முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாதியை கடந்தவர்கள் இருக்கிறார்களா?


ஆணவக்கொலைகளை சாடுவது எளிது, ஆனால் சாதியை கடப்பது அது போல் சுலபம் அல்ல என கார்டூனிஸ்ட் பாலாவின் பதிவு ஒன்று பார்த்தேன். எனக்கு இது பற்றி இரண்டு விசயங்கள் தோன்றுகின்றன.

1)   எதையும் துண்டு போட்டு தாண்டும் மனநிலையில் இருக்க வேண்டியதில்லை. ஒருவர் சாதியை ஆதரித்தபடி இன்னொரு நிலையில் அதை எதிர்க்கலாம். உதாரணமா, சாதி வன்முறையை எதிர்க்கிறவர் ஒரு அடையாளமாய், பண்பாடாய், சௌகர்யமாய் அதை ஏற்கலாம். அதில் எந்த பாசாங்கும் இல்லை.
2)   சாதியை ஏன் தவிர்க்க முடிவதில்லை? கிராமத்தில் அது நிலம் சார்ந்த கட்டமைப்பை உருவாக்குகிறது. இன்னொரு புறம் உறவுகளின் அருகாமைக்கு சாதி தான் ஒரே மார்க்கம். சின்ன சின்ன உதவிகள், பிரச்சனைகளின் போது ஆசுவாசம் எல்லாமே உறவுகளிடம் இருந்து சுலபத்தில் கிடைக்கின்றன (சிலநேரம் அவர்களே தலைவலியாக இருந்தாலும் கூட). உறவுக்காரர்கள் தாம் நீங்கள் சமூகத்தில் எங்கு இருக்கிறீர்கள் என உறுதிப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களுக்கு தரும் மரியாதை சமூகம் தரும் மரியாதையாக நீள்கிறது. உறவுகள் எனும் வலைப்பின்னல் சாதியை நம்பி உள்ளது. அதை விட முக்கியமாய் உங்கள் பிள்ளைகளுக்கு சாதி சார்ந்த சம்பிரதாயங்கள், கதைகள், முன்னோர் வரலாறு, செண்டிமெண்டுகளை ஊட்டுவதும் உறவுக்காரர்கள் தாம்.
சுட்டிக்காட்ட ஒரு உறவுக்காரர் இல்லாத ஒருவரை கற்பனை பண்ணிப் பாருங்கள். அவர் தனக்கென ஒரு ஊரே இல்லாதவராக இருப்பார். ஆக சாதி உறவுகளைத் தருகிறது, உறவுகள் ஊரைத் தருகின்றன. சாதி இல்லாதவன் உறவுகளோ ஊரோ இல்லாத ஒரு நாடோடியாக இருக்க வேண்டும். அப்படியானவர்களை எனக்குத் தெரியும். அது ஒரு தனி மனநிலை. பெரும்பாலானோருக்கு அது முடியாது.

பிள்ளைகளுக்கு “சாதிகள் இல்லையடி பாப்பா” என சொல்லி வளர்ப்பதிலோ சாதியற்றவன் என சான்றிதழ் வாங்குவதிலோ பயனில்லை. அவர்களை தம் உறவுகளில் இருந்தும் ஊரில் இருந்து முழுக்க துண்டிக்க வேண்டும். வேரோடு பிடுங்கி வேறு மண்ணில் நட வேண்டும். அது எவ்வளவு வறட்சியாய் கொடூரமாய் இருக்கும் யோசியுங்கள்.

இறுதியாய், சங்கரின் ஆணவக்கொலையை கண்டிப்பவர்கள் தம் பெண்களை வேறு சாதியில் மணம் புரிந்து கொடுப்பார்களா என்றும் சில அறிவுக்கொடுக்குகள் கேட்கிறார்கள். என்ன ஒரு முட்டாள்தனமான லாஜிக். ஆணவக்கொலையை தான் கண்டிப்பவர்கள் ஆணவக்கொலை செய்ய மாட்டார்கள். அவ்வளவு தான். அவர்கள் ஏன் மாற்றுசாதி மணத்தை ஆதரிக்கவில்லை என கேட்கக் கூடாது.


அப்படியே மாற்றுசாதி மணத்தை ஆதரிப்பவர்களும் ஒன்றும் முற்போக்கோ சாதி மறுப்பாளர்களோ அல்ல. என் பிராமணத் தோழி ஒருவர் தன் உறவுகளில் இத்தலைமுறையில் வெவ்வேறு சாதியில் மணம் புரிந்த நான்கைந்து பேர்களை குறிப்பிட்டார். பிறகு அவர் சொன்னார் “எங்க உறவுகளில் சொந்த சாதியில் மணம் புரிந்தவர்கள் ஒரு சில பேர் கூட கிடையாது”. இதன் பொருள் அவரின் உறவுக்காரர்கள் சாதியை விட்டு விட்டார்கள் என்றல்ல. அவர்கள் இன்னும் சாதியுடன் பிணைப்பாய் தான் இருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் விட்டுக் கொடுக்க, சமரசம் செய்ய தயாராக இருக்கிறார்கள். சிலரிடம் இந்த நெகிழ்வு இருக்காது. இதை சுலபத்தில் விளக்க இயலாது. மனிதர்கள் இப்படித் தான் கலவைசாதம் போல் இருப்பார்கள். அவர்களை சாதி வெறியர்கள், சாதியற்றவர்கள் என தனித்தனியாக பார்சல் கட்ட முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...