முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வினோத் மிஸ்ராவின் குறும்படம்

நண்பர் வினோத் மிஸ்ரா தான் எடுத்த “குறியீடு” குறும்படத்தின் இணைப்பை எனக்கு பார்ப்பதற்கு அனுப்பி இருந்தார். சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த குறும்படமாய் அது இருந்தது. Spaghetti Western ஸ்டைலில் எடுத்திருந்தார். களம் நம்மூர் கிராமம் ஒன்று. நிறைய வெட்டவெளி, கடும் வெயில் படம் முழுக்க வருகிறது. கீழிருந்து மேலாக வானைக் காட்டும் ஷாட்கள், வட்டமிடும் பருந்து, அதன் அச்சுறுத்தும் ஒலி என படம் முழுக்க வருகிறது. படம் பார்க்க துவங்கி கொஞ்ச நேரத்தில் எனக்கு பரதனின் “தாழ்வாரம்”, The Good, the Bad, and the Ugly நினைவுக்கு வந்தன.


படத்தில் வசனமே இல்லை. அதாவது பேசுகிறார்கள். அதை பின்னணி இசை மூலம் மறைத்து விடுகிறார்கள். வசனம் இல்லாமல் விறுவிறுப்பாக காட்சிகளை கொண்டு போகிறார். ஒரு காதல் ஜோடி, அவர்களை பிரித்து கொல்ல முயலும் பெண்ணின் அம்மாவும் உறவினர்களும், அவர்களுக்கு என்னாகிறது என்பது தான் ஒற்றை வரி. கதைக்குள் மூன்று காலங்களை கோர்த்திருப்பது என்னை கவர்ந்தது. படம் துவங்கும் போது காதலனுக்கு தான் தன் காதலியின் வீட்டாரால் தாக்கப்பட்டு அவளும் கொல்லப்படுவதாய் கனவு வருகிறது. அவன் பதற்றமாய் தூங்கி விழிக்கிறான். காதலியை தேடிப் போய் அவளை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊரை விட்டு தப்பிக்க முனைகிறான். பிறகு எல்லாம் கனவில் போன்றே நடக்கிறது. ஆனால் ஒரு சின்ன மாற்றத்துடன். இதே போல் பெற்றோரால் காதலன் கொல்லப்பட்ட ஒரு பெண் அந்த பாழடைந்த வெளியில் பைத்தியமாய் திரிகிறாள். அவள் இந்த ஜோடியிடம் தன் வாழ்கைகதையை நடித்துக் காட்டும் இடம் அபாரமாய் வந்திருக்கிறது. எனக்கு ஷோபா ஷக்தியின் ”பாக்ஸ் கதைப்புத்தகம்” நினைவு வந்தது. கனவு, அந்த ஜோடி, அந்த பைத்தியப் பெண் என மூன்று காலங்கள் ஊடுபாவும் இடம் நன்றாய் வந்திருந்தது. படத்தின் முடிவு மட்டுமே அதிருப்தியாய் இருந்தது.

வினோத் மிஸ்ராவுக்கு காட்சிபூர்வ ஆளுமை இருக்கிறது. கதையினூடே இயக்குநர் தெரிகிறார். இது முக்கியம். அவரால் வெகுஜன ஊடகத்திலும் வெற்றி பெற முடியும் எனத் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

கருத்துகள்

உதய குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
Link kidaikkumaa?/
சாம் கிதியோன் கற்றல் கற்பித்தல் இவ்வாறு கூறியுள்ளார்…
If possible send the y tube link thank you

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.