இன்று மாலை ஆறு மணிக்கு தமிழ்
ஸ்டுடியோவின் ப்யூர் சினிமா புத்தகக் கடை அரங்கில் (வடபழனி கமலா தியேட்டர் அருகில்)
எனது “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவல் குறித்து ஒரு விவாதம் நடைபெறுகிறது.
இயக்குநர் ராம், கவிஞர் மனுஷி பாரதி, எழுத்தாளர்கள் மனோஜ், அருள் ஸ்காட் மற்றும் சரஸ்வதி
காயத்ரி பேசுகிறார்கள். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
