முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராமின் சினிமா

Image result for taramani ram
சமீபத்தில் வெளியாகி உள்ள ராமின் “தரமணி” டீஸர் ஒரு கூர்முனை கத்தி போல் இருக்கிறது. சில விநாடிகளில் படம் எதைப்பற்றி என புரிய வைத்து விட்டார். “தங்கமீன்கள்” டீஸரை விட இது சிறப்பு. ஒரு நல்ல டீஸர் இப்படித் தான் இருக்க வேண்டும்.

 அதேநேரம் ஒரு நல்ல டீஸர் கிளீவேஜ் போல சிக்கனமாகவும், அடுத்து என்ன நடக்கும் என தூண்டும்படியாகவும் இருக்க வேண்டும். இந்த டீஸரில் ஒரு சமகால தலைமுறை இளைஞன் வருகிறான். அவன் ஒரு ஐ.டி நவீனப் பெண்ணை காதலிக்கிறான். அவள் விசயத்தில் பொஸஸ்ஸிவாக இருக்கிறான். அவள் போனில் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்புகிறாள் என ரகசியமாய் சோதிக்கிறான். அவள் பேஸ்புக்கில் ஏன் இத்தனை நண்பர்கள் என வினவுகிறான். அவளை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது தற்கொலை செய்வேன் என மிரட்டுகிறான். இதெல்லாம் இன்றைய ஆண்களின் சிக்கல்கள். ராம் இவற்றை அவதானித்திருப்பது சுவாரஸ்யம்.
 பெண்களின் ஆடை, அவர்கள் புற உலகோடு கொள்ளும் தொடர்புகள் இன்றைய ஆணுக்கு உறுத்தலாய் உள்ளது. அவள் எங்கே தனதாக மட்டும் இருக்க மாட்டாளோ என அவனது பாதி-மரபான மனம் துணுக்குறுகிறது. இன்றைய பல குடும்ப தகராறுகள் இப்படித் தான் ஆரம்பிக்கின்றன. பங்களூரில் ஒரு ஐடி கணவன் தன் மனைவியின் போன் குறுஞ்செய்திகளை சோதிக்க போக மனைவி கொந்தளித்து அவன் கையை கத்தியால் பல இடங்களில் கீறி விட்டார். இருவரும் பரஸ்பரம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதை ராமின் இதுவரையிலான சினிமாவின் மையம் எனலாம்: ஒரு மரபான ஆண் மனம் தாராளமயமாக்கலில் என்னவாகிறது? குறிப்பாய், குடும்பம், பெண்கள், பொருளாதாரம், சமூகத்தில் தன் அந்தஸ்து சார்ந்து.
ராமின் “தரமணியின்” கதை எனக்குத் தெரியும். ”நீயா நானா“ ஆண்டனியிடம் இக்கதையை ராம் கூறியிருக்கிறார். ஒரு உரையாடலின் போது ஆண்டனி எனக்கு சுருக்கமாய் சொன்னார். ”இப்படம் கமர்ஷியலாய் வெற்றி பெறும்” என்றும் அவர் கூறினார். கதை காட்சிபூர்வமாய் அபாரமாய் இருந்தது. அதாவது காட்சிபூர்வமாய் கதையின் துவக்கத்தையும் முடிவையும் இணைக்கும் இயல்பு கொண்ட திரைக்கதை அது. ஆண்டனி கதையை சொன்னதுமே படம் எப்படி வரப் போகிறது என ஊகித்து விட்டேன். கதையை நான் இப்போது சொல்வது அறமாக இருக்காது என்பதால் தவிர்க்கிறேன்.
எதற்கு இந்த முஸ்தீபு என்றால் இந்த டீஸரில் ராம் “கற்றது தமிழ்” மற்றும் “தங்க மீன்களில்” இருந்து கதையின் கூறல் மற்றும் தொனியில் பெருமளவு மாறி இருப்பதாய் தோன்றுகிறது. இன்றைய படங்களை அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார். நச்சென்ற சுருக்கமான வசனங்கள், நகைச்சுவை, நாடகீயமாய் உணர்ச்சிகரமாய் காட்சி வைக்காமல் லைட்டாய் வேகமாய் நகர்த்துவது போன்ற இயல்புகளை டீஸரில் கவனித்தேன். படம் ஒருவேளை வேறுமாதிரியாய் ராமின் இயல்பான நாடகீயமான தருணங்கள், அடர்த்தியான, சமூக விமர்சன வசனங்களுடன் அமையலாம். ஆனாலும் டீஸரில் அவர் சமகால திரைமொழியை கொண்டு வந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...