால் கோதிக் கொண்டே இருப்பது, அடிக்கடி நகைகளை தொட்டுப் பார்ப்பது ஆகியவற்றை பெண்களின் சைகைகளாய் குறிப்பாய் சொல்லலாம். சில பெண்கள் அடிக்கடி சேலையை அரை அங்குலம் தூக்கி விட்ட படி நடப்பார்கள். இறுக்கமாய் மேலாடை அணிந்தவர்கள் அதை அடிக்கடி கீழே இழுத்து விடுவார்கள். குட்டையாய் கீழாடை அணிந்த பெண்களின் அவஸ்தை தனியாக தெரியும். இதெல்லாம் அவர்களுக்கே தெரியாமல் அபோத மனதில் நடக்கிற விசயங்கள். நம்மையே அறியாமல் நெர்வஸாக இருக்கும் போது இதையெல்லாம் செய்கிறோம். தன்னம்பிக்கை தளும்பும் போது கூந்தலை வருடுவது, கால் மேல் காலிடுவது எல்லாம் செய்கிறோம்.
மகிழ்ச்சியை நம்முடைய உடல் மீது வெளிப்படுத்தும் இயற்கை விழைவை நாம் இன்னும் இழக்கவில்லை. சமூகம் நம்மை நமது மொழி மற்றும் இசை மற்றும் நடனம் போன்ற பண்பாட்டு வடிவங்கள் வழி இதைக் காட்ட கோருகிறது. ஆனால் அது அத்தனை சுலபமாக இல்லை. கூட்டமாய் செல்லும் போது கைகோர்த்துக் கொள்ளும் இளம்பெண்களை பார்க்கும் போதெல்லாம் புன்னகைத்துக் கொள்வேன். ஆண்களால் இது ஒரு போதுமே முடியாது. ஆனால் இதே பெண்கள் படித்து வேலை கிடைத்து திருமணமாகி சமூகத்தில் மேல் தட்டுக்கு நகர்ந்ததும் பிற பெண்களை சட்டென தொட்டுப் பேசும் பழக்கத்தை இழந்து விடுகிறார்கள். அதே போல ஆண்களைப் பற்றி பெண்கள் பேசும் போது கவனியுங்கள். நெருங்கிய தோழிகள் என்றால் கையை பற்றி வருடியபடி பேசுவார்கள். அல்லது ஆர்வத்தில் முகங்களை மிகவும் நெருக்கமாய் வைத்துக் கொள்வார்கள்.
செக்ஸ் என்பது உடலுறவுக்கான மட்டும் செயல் அல்ல. அதற்கு சமூக அரசியல் பரிமாணங்கள் உண்டு. சொல்லப்போனால் 90% நேரம் சமூக அரசியல் புலங்களில் தான் செக்ஸ் வெளிப்படுகிறது. பெரிய கூட்டம் நடுவில் ஒரு தலைவன் / நட்சத்திரம் தோன்றும் போது அவரைத் தொட்டுப் பார்க்கும் இச்சை மிக எளிதாக லட்சக்கணக்கானோருக்கு நிச்சயம் தோன்றுகிறது. அவருடைய தோல் ஒன்றும் தனியான தன்மை கொண்டது அல்லது என அனைவரும் அறிவோம். அவரது கருத்துக்கள், ஆட்டம், இசை அல்லது பிற செயல்பாடுகள் வழி அவரை முழுமையாய் அறிந்து கொள்ளவும் இயலும். ஆனாலும் ஒருமுறை அவரை தொட்டுப் பார்த்து விட்டால் நமக்கெல்லாம் அனுபூதி கிடைத்து விடுகிறது. ஒரு தலைவர் / நட்சத்திரத்தை நோக்கி லட்சோபலட்சம் கரங்கள் நீளுகின்றன. இதை எப்படி விளக்குவது?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...