Skip to main content

எழுத்து எனும் பேய்

கடந்த சில மாதங்களாக நான் தினமும் சில மணிநேரங்களாவது எழுதுகிறேன். ஓய்வாக படித்து புத்தகம் வாசித்த, டி.வி பார்த்த, பகற்கனவு கண்ட நாட்கள் வெறும் கனவாகி விட்டன. எழுத்து ஒரு வேலை போல் ஆகி விட்டது. குறிப்பாய் தொடர்ந்து இரு தொடர்களை (தினமணி மற்றும் குமுதம்) எழுத ஆரம்பித்த பின் கராறாய் திட்டமிட்டு எழுத வேண்டியதாகி விட்டது. வேலை முடித்து வந்த பின் இரவிலும் காலையிலும் தொடர்ச்சியாய் மூன்று நான்கு கட்டுரைகள் எழுதுவேன். இது போக என் முனைவர் பட்ட ஆயுவு சார்ந்த எழுத்துவேலை. அது போக உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்ற பத்திரிகைகளுக்காக எழுதுவது. மிச்ச நேரத்தில் பிளாக், பேஸ்புக்கில் எழுதுவது. எழுத்து என் தினசரி இயக்கத்தின் தவிர்க்க இயலாத பகுதி ஆகி விட்டது.

 சில வாரங்களுக்கு முன்பு நண்பர் டேவிட் ஒரு நாடகம் எழுதித் தரக் கேட்டார். கொல்கொத்தாவுக்கு சென்றிருந்த போது விமான நிலையத்திலும் விமானத்திலும் இருந்து எழுதினேன். கொல்கொத்தாவின் தெருக்களில் சுற்றிய போதும், உணவகத்தில் இருந்தும், பிறகு அறையிலும், பாஷா பரிஷத் விருது மேடையிலுமாய் தொடர்ந்து எழுதி அந்நாடகத்தை முடித்தேன். என் மனைவியிடம் கூறிய போது “ஒரு ஊருக்கு போன ஜாலியா சுத்தி பார்க்காம எழுதிக்கிட்டா இருப்பே? நீயெல்லாம் திருந்த மாட்டியா?” என திட்டினாள். எனக்கு கொல்கொத்தாவில் அலைந்து திரிவது பிடித்திருந்தது. ஆனால் அந்த  அலைச்சலின் மத்தியில் எழுதும் போது தான் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது. எழுத்து என்னை மீண்டும் ஒரு மையத்தில் பொருத்தி நிலைப்படுத்த உதவியது. குழப்பங்களை, பயங்களை, கவலைகளை கடக்க செய்தது. ஒரு மணி நேரம் எழுதியபின் மனம் அலம்பி விட்டது போல் துலக்கமாகும். அந்த உணர்வுக்காகத்தான் மீண்டும் மீண்டும் எழுத்தில் போய் விழுகிறேன்.
ஆனால் எழுத்து ஒரு நெருக்கடியாகும் போது சிக்கல் தோன்றுகிறது. விருப்பப்படி எழுதுவது போக ஒரு கால அட்டவணைக்கு ஏற்ப தினமும் எழுதுவது களைப்படைய வைக்கிறது. இந்த இரண்டு தொடர்களும் என்னை அப்படித் தான் அலுக்க வைத்து விட்டன. எழுதி எழுதி திகட்டி விட்டது. சரி போதும் என ஒருநாள் முழுக்க எழுதாமல் இருந்தேன். கடந்த மூன்று நான்கு மாதங்களில் நான் முழுக்க எழுதாமல் இருந்த முதல் நாள் அது.
அன்று எப்படிப் போயிற்று? மிகவும் உற்சாகமாய், விடுதலையாய், மகிழ்ச்சியாய் உணர்தேன். கட்டற்று காற்றைப் போல் மனம் இருந்தது. இது போல் அடிக்கடி எழுத்தில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் அன்று மாலையே நான் காரணமின்றி கலங்க தொடங்கினேன். மனம் ஒருமுகப்படாமல் சிதறிக் கொண்டே இருந்தது. விசித்திரமான சோகம் ஒன்று இருளை போல் என்னை மூடிக் கொண்டது. மது அருந்துவதை நிறுத்துபவர்களுக்கு withdrawal symptoms வரும் என்பார்கள். எழுத்து எப்படியான ஒரு போதை என அன்றைய தவிப்பு எனக்கு புரிய வைத்தது. தொடர்ந்து எழுதுவது நம் மூளையின் அமைப்பை, வேதியல் செயல்பாட்டை மாற்றுகிறது என நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுபவன் தனக்குள் வேறு ஒருவனாகிறான்.
அடுத்த நாள் மீண்டும் சற்று நேரம் எழுதினதும் மனதுக்குள் மீண்டும் வெளிச்சம் பரவியது. எழுதாமல் இருக்கும் போது நான் அந்நியமாக, துண்டித்து விடப்பட்டது போல் உணர்கிறேன். எழுதுவது மாறாக அன்றாட வாழ்வின் எந்த பிரச்சனையையும் கூலாக சந்திக்க உதவுகிறது. உதாரணமாய் நான் மூன்று மணிநேரம் எழுதி முடித்த பின் யாரும் என்ன சொல்லியும் என்னை கோபப்பட வைக்க முடியாது. போதை வஸ்து பயன்படுத்துவோர், குடிகாரர்கள் ஆகியோருக்கும் இதே நிலை தான். போதை ஏற்றிக் கொண்ட பின் அவர்களைப் போல மகிழ்ச்சியான, கூலான பேர்வழிகளை பார்க்க முடியாது. அன்றாட வாழ்வை மிக இயல்பாக நிதானமாய் கையாள்வார்கள். ஆனால் போதை கிடைக்காவிட்டால் வாழ்க்கையே தப்புத்தாளமாகி விடும்.
நிறைய எழுதுவது என் இயல்பும் அல்ல. நான் 27 வயது வரை வருடத்திற்கு சில கவிதைகள் மட்டுமே எழுதி வந்தேன். நான் இயல்பில் ஒரு சோம்பேறி. ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து படிப்பது, கனவு காண்பது, வேடிக்கை பார்ப்பது தான் என் ஒரே ஜோலி. சமீபமாய் நான் முற்றிலும் மாறி வந்திருக்கிறேன். சொல்லப் போனால் சில வருடங்களுக்கு முன்பு கூட நான் இப்படி இல்லை. அப்போது வாரத்துக்கு ஒருமுறை தான் எழுதுவேன். அதுவே போதுமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் நான் மெல்ல மெல்ல முற்றிலும் வேறொரு ஆளாக மாறி வந்துள்ளதை என்னால் உணர முடிகிறது.
போதையின் குணம் இது: போக போக அளவு போதாமல் ஆகும். பத்து பக்கங்கள் எழுதினாலும் எழுதாதது போன்றே தோன்றும். கை நோகும் வரை எழுத அவசியமாகும். வலுக்கட்டாயமாய் நிறுத்தினால் என்ன ஆகும்? போன வருடம் மேகாலயா சென்றிருந்த போது வேண்டுமென்று ஒன்றுமே எழுதாமல் இருந்தேன். காரில் சென்று கொண்டிருந்தேன். பக்கத்தில் ஆங்கில கவிஞரும் நாவலாசிரியருமான ஜீத் தயில் இருந்தார். அரட்டை அடித்தபடி வந்தோம். கடந்த சில மணிநேரமாக எழுதுவதற்கு ஒரு டாபிக் மாட்டியிருந்தது. பிறகு எழுதலாம் என தள்ளிப் போட்டிருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டும் வெளியே மலைகளை வேடிக்கை பார்த்தும் வந்தோம். என் மனதில் எழுத வேண்டிய வரிகள் அப்போது தன்னிச்சையாக ஓடத் துவங்கின. என்னால் அதை நிறுத்த முடியவில்லை. மூன்று பத்திகள் கடந்ததும் இனியும் சரிப்படாது என லேப்டாப்பை திறந்து அப்படியே அந்த வரிகளை எழுதினேன். மனமும் உடலும் இசைவு கொண்டது.



Comments

Saravanakumar said…
<<ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து படிப்பது, கனவு காண்பது, வேடிக்கை பார்ப்பது தான் என் ஒரே ஜோலி. சமீபமாய் நான் முற்றிலும் மாறி வந்திருக்கிறேன்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? ஏனென்றால் இந்த symptoms எனக்கும் இருக்கு :) .. கொஞ்சம் மாத்திக்கலாம்னு பார்க்கிறேன்.

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...