முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீயெல்லாம் ஒரு தாயா?

Image result for writer cartoon
பிளாகில் மட்டும் எழுதினால் பிளாகர், பேஸ்புக்கில் எழுதினால் பேஸ்புக் பதிவர், இதையே பத்திரிகையில் எழுதினால் ”எழுத்தாளர்”. எப்படி இந்த பட்டங்களை தீர்மானிக்கிறார்கள் என எனக்கு இன்று வரை புரியவில்லை.
 இப்படி எழுத்துக்களுக்கு தனி குணம், வகைமை உண்டென்றும் எனக்கு தோன்றவில்லை. சாரு எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் துவக்கத்திலும் எழுதிய பத்திரிகை கட்டுரைகளை படியுங்கள். அவற்றில் இன்றுள்ள இணைய எழுத்தின் எள்ளலும் சரளமும் மிளிரும் ஸ்டைல் அப்போதே இருக்கும். நீளமாய் சீரியஸாய் பேஸ்புக், பிளாகில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். பத்திரிகையில் அரட்டை மொழி பயன்படுத்துகிறவர்களும் உண்டு. எப்படி இவர்களை வகை பிரிக்கிறார்கள்?

முன்பு இலக்கிய பத்திரிகைகளில் நீளமாய் கடிதம் எழுதி பிரசுரிப்பவர்கள் இருந்தனர். இக்கடிதங்கள் சிலநேரம் மிகத்தரமாய் இருக்கும் என சாரு ஒருமுறை என்னிடம் குறிப்பிட்டார். குறிப்பாய் காலச்சுவடு இக்கடிதங்கள் மூலம் ஒரு தனி இயக்கமே நடத்தியது. இவர்கள் எழுத்தாளர்கள் இல்லையா? இன்று பேஸ்புக் பதிவுகளுக்கு நீளமான முக்கியமான அல்லது சர்ச்சையை தூண்டும் பின்னூட்டம் எழுதுகிறவர்கள் தனியே இருக்கிறார்கள். பத்து வரி பதிவு எழுதுபவர் பதிவர் எழுத்தாளர் என்றால் இருபது வரிக்கு பின்னூட்டம் இடுபவர் யார்? நோட்டு புத்தகத்தில் நிறைய எழுதி எதையுமே பிரசுரிக்காதவர்கள் எழுத்தாளர்களா இல்லையா?
எது இந்த எழுத்தாள அடையாளத்தை கொடுக்கிறது? தொடர்ந்து எழுதுவதா? அப்படி என்றால் வருடத்திற்கு ஒரு கதை எழுதுபவர் அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு தொகுப்பு பிரசுரித்து விட்டு காணாமல் போனவர் எழுத்தாளர் இல்லையா?

சினிமாவில் இந்த சிக்கல் இல்லை. இயக்குநர் ராமை அவர் படம் எடுக்கும் முன்பே எனக்குத் தெரியும். அவர் தன்னை அப்போதே இயக்குநர் எனத் தான் அறிமுகப்படுத்திக் கொள்வார். ஒருவர் படம் எடுக்க நினைத்தாலே அவர் இயக்குநர் தான் என கூறுவார் அவர். ஆனால் எழுத்தில் இப்படி சுலபத்தில் கோர முடிவதில்லை. இசை, ஓவியம் போன்ற கலைகளுக்கும் இது பொருந்தும்.

ஒருவேளை இது வணிகமயமாகாத கலைகளில் சிக்கலாக இருக்கலாம். ஏனென்றால் பரவலான விற்பனைக்குரிய எந்த பண்டத்தை உற்பத்தி பண்ணக் கூடியவருக்கும் உடனடியாய் ஒரு அடையாளம் கிடைத்து விடுகிறது. இல்லாத போது அடையாளம் முழுக்க பார்வை சார்ந்ததாகிறது.

ஒரு பெண் எப்போது தாயாகிறாள்? கருத்தரித்த பின்னரா அல்லது முன்னரேவா? எந்த குழந்தையையும் அள்ளி கையிலெடுத்து நேசிக்கும் ஒருவள் தாயின் அந்தஸ்தை பெறுகிறாளா? பெற்ற பிள்ளையை வெறுக்கும் தாய் ஒருத்தி தாயா இல்லையா? நீயெல்லாம் ஒரு தாயா?, தகப்பனா? நீயெல்லாம் ஒரு நண்பனா? என்பதான கேள்விகளை நீங்கள் “நீயெல்லாம் இரு இயக்குநரா?” “நீயெல்லாம் ஒரு விற்பனை பிரதிநிதியா?” “நீயெல்லாம் ஒரு முதலாளியா?” என மாற்றி கேட்க முடியாது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...