Skip to main content

பர்தாவும் பெண்ணுரிமையும் (2)

என்னுடைய கட்டுரையான “பர்தாவும் பெண்ணுரிமையும்” பற்றி தோழி ஜீவிக்கும் எனக்கும் நடந்த ஒரு சிறு உரையாடல் இது. நல்ல ஒரு விவாதப் புள்ளியை தொடுவதால் இங்கு பகிர்கிறேன்.

வணக்கம் அபிலாஷ்,

      உங்கள் 'பர்தாவும் பெண்ணுரிமையும்' கட்டுரையை படித்தேன். எனக்கு நீண்ட நாட்களாக மனதுக்குள் ஓடிகொண்டிருக்கும் 'இஸ்லாம் மற்றும் பெண்ணுரிமை' பற்றிய கேள்விகளை கேட்டு விடலாம் என்று இதை எழுதுகிறேன்.  
      
      முதலில் உங்கள் கட்டுரையை படித்ததும் எனக்கு தோன்றியதை சொல்லிவிடுகிறேன். ஆம் பர்தாவும் அணிவது அடிமைதனமும் இல்லை, ஜீன்ஸ் அணிவது விடுதலையும் இல்லை. பர்தா அணிவதும் அணியாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். ஆனால் இதை ஏன் நம் மதம் நம்மை அணிய சொல்கிறது என்ற கேள்வி எழாமலே அதை அணிந்துகொல்வதிலும், அது எங்களுக்கு ஒரு தடை இல்லை என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை..

    
       இனி என்னுள் எழும் கேள்விகள் ..... இது என்னை அறியாமல் எனக்குள் ஒளிந்திருக்கும் என் இந்துத்துவ முகமாக கூட இருக்கலாம்.. இங்கு இஸ்லாமியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை. அவர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்தல். அவர்களுக்கு எதிரான ஒரு சுழலை RSS ஏற்படுத்த முயற்சிப்பது.. அந்த முயற்சியில் பாதி வெற்றியும் கிடைத்திருப்பது என்பவை எல்லாம் நன்கு அறிவேன். இவற்றில் எல்லாம் நான் இஸ்லாமியர்களின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன். ஆனால்.....
      பெண் விடுதலை என்று வரும் போது என்னால் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் ஆதரிக்க முடியவில்லை(அணைத்து மதங்களும் பெண்களுக்கு எதிரானவை என்று உறுதியாக  நம்புகிறேன்).. ஜாதி இல்லை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என் இறுதி மூச்சி உள்ள வரை போரடுவேன்னு பெரியாரின் பேரன்கள்  போல் பேசும் பலர் பெண் விடுதலை என்று வந்துவிட்டால் மிகவும்  பழமைவாதிகலாகதான் இருகிறார்கள்(இதில் அனைத்து மதத்தினரும் அடங்குவர்).  நாம் இப்போது இஸ்லாமிய முற்போக்குவாதிகள் பெண்ணுரிமைக்கு எப்படி குரல் கொடுகிறார்கள் என்று மட்டும் பார்போம். இங்கு நான் இஸ்லாமிய முற்போக்குவாதி என்று குறிப்பிடுவது கூட தவறாக இருக்கலாம். என்னால் ஏன் அவர்களை மதத்தை தாண்டி பார்க்க முடியவில்லை என்பது தான் என்னக்குள் எழும் கேள்வியும் கூட. எனக்கு தெரிந்து பெண் விடுதலை பேசும் இஸ்லாமிய முற்போக்குவாதிகள் மிக மிக குறைவு.
நான் கவனித்த வரை Manushyaputhiran , Peer Mohammed - இவர்கள் இருவரும் ஆழமான பெண்ணுரிமை கருத்துகளை முன்வைக்கிறார்கள். இவர்களை நான் மதத்துடன் தொடர்பு படுத்தி பார்த்ததே இல்லை. எப்பொழுதாவது விவாதத்தில் ஒரு RSS காரர் ஹலோ Mr. Abdul Hameed  என்று சொல்லும் போது தான் மனுஷ்யபுத்திரனின் மதம் ஞாபகம் வந்து மறைகிறது... மற்றபடி இவர்களின் கருத்துகள் தான் இவர்களின் அடையாளமாக இருக்கிறதுஆனால் என்னால் வேறு சிலரை இப்படி பார்க்க இயலவில்லை.நான் சில நிகழ்சிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் 

 ஒரு நிகழ்சியில் காதலர் தினத்தை கொண்டாட கூடாது என்று ஹிந்துத்துவ அமைப்புகள் சொல்லி இருகின்றன. இதில் உங்கள் கருத்து என்ன? இந்த புள்ளியில் நீங்கள் இருவரும் ஒன்றினைகிரீர்கள் தானே என்று ஜென்ராம் கேட்டார். அதற்கு Haja Kani  எங்களை அவர்களுடன் ஒப்பிடாதீர்கள் என்று கூறிவிட்டு ..  ஆண் , பெண் இருவரும் ஒரே மதத்தில் திருமணம் செய்துகொண்டால் நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம். அனால் வாழ்கை துணையை தேர்ந்தெடுப்பது அவர்கள் விருப்பம் என்று மிகவும் யோசித்துவிட்டு சொன்னார். அடுத்த நாள் காதலர் தினம் .. அன்று அவர் facebook'இல் ஒரு பதிவிட்டிருந்தார்.  கலைஞரின் பராசக்தி வசனம் ... 

கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை...
கோவில்கள் திருடர்களின் கூடாரமாகிவிட வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.
அதே போல்,
   காதலர் தினம் வேண்டாம் என்று சொல்லவில்லை ..
   காதலர் தினம் ________________________(fill in the blanks)

அதற்கு வந்த comment அனைத்தும் கீழ்தரமாகதான் இருந்தது. அதில் ஒருவரின் comment.. காதல் என்றாலே செக்ஸ் என்பதை போல..  கற்பு போகிறது .. மானம் போகிறது.. கலாசாரம் சீரழிகிறது என்று..  அதற்க்கு  Haja kani like குடுத்து இருக்கிறார்இவர்களை எல்லாம் முற்போக்குவாதிகளாக எப்படி ஏற்பது?

 இதே போல, ஜவஹிருல்லாஹ் ஒரு முறை, அரசு ஊழியராக இருக்கும் முஸ்லிம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தவறு என்று நீதிமன்றம் தீர்பளித்து தொடர்பாக நடந்த விவாதத்தில்.... 
எங்களுக்கு என்று தனி சட்டம் இருக்கிறது எங்கள் உரிமைகளில் தலையிடாதீர்கள் என்று கூறி விட்டு. வேறு எந்த மதத்தை சார்ந்தவரும் இதை செய்ததில்லையா? CM'கல் கூட இப்படி பல மனம் புரிந்திருகிரர்கள் என்று மறைமுகமாக கலைஞரை சுட்டிக்காட்டினார்அதே கட்சியில்  இருந்த வேறு ஒருவர் நான் data தரேன். எத்தனை முஸ்லிம்கள் பலதரமணம் செய்திருகிறார்கள் . எத்தனை ஹிந்துக்கள் செய்திருகிறார்கள் என்று பாருங்கள் என்கிறார். (ஹிந்துக்கள் செய்கிறார்கள் என்பது மறுபதற்கில்லை). இப்படி பேசும் இவர்களை எப்படி பெண்கள் தலைவர்களாக ஏற்க முடியும்??(When there is a discrimination, govt can interfere என்பது தானே சரியாக இருக்கும்.. தனி சட்டம் இருக்கிறது என்பதற்காக அனைத்தையும் நியாய படுத்திவிட முடியுமா ? இஸ்லாம் பெண்களுக்கு மறுமண உரிமை குடுத்து இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை எத்தனை பெண்களுக்கு இங்கு உண்டு ?)

  நான் பார்க்கும் இன்னும் ஒரு நபர் aloor shanavas. இவர் கொஞ்சம் வித்தியாசமாக பெண் உரிமை பேசும்போதெல்லாம் இஸ்லாம் இதை மறுக்கவில்லை, அதை மறுக்கவில்லை என்று பெண் உரிமையை விட இஸ்லாமை காபாற்றுகிரரோ என்று தான் தோன்றுகிறது. பெண்கள் படிக்கலாம் ,பெண்கள் அரசியலுக்கு வரலாம் என்று பேசும் இவர்.. நீயா நானாவில் பெண்ணியம் என்ற தலைப்பில் விவாதம் நடந்தால் கூட அதை FB'இல் கிண்டல் அடித்து பதிவு போடுவார். பெண்கள் ஆண்களுடம் இயந்து நடப்பது தான் பெண்ணியம் என்பார்.  இவருடைய பெண் உரிமை பேச்சை எப்படி ஏற்பது

  சமீபத்தில் ஒரு நடிகை , அவரை பற்றி அசிங்கமாக comment இட்டு இருந்த ஒருவரை திட்டிவிட்டார் . அது facebook'இல் trend ஆகியது. comment இட்டவர் முஸ்லிம். (அதனால் தான் அது trend ஆச்சா என்று எனக்கு தெரியாது) உடனே இனியவன் என்று FB'இல் இயங்கி வரும் அரசியல்வாதி. நடிகைகல்லாம் ஒழுங்க .. நீங்க எப்படின்னு எங்களுக்கு தெரியாதா?...  என்று திட்டி தீர்த்துவிட்டார். இப்படிப்பட்ட செயல்களை ஆதரிக்கும் இவர்களை எப்படி மக்கள் பிரதிநிதியாக ஏற்க முடியும்
  இவர் இன்னுமொரு மறக்கவே முடியாத காரியத்தை செய்தார் . #BlackAgainstSaffron என்ற tag trend ஆகி கொண்டிருந்த பொது, அனைவரும் கருப்பு நிறம் கொண்ட profile picture' மாற்றினார்கள்இவரும்  ஒரு புகைப்படம் போட்டார். இவரும் இவர் மகள்,4 வயது இருக்கும். இருவரும் கருப்பு சட்டை அணிந்திருந்தார்கள். அந்த 4 வயது மகள் ஹிஜாப்(Hijab) போட்டு இருந்தால். பெண்கள் வயதுக்கு வந்ததுக்கு பிறகு தான் அதை அணிவார்கள். இப்பொழுது சிறுமிகளையும் இவர்கள் விடுவதில்லை. இது பெரியாருக்காக உருவாக்கப்பட்ட tag. உண்மையாக இதை பெரியார் மட்டும் பார்த்திருந்தால் ரத்தகண்ணீர் வடித்திருப்பார். இவர்கள் இந்தியாவை இகழ்ந்து சவுதியை புகழும் பதிவுகளையும் ஊக்குவிக்க மறப்பதில்லை

  எனக்கு தோன்றுவதெல்லாம் ஒன்று தான் ஒருவேளை இஸ்லாம் ஜாதி என்ற ஒன்றை வலியுறுத்தி இருந்தால் இப்பொழுது பேசுவது போல இவர்கள் அதை எதிர்பர்கள என்பது தான்.. இந்த கேள்விக்கு இவர் எதிர்த்திருப்பர் என்று தொன்றுவர்களை மட்டுமே நான் பெரியார் வழிவந்த பகுத்தறிவாளர்களாக பார்கிறேன். மற்றவர்களை மதத்தை காப்பாற்ற சிலவற்றை எதிர்த்த விவேகனந்தர்களின் வாரிசுகளா தான் பார்கிறேன். இவர்களுக்கு மதம் தான் பிரதானம். என் பார்வை சரியா ? இல்லை என்னுடைய பகுத்தறிவை விட என்னுடைய இந்துத்துவ அறிவு என்னை இப்படி சிந்திக்க வைகிறதா

நான் சிந்திப்பது சரி என்றால்.. ஒரு முறை பாண்டே கேட்டார்  சல்மா, பர்வீன் சுல்தானா போன்றோர் இஸ்லாமிய பெண்கள் பின்தங்கி இருகின்றனர். அவர்கள் முன்னேற்றத்திற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்களே என்று .. இதை பாண்டே சொல்லிவிட்டார் என்ற காரணத்திற்காகவே நாம் மறுக்கிறோமா?


அன்புடன்
ஜீவி 

அன்புள்ள ஜீவி

கடுமையான வேலைப்பளு. அதனால் உடனடியாய் பதிலளிக்க இயலவில்லை. உங்கள் முதல் கடிதத்துக்கு வருகிறேன். உங்கள் விரிவான அரசியல் சமூக புரிதல் வியப்பளிக்கிறது. அதற்கு முதலில் என் வாழ்த்துக்கள். என் எதிர்வினையை சுருக்கமாய் அளிக்கிறேன். பெண்ணுரிமையை யார் தீர்மானிப்பது என்பதே அடிப்படை கேள்வி. பர்தா அணிந்த பெண்ணை பார்க்கையில் அவளது ஆடை சுதந்திரத்தை கணவனும் குடும்பமும் மதமும் கட்டுப்படுத்துவதாய் தோன்றுகிறது. என் கேள்வி இது நமக்கு ஏற்படும் உணர்வா அல்லது அப்பெண்ணுக்கு ஏற்படும் உணர்வா என்பதே.

 இதை விதண்டாவாதமாக பார்க்காதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஊனமுற்ற ஆள் சாலையில் போகையில் பார்க்கிற நமக்கு வேதனை உண்டாகிறது. இங்கு வேதனை நம்முடையதா அந்த ஊனமுற்ற ஆளுடையதா? நம்முடையது மட்டுமே. பர்தா பெண்ணைப் பார்கையில் நமக்கு தோன்றும் பெண்ணிய கொந்தளிப்பும் நமக்கானது மட்டுமே.

இந்த பிரச்சனையை அப்பெண்ணின் தரப்பில் இருந்து பார்க்க வேண்டும் என்பதே என் கோரிக்கை. எனது இஸ்லாமிய தோழிகள் சிலர் பர்தாவை தம் அடையாளமாக பார்ப்பதுண்டு. இது எனக்கு தொண்ணூறுகளிலே தெரியும். எங்கள் ஊரில் ஆர்.எஸ்.எஸ் கலவரம் ஏற்படுத்தும் முன் பர்தா இல்லை. இந்துத்துவாவும் வஹாபியமும், அதன் விளைவாய் பர்தாவும் அங்கு ஒரே சமயத்தில் தோன்றியது. அந்த அரசியல் சூழலில் ஒரு இஸ்லாமிய பெண் தனக்கான அரசியல் மொழியை ஆடையில் காட்ட நினைத்தால் அதில் என்ன தவறு? ஒருவர் குடுமி வைப்பது போல், மற்றொருவர் நெற்றியில் குங்குமம் வைப்பது போல் அவர் பர்தா அணிகிறார்.

 இன்னும் சில பெண்கள் கணவனின் குடும்பத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அணிகிறார்கள். அவர்கள் தமக்கான வாழ்வுரிமைகளை, விருப்பங்களை சமரசங்கள் மூலம் பெறுகிறார்கள். அந்த வாழ்வில் அவர்கள் திருப்தியாக இருக்கும் போது நாம் ஏன் அதை ஒரு “அடிமைத் தளையாக” பார்க்க வேண்டும்.

என்னுடைய வாதம் இது தான். ஒரு விசயம் கருத்தியல் ரீதியாய் தவறாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அது சரியாக நியாயமாக கூட இருக்கலாம். நான் எப்போதும் நடைமுறையில் அன்றாட வாழ்வில் மக்கள் மத்தியில் ஒரு சிக்கல் எப்படி பார்க்கப்படுகிறது என அறிய விரும்புகிறேன்.

நான் உங்கள் கருத்தை மறுக்கவில்லை. அது அரசியல் ரீதியாய் சரி. ஆனால் அது மட்டுமே எதார்த்தம் அல்ல. நாம் இதே போல் நம் பெண்ணியவாதிகளின் எதார்த்த வாழ்விலுள்ள சுதந்திரத்தை அலசிப் பார்க்க வேண்டும். அதே போல் பெண்ணியமே தெரியாத சாதாரண குடும்ப பெண்களின் சுதந்திரத்தையும் அலசிப் பார்க்க வேண்டும். சுதந்திரம் அப்போது ஆளாளுக்கு மாறுபடும்.

நீங்கள் சல்மா பற்றின ஆவணப்படத்தின் போஸ்டர் பார்த்திருப்பீர்கள். அதில் அவர் பர்தாவுடன் இருப்பார். ஆனால் எதார்த்தத்தில், தன் நூல்களின் அட்டைப்படத்தில் பர்தா இல்லாமல் இருக்கிறார். பர்தா எவ்வாறு முற்போக்காளர்களால் ஒரு குறியீடாக மாற்றப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நாம் நிறைய இன்னும் விவாதிப்போம்.
அன்புடன்
ஆர்.அபிலாஷ்  



Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...