முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராமின் சினிமா

Image result for taramani ram
சமீபத்தில் வெளியாகி உள்ள ராமின் “தரமணி” டீஸர் ஒரு கூர்முனை கத்தி போல் இருக்கிறது. சில விநாடிகளில் படம் எதைப்பற்றி என புரிய வைத்து விட்டார். “தங்கமீன்கள்” டீஸரை விட இது சிறப்பு. ஒரு நல்ல டீஸர் இப்படித் தான் இருக்க வேண்டும்.

 அதேநேரம் ஒரு நல்ல டீஸர் கிளீவேஜ் போல சிக்கனமாகவும், அடுத்து என்ன நடக்கும் என தூண்டும்படியாகவும் இருக்க வேண்டும். இந்த டீஸரில் ஒரு சமகால தலைமுறை இளைஞன் வருகிறான். அவன் ஒரு ஐ.டி நவீனப் பெண்ணை காதலிக்கிறான். அவள் விசயத்தில் பொஸஸ்ஸிவாக இருக்கிறான். அவள் போனில் யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்புகிறாள் என ரகசியமாய் சோதிக்கிறான். அவள் பேஸ்புக்கில் ஏன் இத்தனை நண்பர்கள் என வினவுகிறான். அவளை கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது தற்கொலை செய்வேன் என மிரட்டுகிறான். இதெல்லாம் இன்றைய ஆண்களின் சிக்கல்கள். ராம் இவற்றை அவதானித்திருப்பது சுவாரஸ்யம்.
 பெண்களின் ஆடை, அவர்கள் புற உலகோடு கொள்ளும் தொடர்புகள் இன்றைய ஆணுக்கு உறுத்தலாய் உள்ளது. அவள் எங்கே தனதாக மட்டும் இருக்க மாட்டாளோ என அவனது பாதி-மரபான மனம் துணுக்குறுகிறது. இன்றைய பல குடும்ப தகராறுகள் இப்படித் தான் ஆரம்பிக்கின்றன. பங்களூரில் ஒரு ஐடி கணவன் தன் மனைவியின் போன் குறுஞ்செய்திகளை சோதிக்க போக மனைவி கொந்தளித்து அவன் கையை கத்தியால் பல இடங்களில் கீறி விட்டார். இருவரும் பரஸ்பரம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதை ராமின் இதுவரையிலான சினிமாவின் மையம் எனலாம்: ஒரு மரபான ஆண் மனம் தாராளமயமாக்கலில் என்னவாகிறது? குறிப்பாய், குடும்பம், பெண்கள், பொருளாதாரம், சமூகத்தில் தன் அந்தஸ்து சார்ந்து.
ராமின் “தரமணியின்” கதை எனக்குத் தெரியும். ”நீயா நானா“ ஆண்டனியிடம் இக்கதையை ராம் கூறியிருக்கிறார். ஒரு உரையாடலின் போது ஆண்டனி எனக்கு சுருக்கமாய் சொன்னார். ”இப்படம் கமர்ஷியலாய் வெற்றி பெறும்” என்றும் அவர் கூறினார். கதை காட்சிபூர்வமாய் அபாரமாய் இருந்தது. அதாவது காட்சிபூர்வமாய் கதையின் துவக்கத்தையும் முடிவையும் இணைக்கும் இயல்பு கொண்ட திரைக்கதை அது. ஆண்டனி கதையை சொன்னதுமே படம் எப்படி வரப் போகிறது என ஊகித்து விட்டேன். கதையை நான் இப்போது சொல்வது அறமாக இருக்காது என்பதால் தவிர்க்கிறேன்.
எதற்கு இந்த முஸ்தீபு என்றால் இந்த டீஸரில் ராம் “கற்றது தமிழ்” மற்றும் “தங்க மீன்களில்” இருந்து கதையின் கூறல் மற்றும் தொனியில் பெருமளவு மாறி இருப்பதாய் தோன்றுகிறது. இன்றைய படங்களை அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார். நச்சென்ற சுருக்கமான வசனங்கள், நகைச்சுவை, நாடகீயமாய் உணர்ச்சிகரமாய் காட்சி வைக்காமல் லைட்டாய் வேகமாய் நகர்த்துவது போன்ற இயல்புகளை டீஸரில் கவனித்தேன். படம் ஒருவேளை வேறுமாதிரியாய் ராமின் இயல்பான நாடகீயமான தருணங்கள், அடர்த்தியான, சமூக விமர்சன வசனங்களுடன் அமையலாம். ஆனாலும் டீஸரில் அவர் சமகால திரைமொழியை கொண்டு வந்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.