முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பர்தாவும் பெண்ணுரிமையும்

பர்தா அணிந்த ஒரு பெண்ணை பார்க்கையில் சிலநேரம் சமூக கோபம் சிலருக்கு வரலாம். எப்படி இந்த காலத்துக்கு பெண்களே ஆணாதிக்கவாத சிந்தனைக்கு அடிபணிந்து தம்மை வெறும் உடலாக பாவிக்கலாம் எனத் தோன்றலாம். ஆனால் இது மேம்போக்கான பார்வை. சுதந்திரமோ தனிமனித உரிமையோ பெண்ணுரிமையோ உண்மையில் ஆடையில் இல்லை. பாப்கட் வைத்து சட்டை பேண்ட் அணிந்த பெண்கள் எல்லாம் முழு சுதந்திரமானவர்களா? அவசியமில்லை. அப்பெண் தனிப்பட்ட முறையில் பல்வேறு சமரசங்களை ஆண் சமூகத்திடம் செய்து தன் ஆடை சுதந்திரத்தை மட்டும் தக்க வைத்திருக்கலாம். ஒருவேளை சேலை அணிந்த ஒரு பெண்ணை போல சில விசயங்களில் துணிச்சலாய் ஆண்களை எதிர்க்க அப்பெண்ணால் முடியாமல் போகலாம்.


 பெண் சுதந்திரத்தை அளவிடவே முடியாது. வாழ்க்கை மிக மிக சிக்கலானது. பல வித சமாளிப்புகளை கடந்து தான் பெரிய பெண்ணுரிமை போராளிகளும் கையளவு சுதந்திரத்துடன் வாழ முடியும். ஒவ்வொருவரும் தமக்கான அளவில் சுதந்திரத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பது தான் உண்மை.
பொதுவாக தனிமனித சுதந்திரத்தை கூடத் தான் அளவிட முடியாது. கேரளாவில் பரவலாக முத்தப்போராட்டம் நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஒருவேளை சமூகம் அதை ஏற்றுக் கொண்டு விட்டால் அடுத்தது என்ன? சுதந்திரத்துக்கு முடிவே இல்லை. பொதுவெளியில் முத்தமிட முடியாதவர்கள் எல்லாம் மூச்சு முட்டி புழுங்குகிறார்களா? இல்லை.
முழு சுதந்திரம் தான் மகிழ்ச்சி என்றில்லை.

பர்தா அணிந்த பெண்ணுக்கு திரும்பவும் வருவோம். பர்தா சரியா தவறா என்பதற்கு நான் செல்லவில்லை. நான் நேற்று அலுவலக மின் தூக்கியில் செல்லும் போது பர்தா அணிந்த ஒரு பெண்ணும் ஏறிக் கொண்டார். நான் 10 வருடங்களாக பல்வேறு இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். முதன்முறையாக ஒரு பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்ணை அலுவலகத்தில் பார்க்கிறேன். ஆரம்பத்தில் கொஞ்சம் ஜெர்க்காக இருந்தது. பிறகு எனக்கு இஸ்லாமிய பெண்கள் வேலைக்கு வருவதே முற்போக்கான மாற்றம் எனப் பட்டது. முன்பை விட அச்சமூகத்தில் பெண்கள் அதிகமாய் கல்லூரியில் படிக்கிறார்கள். இப்போது மெல்ல மெல்ல வேலைக்கு வரத் தொடங்குகிறார்கள். இன்னும் 40 வருடங்களில் பொது சமூக நீரோட்டத்துடன் அவர்கள் கலக்கப் போகிறார்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி. அந்த பெண்ணின் வாழ்க்கை எல்லைக்குள் அவளுக்கான கட்டுப்பாடுகளும் சுதந்திரங்களும் மகிழ்ச்சியும் இருக்கும். அதை மதிப்பிட நாம் யார்? அவள் தன் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் பார்த்தபடியே வந்தாள். அந்த பரந்த வெளியில் அவள் சுதந்திரத்தை யார் தடுக்க முடியும்? சல்மாவின் மூன்றாம் ஜாமங்களின் கதையில் வரும் வீட்டின் சிறு எல்லைக்குள் மாட்டித் தவிக்கும் பெண்களில் இருந்து இவளைப் போன்ற பெண்கள் எவ்வளவு தூரம் வந்து விட்டார்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...