Skip to main content

ராமின் சினிமா

Image result for taramani ram
சமீபத்தில் வெளியாகி உள்ள ராமின் “தரமணி” டீஸர் ஒரு கூர்முனை கத்தி போல் இருக்கிறது. சில விநாடிகளில் படம் எதைப்பற்றி என புரிய வைத்து விட்டார். “தங்கமீன்கள்” டீஸரை விட இது சிறப்பு. ஒரு நல்ல டீஸர் இப்படித் தான் இருக்க வேண்டும்.

 அதேநேரம் ஒரு நல்ல டீஸர் கிளீவேஜ் போல சிக்கனமாகவும், அடுத்து என்ன நடக்கும் என தூண்டும்படியாகவும் இருக்க வேண்டும். இந்த டீஸரில் ஒரு சமகால தலைமுறை இளைஞன் வருகிறான். அவன் ஒரு ஐ.டி நவீனப் பெண்ணை காதலிக்கிறான். அவள் விசயத்தில் பொஸஸ்ஸிவாக இருக்கிறான். அவள் போனில் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்புகிறாள் என ரகசியமாய் சோதிக்கிறான். அவள் பேஸ்புக்கில் ஏன் இத்தனை நண்பர்கள் என வினவுகிறான். அவளை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது தற்கொலை செய்வேன் என மிரட்டுகிறான். இதெல்லாம் இன்றைய ஆண்களின் சிக்கல்கள். ராம் இவற்றை அவதானித்திருப்பது சுவாரஸ்யம்.
 பெண்களின் ஆடை, அவர்கள் புற உலகோடு கொள்ளும் தொடர்புகள் இன்றைய ஆணுக்கு உறுத்தலாய் உள்ளது. அவள் எங்கே தனதாக மட்டும் இருக்க மாட்டாளோ என அவனது பாதி-மரபான மனம் துணுக்குறுகிறது. இன்றைய பல குடும்ப தகராறுகள் இப்படித் தான் ஆரம்பிக்கின்றன. பங்களூரில் ஒரு ஐடி கணவன் தன் மனைவியின் போன் குறுஞ்செய்திகளை சோதிக்க போக மனைவி கொந்தளித்து அவன் கையை கத்தியால் பல இடங்களில் கீறி விட்டார். இருவரும் பரஸ்பரம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதை ராமின் இதுவரையிலான சினிமாவின் மையம் எனலாம்: ஒரு மரபான ஆண் மனம் தாராளமயமாக்கலில் என்னவாகிறது? குறிப்பாய், குடும்பம், பெண்கள், பொருளாதாரம், சமூகத்தில் தன் அந்தஸ்து சார்ந்து.
ராமின் “தரமணியின்” கதை எனக்குத் தெரியும். ”நீயா நானா“ ஆண்டனியிடம் இக்கதையை ராம் கூறியிருக்கிறார். ஒரு உரையாடலின் போது ஆண்டனி எனக்கு சுருக்கமாய் சொன்னார். ”இப்படம் கமர்ஷியலாய் வெற்றி பெறும்” என்றும் அவர் கூறினார். கதை காட்சிபூர்வமாய் அபாரமாய் இருந்தது. அதாவது காட்சிபூர்வமாய் கதையின் துவக்கத்தையும் முடிவையும் இணைக்கும் இயல்பு கொண்ட திரைக்கதை அது. ஆண்டனி கதையை சொன்னதுமே படம் எப்படி வரப் போகிறது என ஊகித்து விட்டேன். கதையை நான் இப்போது சொல்வது அறமாக இருக்காது என்பதால் தவிர்க்கிறேன்.
எதற்கு இந்த முஸ்தீபு என்றால் இந்த டீஸரில் ராம் “கற்றது தமிழ்” மற்றும் “தங்க மீன்களில்” இருந்து கதையின் கூறல் மற்றும் தொனியில் பெருமளவு மாறி இருப்பதாய் தோன்றுகிறது. இன்றைய படங்களை அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார். நச்சென்ற சுருக்கமான வசனங்கள், நகைச்சுவை, நாடகீயமாய் உணர்ச்சிகரமாய் காட்சி வைக்காமல் லைட்டாய் வேகமாய் நகர்த்துவது போன்ற இயல்புகளை டீஸரில் கவனித்தேன். படம் ஒருவேளை வேறுமாதிரியாய் ராமின் இயல்பான நாடகீயமான தருணங்கள், அடர்த்தியான, சமூக விமர்சன வசனங்களுடன் அமையலாம். ஆனாலும் டீஸரில் அவர் சமகால திரைமொழியை கொண்டு வந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...