முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வினோத் மிஸ்ராவின் குறும்படம்

நண்பர் வினோத் மிஸ்ரா தான் எடுத்த “குறியீடு” குறும்படத்தின் இணைப்பை எனக்கு பார்ப்பதற்கு அனுப்பி இருந்தார். சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த குறும்படமாய் அது இருந்தது. Spaghetti Western ஸ்டைலில் எடுத்திருந்தார். களம் நம்மூர் கிராமம் ஒன்று. நிறைய வெட்டவெளி, கடும் வெயில் படம் முழுக்க வருகிறது. கீழிருந்து மேலாக வானைக் காட்டும் ஷாட்கள், வட்டமிடும் பருந்து, அதன் அச்சுறுத்தும் ஒலி என படம் முழுக்க வருகிறது. படம் பார்க்க துவங்கி கொஞ்ச நேரத்தில் எனக்கு பரதனின் “தாழ்வாரம்”, The Good, the Bad, and the Ugly நினைவுக்கு வந்தன.


படத்தில் வசனமே இல்லை. அதாவது பேசுகிறார்கள். அதை பின்னணி இசை மூலம் மறைத்து விடுகிறார்கள். வசனம் இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை கொண்டு போகிறார். ஒரு காதல் ஜோடி, அவர்களை பிரித்து கொல்ல முயலும் பெண்ணின் அம்மாவும் உறவினர்களும், அவர்களுக்கு என்னாகிறது என்பது தான் ஒற்றை வரி. கதைக்குள் மூன்று காலங்களை கோர்த்திருப்பது என்னை கவர்ந்தது. படம் துவங்கும் போது காதலனுக்கு தான் தன் காதலியின் வீட்டாரால் தாக்கப்பட்டு அவளும் கொல்லப்படுவதாய் கனவு வருகிறது. அவன் பதற்றமாய் தூங்கி விழிக்கிறான். காதலியை தேடிப் போய் அவளை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊரை விட்டு தப்பிக்க முனைகிறான். பிறகு எல்லாம் கனவில் போன்றே நடக்கிறது. ஆனால் ஒரு சின்ன மாற்றத்துடன். இதே போல் பெற்றோரால் காதலன் கொல்லப்பட்ட ஒரு பெண் அந்த பாழடைந்த வெளியில் பைத்தியமாய் திரிகிறாள். அவள் இந்த ஜோடியிடம் தன் வாழ்கைகதையை நடித்துக் காட்டும் இடம் அபாரமாய் வந்திருக்கிறது. எனக்கு ஷோபா ஷக்தியின் ”பாக்ஸ் கதைப்புத்தகம்” நினைவு வந்தது. கனவு, அந்த ஜோடி, அந்த பைத்தியப் பெண் என மூன்று காலங்கள் ஊடுபாவும் இடம் நன்றாய் வந்திருந்தது. படத்தின் முடிவு மட்டுமே அதிருப்தியாய் இருந்தது.

வினோத் மிஸ்ராவுக்கு காட்சிபூர்வ ஆளுமை இருக்கிறது. கதையினூடே இயக்குநர் தெரிகிறார். இது முக்கியம். அவரால் வெகுஜன ஊடகத்திலும் வெற்றி பெற முடியும் எனத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

கருத்துகள்

உதய குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
Link kidaikkumaa?/
சாம் கிதியோன் கற்றல் கற்பித்தல் இவ்வாறு கூறியுள்ளார்…
If possible send the y tube link thank you

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...