Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ராமின் சினிமா

Image result for taramani ram
சமீபத்தில் வெளியாகி உள்ள ராமின் “தரமணி” டீஸர் ஒரு கூர்முனை கத்தி போல் இருக்கிறது. சில விநாடிகளில் படம் எதைப்பற்றி என புரிய வைத்து விட்டார். “தங்கமீன்கள்” டீஸரை விட இது சிறப்பு. ஒரு நல்ல டீஸர் இப்படித் தான் இருக்க வேண்டும்.

 அதேநேரம் ஒரு நல்ல டீஸர் கிளீவேஜ் போல சிக்கனமாகவும், அடுத்து என்ன நடக்கும் என தூண்டும்படியாகவும் இருக்க வேண்டும். இந்த டீஸரில் ஒரு சமகால தலைமுறை இளைஞன் வருகிறான். அவன் ஒரு ஐ.டி நவீனப் பெண்ணை காதலிக்கிறான். அவள் விசயத்தில் பொஸஸ்ஸிவாக இருக்கிறான். அவள் போனில் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்புகிறாள் என ரகசியமாய் சோதிக்கிறான். அவள் பேஸ்புக்கில் ஏன் இத்தனை நண்பர்கள் என வினவுகிறான். அவளை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது தற்கொலை செய்வேன் என மிரட்டுகிறான். இதெல்லாம் இன்றைய ஆண்களின் சிக்கல்கள். ராம் இவற்றை அவதானித்திருப்பது சுவாரஸ்யம்.
 பெண்களின் ஆடை, அவர்கள் புற உலகோடு கொள்ளும் தொடர்புகள் இன்றைய ஆணுக்கு உறுத்தலாய் உள்ளது. அவள் எங்கே தனதாக மட்டும் இருக்க மாட்டாளோ என அவனது பாதி-மரபான மனம் துணுக்குறுகிறது. இன்றைய பல குடும்ப தகராறுகள் இப்படித் தான் ஆரம்பிக்கின்றன. பங்களூரில் ஒரு ஐடி கணவன் தன் மனைவியின் போன் குறுஞ்செய்திகளை சோதிக்க போக மனைவி கொந்தளித்து அவன் கையை கத்தியால் பல இடங்களில் கீறி விட்டார். இருவரும் பரஸ்பரம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதை ராமின் இதுவரையிலான சினிமாவின் மையம் எனலாம்: ஒரு மரபான ஆண் மனம் தாராளமயமாக்கலில் என்னவாகிறது? குறிப்பாய், குடும்பம், பெண்கள், பொருளாதாரம், சமூகத்தில் தன் அந்தஸ்து சார்ந்து.
ராமின் “தரமணியின்” கதை எனக்குத் தெரியும். ”நீயா நானா“ ஆண்டனியிடம் இக்கதையை ராம் கூறியிருக்கிறார். ஒரு உரையாடலின் போது ஆண்டனி எனக்கு சுருக்கமாய் சொன்னார். ”இப்படம் கமர்ஷியலாய் வெற்றி பெறும்” என்றும் அவர் கூறினார். கதை காட்சிபூர்வமாய் அபாரமாய் இருந்தது. அதாவது காட்சிபூர்வமாய் கதையின் துவக்கத்தையும் முடிவையும் இணைக்கும் இயல்பு கொண்ட திரைக்கதை அது. ஆண்டனி கதையை சொன்னதுமே படம் எப்படி வரப் போகிறது என ஊகித்து விட்டேன். கதையை நான் இப்போது சொல்வது அறமாக இருக்காது என்பதால் தவிர்க்கிறேன்.
எதற்கு இந்த முஸ்தீபு என்றால் இந்த டீஸரில் ராம் “கற்றது தமிழ்” மற்றும் “தங்க மீன்களில்” இருந்து கதையின் கூறல் மற்றும் தொனியில் பெருமளவு மாறி இருப்பதாய் தோன்றுகிறது. இன்றைய படங்களை அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார். நச்சென்ற சுருக்கமான வசனங்கள், நகைச்சுவை, நாடகீயமாய் உணர்ச்சிகரமாய் காட்சி வைக்காமல் லைட்டாய் வேகமாய் நகர்த்துவது போன்ற இயல்புகளை டீஸரில் கவனித்தேன். படம் ஒருவேளை வேறுமாதிரியாய் ராமின் இயல்பான நாடகீயமான தருணங்கள், அடர்த்தியான, சமூக விமர்சன வசனங்களுடன் அமையலாம். ஆனாலும் டீஸரில் அவர் சமகால திரைமொழியை கொண்டு வந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...