முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவும் வெள்ளமும்



இந்த வெள்ளத்தின் போது சகமனிதர்களிடம் அபாரமான சமூக அர்ப்பணிப்புணர்வை, சேவை மனப்பான்மையை பார்த்தோம். ஒவ்வொருவரும் கண்கூட கண்டோம். சாருவை தவிர. இம்மாத உயிர்மையில் இவ்வாறு எழுதுகிறார்: “வெள்ளத்தில் சென்னை மூழ்கிய போது வெள்ளத்தோடு கூடவே மனிதாபிமானமும் பெருகி ஓடியதாக பத்திரிகைகள் கூவிக் கொண்டிருந்தன. விரல் நகத்தின் அழுக்கு அளவுக்கு தான் அந்த அபிமானம் நிலவியதாக தெரிந்தது எனக்கு. பேனை பெருமாளாக்கியது போல் அந்த அழுக்கை தான் ஒரேயடியாக பேசுகிறார்கள் எல்லாரும் ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் மரணம் ஒன்று போல் தாக்கிய போது மனிதன் பயந்தான். அதனால் ஒருவனுக்கொருவன் உதவிக் கொண்டான். அவ்வளவு தான் விசயம். இதே நகரத்தில் வெள்ளத்துக்கு பதிலாக ஒரு மதக்கலவரம் சூழ்ந்திருந்தால் இதே மனிதாபிமானிகள் கையில் ஆயுதத்தை தூக்கியிருப்பார்கள்”.

சாருவின் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. மனிதர்கள் ஒரேயடியாய் நல்லவர்கள் ஆகி விட்டதாய் யாரும் கூறவில்லை. அதை நினைத்து சாரு பதற்றப்பட வேண்டாம். ஆனால் மனிதனுக்குள் தூங்கும் நன்மை விழிக்க இது ஒரு சந்தர்ப்பம் ஆகியது. மரண பயம் தான் காரணம் என நான் நினைக்கவில்லை. சிறு குழந்தைகளுக்கு கூட சகமனிதர்களுக்கு உதவும் விருப்பம் உண்டு என ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள். அதே நேரம் சிறு குழந்தைகளுக்கு எறும்பை நசுக்கவும் நாயை கல்விட்டு அடிக்கவும் விருப்பம் உண்டு. மனிதன் இந்த இரண்டு விழைவுகளின் கலவை. இப்போதைக்கு நன்மையின் எழுச்சியை கொண்டாடுவோம்.
இந்த வெள்ளம் வந்த போது தான் என்றில்லை. பொதுவாய் தமிழர்கள் இரக்கமும் நெகிழ்ச்சியும் மிக்கவர்கள். இங்கே தெரியாத ஒரு ஊரில் கூட நான் தைரியமாய் தனியே நிற்பேன். என்னை பாதுகாக்கவும் உதவவும் ஏதோ இரு கைகள் நீளும் என அறிவேன். எத்தனை எத்தனை இதயங்களின் அன்பை இதுவரை இந்த சிறு வாழ்வில் பெற்றிருப்பேன். தாயின் கருவறைக்குள் இருப்பது போன்ற பாதுகாப்புணர்வை நீங்கள் தமிழகத்தில் மட்டுமே உணர முடியும். கேரளாவில் ரோட்டில் தனித்து ஆதரவின்றி நின்றால் யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள். பெங்களூரிலும் அதே தான். அதனால் தான் எனக்கு இந்த ஊரை விட்டுப் போக என்றும் மனமில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...