Skip to main content

மனதுக்குள் கேட்கும் குரல்

Image result for silk smitha

இதைப் படிக்கும் போது உங்களுக்குள் ஒரு குரல் ஒலிக்கிறதே அது யாருடையது? உங்களுடையது தான். ஆனால் நீங்கள் தான் வாயே திறக்கவில்லையே? இது எப்படி நிகழ்கிறது. அறிவியல் ஒரு விளக்கம் கொடுக்கிறது. பேச்சுக்கான சில நரம்பணுக்கள் வாசிக்கும் போதும் செயல்படுகின்றன. அதனால் தான் ”குரல்” கேட்கிறது.

மேற்கத்திய இலக்கிய கோட்பாடுகள் குறித்து ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு அத்தியாயம் அமைப்பியல் பற்றி. அமைப்பியலின் பிதாமகர் சசூர். அவர் ஒரு சொல் எப்படி அர்த்தம் கொள்கிறது என விளக்குகிறார். சில்க் என்றதும் உங்களுக்கு எப்படி அர்த்தமாகும்? சில்க் ஸ்மிதா, பட்டாடை அல்லது பட்டின் மென்மை, ஏன் பட்டுப்புழு கூட மனதில் தோன்றலாம். முதலிடம் எப்படியோ சிலுக்குக்கு தான். சரி எப்படி இந்த அர்த்தப்படுத்தல் நிகழ்கிறது?
ஒரு சொல்லை சசூர் இரண்டு விசயங்களின் இணைப்பினால் உருவாகிற சங்கதி என பார்க்கிறார். அர்த்தப்படுத்தும் சங்கதி, அர்த்தப்படுத்தப்படும் விசயம். சில்க் என்றால் அவரது தோற்றம் அர்த்தப்படுத்தும் சங்கதி (signifier). சில்க் எப்படியானவர் (அதாவது ஒரு நடிகை) என்பது அர்த்தப்படுத்தப்படும் விசயம் (signified).
 இதை ஏன் ரெண்டாக பார்க்க வேண்டும்? ஒருவேளை சில்க் ஸ்மிதா தொடர்ந்து வாழ்ந்திருந்தால், அரசியலில் புகுந்து வென்று, ஒரு கட்சியின் தலைவி ஆகி முதலமைச்சர் ஆகி தனக்கென வேறு ஒரு அடையாளத்தை உருவாக்கி இருந்தால்… ஒரு ஐம்பது வருடங்கள் கழித்து சில்க் என கேட்டதும் உங்களுக்கு “தமிழினத் தலைவி”, “ஏழைகளின் காவலர்” என்பது போல் ஒரு அர்த்தம் கிடைக்கலாம். ஆக அர்த்தம் நிரந்தரம் அல்ல. இதை விளக்க ஒரு சொல்லையும் அர்த்தத்தை ரெண்டாய் பிரித்து பார்க்க வேண்டும் என்றார் சசூர். அதனால் அவர் சொல்லையே ரெண்டாக்கினார். அர்த்தத்தை சுட்டி நிற்கும் பொருள். அது சுட்டும் அர்த்தம்.
இதை விளக்கும் போது சசூர் sound image பற்றி சொல்கிறார். ஒரு சொல் நமக்குள் வேலை செய்ய அதற்கு ஒரு ஒலி பிம்பம் வேண்டும் என்றார். உதாரணமாய் மோடி என்று கேட்டதும், அதாவது படித்தால் கூட, மனதுக்குள் அவரது சித்திரம் எழ வேண்டும். அதற்கு நம் மனம் மோடி எனும் சொல் தனக்குள் ஒலித்து கேட்க வேண்டும் என்றார். அதாவது நீங்கள் சாலையில் ஒரு அழகான பெண்ணை பார்த்ததும் அவளைக் குறித்து யோசிக்கிறீர்கள். அந்த எண்ணங்களை, உங்கள் குரல் பின்னணியில் டப்பிங் செய்ய, மனதுக்குள் நீங்கள் அவளை பார்க்கும் அதே சமயம் கேட்கிறீர்கள் தானே? அப்படி கேட்காமல் அவளைக் குறித்து நீங்கள் யோசிக்கவே முடியாது.
எனக்கு இந்த இடம் வந்ததும் ஒரு சந்தேகம் எழுந்தது. பிறவியிலே செவிடான ஒருவருக்கு எந்த சொல்லுக்கும் ஒலி வடிவம் தெரியாது. அவர் வாசிக்கும் போது, யோசிக்கும் போது சொற்கள் அவருக்குள் ஒலிக்குமா? அவருக்குள் sound image இருக்காது தானே? அப்படி என்றால் சசூர் சொல்வது அவர் விசயத்தில் பொருந்தாது.
அது மட்டுமல்ல திடீரென ஒருவர் கத்தியை எடுத்து நம் கழுத்தில் வைத்தால் அந்த நொடி உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என துல்லியமாய் புரிந்து விடும். ஆனால் யோசிக்கவே மாட்டீர்கள். எண்ணமே எழாமல் புரிந்து கொள்வீர்கள். அப்போது கத்தி எனும் பிம்பத்தை அதன் ஒலி வடிவின்றி அறிந்து கொள்கிறோமே. இது எப்படி நிகழ்கிறது?

அதே போல வேகமாய் வாசிக்கையிலும் நம் மனம் சொற்களை உச்சரிப்பதில்லை. சசூரின் கோட்பாடே பிரக்ஞைபூர்வமான மனநிலையில் ஏற்படுத்தும் அர்த்தப்படுத்தல் பற்றியது என நினைக்கிறேன். பிரக்ஞை அற்ற நிலையில் நாம் புரிந்து கொள்ளும் போது சசூரின் ஒலி பிம்பம் செயல்படுவதில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...