முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவின் வாசகர்கள்

நமக்கு முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் சுரண்டலாகவும் தோன்றுகிற விசயங்களை ரொம்ப நேர்மையாக உண்மையாக செய்கிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாய், எழுத்தாளர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பவர்களை நான் என்றும் எதிர்க்கிறவன். எழுத்தாளனின் பிம்பம் அவன் எழுத்தை ஆக்கிரமிப்பது தவறு என நினைக்கிறேன். எழுத்தாளனை முழுக்க அகற்றிய பின்பு தான் வாசிக்க துவங்க வேண்டும். ஆனால் அதேநேரம் இந்த ரசிகர்களின் அன்பும் தூய்மையானது தான். அதை நான் இத்தனைக் காலமும் புரியாமல் இருந்து விட்டேன். நான் அவர்களை ஒருவித உளவியல் அடிமைகள் என புரிந்திருந்தேன். அது தவறான புரிதல்.

 நேற்று சாரு வாசகர் வட்டத்தின் இரண்டு பெரிய தலைகள் உரையாடிக் கொண்டிருந்ததை கவனித்த போது எனக்கு இப்படி பட்டது: “இவர்கள் அவரது குறைகளையும் பிரச்சனைகளையும் தெரிந்தே அவரை நேசிக்கிறார்கள். இதற்குள் சந்தர்ப்பவாதமும் சுரண்டலும் இருக்கிறது. அதேநேரம் ஆத்மார்த்தமான பிரியமும் இருக்கிறது. அவர் ஒரு father figure ஆகவும் நண்பராகவும் இவர்களுக்கு இருக்கிறார்.”
 சு.ரா வாசகர்களை சமமான நண்பனாக நடத்துவார். அந்த உறவு சீராக நிதானமாக அக்கறை சார்ந்ததாக இருக்கும். சாருவை போன்றவர்கள் வேறு வகை. வாசகர்களை கோழி தன் குஞ்சுகளை கொண்டு திரிவது போல் அழைத்து போவார். கொத்தி விரட்டுவார். பாதுகாக்கவும் செய்வார். இதை அவர்கள் தெரிந்தே கூட இருக்கிறார்கள்.
சாருவின் வாசக நண்பர்களில் ஒ.பி.எஸ், சசிகலா, நத்தம் போல் ஒரு உள் அதிகார வட்டம் உள்ளது. அவர்களை சமாதானப்படுத்த அடிக்கடி சாரு யாரையாவது போட்டு மிதிப்பார். மிதிபடுகிறவர்களுக்கு சாரு ஏன் இப்படி பண்ணுகிறார் என தெரியும். அவர்கள் அவரது கோபம் ஆறும் வரை, அரசியல் வானம் தெளியும் வரை பொறுமையாக இருக்கிறார்கள். நேற்று நான் இவர்கள் இதையெல்லாம் தெரிந்தும் அவரோடு இணக்கமாக இருக்கிறார்கள் என அறிந்து வியந்தேன். இது சமத்துவமான உறவு அல்ல. எழுத்தாள-வாசக உறவு இப்படி இருக்கக் கூடாது என நான் நம்புகிறேன். ஆனால் வாழ்க்கையில் சிலநேரம் பிழைகளில் நிறைய உண்மை இருக்கும். இந்த பிழையான உறவில் பூரணமான கனிந்த அன்பு உள்ளது. சமத்துவமாகவோ சமத்துவமற்றோ எப்படியும் நேசிக்கலாம் என்பது தானே சுதந்திரம்.

மற்றவர் பார்வையில் இருந்து உலகைப் பார்க்கும் போது மனம் சட்டென விரிகிறது. 

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Good observation. Believe that this view doesnt get narrowed down only to Charu and need more view on other writers too.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.