Skip to main content

இடதுசாரிகளும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் தொடர்ந்து தாக்கப்படுவது ஏன்?

(மார்ச் மாத “வெற்றி வேந்தனில்” வெளியான கட்டுரை)
இது பற்றி ஆர்ச்சிஸ் மோகன் Business Standard இணையதளத்தில் எழுதிய ஒரு நல்ல கட்டுரையை படிக்க நேர்ந்தது. வழக்கமாய் இப்பிரச்சனையை வலது-இடது தரப்புகளுக்கு இடையிலான புகைச்சலின் உச்சகட்ட மோதல் என்கிற தோரணையில் தான் ஊடகங்களில் விளக்குவார்கள். ஆனால் இக்கட்டுரையாளர் இந்த பிரச்சனைகள் பா.ஜ.காவால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிரச்சார வடிவம் என்கிறார். எதற்காக?
அதற்கு முன், கடந்த ஒரு வருடத்தில் நடந்த இந்துத்துவா சர்ச்சைகளை மனதில் ஓட்டிப் பாருங்கள். எழுத்தாளர்கள் கொல்லப்பட்டது, மாட்டுக்கறியை முன்வைத்து இஸ்லாமியரை கோமாதாவை தின்கிறவர்கள் என கட்டமைக்க உருவாக்கப்பட்ட சர்ச்சை இவை எல்லாம் ஒரு குறுகின காலத்தில் தேசம் முழுக்க அங்கங்கே பா.ஜ.கவின் உதிரி துணைக்கட்சியின் குட்டித்தலைவர்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. சில நாட்களில் இந்தியா முழுக்க இப்பிரச்சனைகளால் கொழுந்து விட்டெரியும் தோற்றம் உருவானது. பா.ஜ.க குட்டித்தலைவர்களும் குண்டர்படையும் யாராவது ஒருவரை தாக்குவதோ கொல்வதோ இப்பிரச்சனைக்கு தூண்டுகோலாக அமையும். அல்லது ஒரு மதக்கலவரம் திட்டமிட்டு உருவாக்கப்படும். இவையெல்லாம் ஏதாவது ஒரு மாநில தேர்தலுக்கு சற்று முன்பு சரியான டைமிங்கில் நடக்கும். தேர்தல் முடிந்ததும் பிரச்சனைகள் தடயம் இல்லாமல் மறைந்து விடும். எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட போதும் நான் இதே கோணத்தில் தான் இதை பார்த்தேன். எழுத்தாளர்கள் அல்ல பா.ஜ.கவுக்கு இலக்கு, தேர்தல். தேர்தல் வெற்றி மட்டுமே.

 பீகார் தேர்தலை முன்னிட்டு வலதுசாரி மேல்சாதி இந்துக்களை ஒன்று திரட்டும் நோக்கில் மாட்டுக்கறி பிரச்சார மையம் ஆக்கப்பட்டது. இந்தியா முழுக்க மாட்டுக்கறியை முன்னிட்டு கிடைத்தவர்களை எல்லாம் பா.ஜ.கவினர் தாக்கினார்கள். தலைவர்கள் சகட்டுமேனிக்கு அறிக்கை வெளியிட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் மோகன் பகவத் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துப் போகும் நோக்கில் இட ஒதுக்கீட்டை திரும்ப பெறுவோம் என்றார். ஆனால் இட ஒதுக்கீடும் மாட்டுக்கறியும் சேர்ந்து தயிரும் காபியும் வயிற்றில் கலந்தது போல் மோசமான சேக்கையாகி தேர்தலில் பா.ஜ.கவை காலி செய்தது.
மேற்சொன்ன கட்டுரையின் தலைப்பே “பா.ஜ.க காங்கிரஸை விட இடதுசாரிகளை கண்டே அதிகம் அஞ்சுகிறது” என்பது தான். அப்படி பொருட்படுத்தத்தக்க மாற்றாக இடதுசாரிகள் இங்கு இருக்கிறார்களா என்ன? இங்கு தான் நாம் அடுத்த நடக்க உள்ள மே.வங்க, கேரள தேர்தல்களை கவனிக்க வேண்டும். இரு மாநிலங்களிலும் இடதுசாரிகள் ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளார்கள். ஹைதராபாத் மற்றும் ஜெ.என்.யு பல்கலைகளில் எ.பி.வி.பி மாணவர் அமைப்பை ஏவி விட்டு பா.ஜ.க சிறு பிரச்சனைகளை பெரிதாக்கியது. குஜராத் கலவரம் பற்றி இதுவரை எங்குமே மோடி விமர்சிகப்பட்டதில்லையா? எவ்வளவு கட்டுரைகள், எழுதப்பட்டுள்ளன, விவாதங்கள் நடந்துள்ளன. ஆனால் திடீரென அதை ஒட்டியும் மாட்டுக்கறியை முன்வைத்தும் இடதுசாரிகள் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள், புனித பசுவை இரக்கமில்லாமல் கொல்கிறவர்களை ஆதரிக்கிறவர்கள் என்றும் இடதுசாரிகளை பழிசுமத்தி போராட்டங்கள் நடத்தி, அடிதடி கலவரங்கள் நிகழ்த்தி, காவல்துறையை ஏவி அவர்களை ஒடுக்கியது பா.ஜ.க. அவர்கள் எதிர்பார்த்தது போல் இந்த உணர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளும் வன்முறையும் தேசிய கவனம் பெற்றது. இப்பரபரப்பை பயன்படுத்தி இடதுசாரிகள் ஒரு இந்து விரோத, தேசவிரோத கும்பல் எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க மேற்கொண்டது. இனி இந்தியாவில் யார் சிறுபான்மையினர் பக்கம் நின்று பேசினாலும் பா.ஜ.கவை விமர்சித்தாலும் அவர்கள் சுலபத்தில் தேசவிரோத அடைப்புக்குறிக்குள் அகப்பட்டு விடுவார்கள் என பா.ஜ.க எதிர்பார்க்கிறது. ஒரு விதத்தில் பா.ஜ.க விரித்த வலையில் இடதுசாரி மாணவர் அமைப்புகள் எளிதில் போய் மாட்டிக் கொண்டன.
பா.ஜ.கவினரின் அப்பட்டமான வன்முறை, அராஜகமான உணர்ச்சிகரமான அறிக்கைகள் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு படுமுட்டாள்தனமாய் தோன்றின. தம் ஒவ்வொரு செயலையும் உலகமே கவனிக்கிறது என தெரிந்தும் இவர்கள் ஏன் இப்படி அநாகரிகத்தின் தலைமேல் நின்று ஒன்றுக்கு போகிறார்கள் என நாம் வியந்தோம். ஆனால் இவை அனைத்தும் திட்டமிட்ட நாடகம் ஒன்றின் பல்வேறு காட்சிகள் என இப்போது புரிய வருகிறது. இனி ஒரு பா.ஜ.க எம்பி “பசுவை கொல்கிறவர்களை என் கையாலே சுட்டுக் கொல்வேன்” என்றோ “தேசத்தை பிரிக்க நினைப்பவர்களை முச்சந்தியில் வைத்து கல்லால் அடித்து கொல்வோம்” என்றோ பேட்டி அளித்தால் யாரும் அதிர்ச்சி கொள்ள வேண்டாம். அத்தனையும் ஒத்திகை செய்யப்பட்ட வசனங்கள். இப்படிப் பேசினால் தான் விமர்சனம் வரும். கவனம் கிடைக்கும். அதன் வழி பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என உணர்ந்தே செய்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க மே.வங்க தேர்தலில் மம்தாவுக்கும் பா.ஜ.கவுக்கும் ஒரு மறைமுக கூட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மம்தாவுக்கு எதிரான இடதுசாரி ஓட்டுகளை சிதறடிப்பதே பா.ஜ.கவின் நோக்கம். அதே போல் கேரளாவிலும் இடதுசாரிகளின் வாக்கு வங்கியை கலைக்க விரும்புகிறார்கள். கேரளாவில் பா.ஜ.கவும் காங்கிரசும் மறைமுக புரிந்துணர்வுடன் தேர்தலில் பணியாற்ற திட்டமிட்டிருப்பதாய் சொல்கிறார்கள். அங்கும் இடதுசாரிகள் பலவீனப்படுவது இரு கட்சிகளுக்கும் லாபமளிக்கும். இதை கணக்கில் கொண்டே ஜெ.என்.யு சர்ச்சையில் இடதுசாரிகள் தாக்கப்பட காங்கிரஸ் மௌனமாய் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் என பா.ஜ.க எதிர்பார்த்தது. அது தான் இரு கட்சிகளுக்குமான ஒப்பந்தமும் கூட. ஆனால் ராகுல் காந்தி உணர்ச்சிவசப்பட்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்தார். அப்போது கட்சியின் சீனியர்கள் அவரை மேற்சொன்ன தேர்தல் வியூகத்தை சுட்டி முடிவை மாற்ற கேட்டிருக்கிறார்கள். ராகுல் மசியவில்லை. அவர் ஜெ.என்.யுவுக்கு சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நிலைமை முழுக்க மாறிப் போனது. காங்கிரஸின் பிற தலைவர்களும் வேறு வழியில்லாமல் பா.ஜ.கவை எதிர்க்க வேண்டியதாயிற்று.

இச்சம்பவத்தை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் தலைவர் வைத்யாவின் பேட்டி கவனிக்கத்தக்கது. அவர் ராகுலை குறி வைத்து “அரசியல் கட்சிகள் ஜெ.என்.யு சர்ச்சையில் தலையிடக் கூடாது. காங்கிரஸ் தன் பிம்பத்தை களங்கப்படுத்தக் கூடாது” என்கிறார். அதன் பொருள் ’நாம்’ கேரள தேர்தலுக்காய் உருவாக்கி உள்ள திட்டங்களை ராகுல் குழப்பி விட அனுமதிக்கக் கூடாது என்பது. ஏனென்றால் ஒரு பொது எதிரி விழும் போது எல்லா எதிரிகளுக்கும் பயன் கிடைக்கிறது, அந்த எதிரிகள் தமக்குள் நண்பர்கள் அல்ல என்றாலும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...