முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

”கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்”: வாசக சாலை விமர்சனக் கூட்டம்




நேற்று வாசக சாலை சார்பில் நடந்த எனது “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கான விமர்சனக் கூட்டம் ஒரு எழுத்தாளனாய் எனக்கு மிகவும் நிறைவளித்தது. வேலை நாள் என்பதால் கூட்டம் சேருமா என எனக்கு ஆரம்பத்தில் சற்று பதற்றம் இருந்தது. ஆனால் தான் போய் சேருமுன்னரே பதினைந்து பேர் அரங்கில் காத்திருந்ததாய் நிகழ்ச்சியின் அமைப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் சொன்னார். சற்று நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது.

 முதலில் அருள் ஒரு ஆழமான செறிவான உரையை தந்தார். நாவலை ஐரோப்பிய நாவல் பரப்பில் வைத்து, அதன் பல அடுக்குகளை விளக்கினார். எப்படி இந்நாவல் துப்பறியும் வகைமையில் எழுதப்பட்டாலும் அது அவ்வகைமையை கடந்து இலக்கிய நாவலாய் உருவாகி உள்ளதை குறிப்பிட்டார்.
 அடுத்து பேசிய கவிஞர் மனுஷி முழுக்க வேறொரு பார்வையை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்து அளித்தார். எப்படி தொடர்ந்து பெண் உடல் இங்கு பலியாக்கப்படுகிறது என்பதையும், நாவலில் தன்னை கவர்ந்த கவித்துவமான இடங்களை சுட்டிக் காட்டி அபாரமாய் பேசினார்.
 அடுத்து பேசிய சரஸ்வதி காயத்ரியின் உரையில் இருந்து ஒரு வாசகரின் கண்ணோட்டத்தை என்னால் துல்லியமாய் அறிய முடிந்தது. சகஜமாய் நேர்மையாய் தன்னை அந்த நாவல் எப்படி பயமுறுத்தவும் தொந்தரவு படுத்தவும் செய்தது எனப் பேசினார்.
 இயக்குநர் ராம் இந்த நாவல் சரளமாகவும் படிக்கத்தக்கதாகவும் உள்ளதை குறிப்பிட்டார். பாலியல் குற்றங்களுக்கு பலியாகும் ஒரு பெண் குழந்தையின் மனம் எப்படியானது என இந்நாவல் கேட்கும் இடம் முக்கியம் என்றார். ஒரு குழந்தை பத்து, பன்னிரெண்டு வயதில் இருந்தே தன்னை வளர்ந்த ஒருவளாக கருதக் கூடும். இந்த கோணத்தில் இருந்து நாவலில் தமிழ்ச்செல்வன் பாத்திரம் வைக்கும் வாதமான, தான் பலாத்காரம் செய்ததாய் கூறப்படும் பெண் உண்மையில் தன்னை தூண்டி அந்த உறவுக்குள் ஈடுபடச் செய்தாள் எனும் கருத்து, நாவலுக்கு மற்றொரு பரிமாணத்தை அளிக்கிறது என்றார்.
 இதை அடுத்து பேசிய எழுத்தாளர் விஜய மகேந்திரனும் நாவல் தனக்கு படிக்க சுவாரஸ்யமாய் இருந்ததையும், பத்மராஜன் படங்களையும் நினைவுபடுத்தியதையும் குறிப்பிட்டார்.
கூட்டத்தில் நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. என் மீதுள்ள பிரியத்தால் அங்கு வந்த நண்பர் முரளி, கவிஞர் பிரியதர்ஷினி, பிரவீன், மொழிபெயர்ப்பாளர் ஆனந்த்ராஜ், கவிஞர் பா.சரவணன், நண்பர்கள் டேவிட் வெஸ்லி, ஜெய்தினேஷ் என பலரையும் குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும்.
 இலக்கிய வாசகர்களும் எழுத்தாளர்களும் தமிழில் என்றுமே ஒரு குடும்பமாகத் தான் இருந்து வருகிறோம். கூட்டங்கள் ஒரு குடும்ப சந்திப்புக்கான ஒரு சந்தர்ப்பமும் தான். அது அளிக்கும் மகிழ்ச்சியே தனி!

கூட்டத்தை ஏற்பாடு செய்த, அபாரமாய் ஒருங்கிணைத்த வாசகர் சாலையின் கார்த்திக் வெங்கட்ராமன், பார்த்திபன், ராஜராஜன் ஆகியோருக்கு மீண்டும் என் நன்றிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...