முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாருவின் வாசகர்கள்

நமக்கு முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் சுரண்டலாகவும் தோன்றுகிற விசயங்களை ரொம்ப நேர்மையாக உண்மையாக செய்கிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாய், எழுத்தாளர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பவர்களை நான் என்றும் எதிர்க்கிறவன். எழுத்தாளனின் பிம்பம் அவன் எழுத்தை ஆக்கிரமிப்பது தவறு என நினைக்கிறேன். எழுத்தாளனை முழுக்க அகற்றிய பின்பு தான் வாசிக்க துவங்க வேண்டும். ஆனால் அதேநேரம் இந்த ரசிகர்களின் அன்பும் தூய்மையானது தான். அதை நான் இத்தனைக் காலமும் புரியாமல் இருந்து விட்டேன். நான் அவர்களை ஒருவித உளவியல் அடிமைகள் என புரிந்திருந்தேன். அது தவறான புரிதல்.

 நேற்று சாரு வாசகர் வட்டத்தின் இரண்டு பெரிய தலைகள் உரையாடிக் கொண்டிருந்ததை கவனித்த போது எனக்கு இப்படி பட்டது: “இவர்கள் அவரது குறைகளையும் பிரச்சனைகளையும் தெரிந்தே அவரை நேசிக்கிறார்கள். இதற்குள் சந்தர்ப்பவாதமும் சுரண்டலும் இருக்கிறது. அதேநேரம் ஆத்மார்த்தமான பிரியமும் இருக்கிறது. அவர் ஒரு father figure ஆகவும் நண்பராகவும் இவர்களுக்கு இருக்கிறார்.”
 சு.ரா வாசகர்களை சமமான நண்பனாக நடத்துவார். அந்த உறவு சீராக நிதானமாக அக்கறை சார்ந்ததாக இருக்கும். சாருவை போன்றவர்கள் வேறு வகை. வாசகர்களை கோழி தன் குஞ்சுகளை கொண்டு திரிவது போல் அழைத்து போவார். கொத்தி விரட்டுவார். பாதுகாக்கவும் செய்வார். இதை அவர்கள் தெரிந்தே கூட இருக்கிறார்கள்.
சாருவின் வாசக நண்பர்களில் ஒ.பி.எஸ், சசிகலா, நத்தம் போல் ஒரு உள் அதிகார வட்டம் உள்ளது. அவர்களை சமாதானப்படுத்த அடிக்கடி சாரு யாரையாவது போட்டு மிதிப்பார். மிதிபடுகிறவர்களுக்கு சாரு ஏன் இப்படி பண்ணுகிறார் என தெரியும். அவர்கள் அவரது கோபம் ஆறும் வரை, அரசியல் வானம் தெளியும் வரை பொறுமையாக இருக்கிறார்கள். நேற்று நான் இவர்கள் இதையெல்லாம் தெரிந்தும் அவரோடு இணக்கமாக இருக்கிறார்கள் என அறிந்து வியந்தேன். இது சமத்துவமான உறவு அல்ல. எழுத்தாள-வாசக உறவு இப்படி இருக்கக் கூடாது என நான் நம்புகிறேன். ஆனால் வாழ்க்கையில் சிலநேரம் பிழைகளில் நிறைய உண்மை இருக்கும். இந்த பிழையான உறவில் பூரணமான கனிந்த அன்பு உள்ளது. சமத்துவமாகவோ சமத்துவமற்றோ எப்படியும் நேசிக்கலாம் என்பது தானே சுதந்திரம்.

மற்றவர் பார்வையில் இருந்து உலகைப் பார்க்கும் போது மனம் சட்டென விரிகிறது. 

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
Good observation. Believe that this view doesnt get narrowed down only to Charu and need more view on other writers too.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...