Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

கெ.என் சிவராமனின் விஷமத்தனமும் சில விளக்கங்களும்


நான் காலச்சுவடிற்கு நகர முயல்கிறேனா என கெ.என் சிவராமன் ஒரு விஷமத்தனமான கேள்வியை எழுப்பி இருக்கிறார். நான் பிரம்மராஜனை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியது தான் காரணம். அவருக்கு கூறிக் கொள்வது என்னவென்றால்:

1. நூல்களை பிரசுரிக்க பதிப்பகம் நாடி தெருத்தெருவாய் அலையும் அவல நிலையில் நான் இதுவரை இல்லை.


2. கடந்த எட்டு வருடங்களில் பல முறை நான் என் பதிப்பாளருடன் இலக்கிய விவாதங்களில் முரண்பட்டிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறேன். ஆனால் எங்கள் இடையே உறவு அதனால் கசந்ததில்லை. அப்போதெல்லாம் நான் புது பதிப்பகத்தை நாடுகிறேனா என உங்களுக்கு ஐயம் ஏற்படாதது ஏன்? ஒரு சம்மந்தமில்லாத விசயத்தில் நான் காலச்சுவடு நோக்கி போவதாய் உங்களுக்கு சந்தேகம் எழுவது விசித்திரம் தான். நான் சுதந்திரமாய் சிந்திப்பவன். எழுதுபவன். என் கருத்துக்கள் சிலநேரம் எதேச்சையாய் சிலருக்கு ஆதரவாக்வும் சிலருக்கு எதிராகவும் மாறும். அது திட்டமிட்டு செய்வதல்ல. எனக்கு குழிபறிக்கும் / முதுகை வருடும் அரசியலில் ஆர்வமில்லை. என்றும் அதை செய்ததில்லை.



3. உயிர்மையில் மட்டுமே என் நூல்கள் வெளியாகி உள்ளன. உயிர்மையில் வெளியான நூல்களுக்காகவே நான் யுவ புரஷ்கார் மற்றும் பாஷா பரிஷத் விருதுகள் பெற்றேன். உயிர்மையில் தான் நான் எழுத்தாளனாக அறிமுகமானேன். அடையாளம் பெற்றேன். இவ்வளவு ராசியான ஒரு இடத்தை நான் ஏன் விட்டு விலக வேண்டும்? உங்களுக்கு நான் அங்கு இருப்பது உறுத்துகிறது என்றால் கூலிப்படை வைத்து தூக்கி விடுங்கள்.

4. உயிர்மை என் நூல்களுக்கான ராயல்டி தொகையை வழங்குகிறது. எனக்கு அப்பதிப்பகத்துடன் எந்த பிணக்கும் இல்லை. கோபதாபங்கள் இல்லை.

5. இன்னொரு முக்கியமான விசயம்: சிவராமன், நீங்கள் ஒரு எழுத்தாளர் அல்லாததால் இந்த பரிமாணத்தை நீங்கள் அறியாதிருக்கலாம்: ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளனுக்குமான உறவு தாம்பத்யம் போன்றது. அது one night stand அல்ல. ஏன் இமையம் கிரியாவில் மட்டுமே தன் நூல்களை தொடர்ந்து பிரசுரிக்கிறார் என யோசித்திருக்கிறீர்களா? எஸ்.ராவுக்கு உயிர்மையுடனும் ஜெயமோகனுக்கு தமிழினியுடனும் உள்ள நீண்ட கால உறவின் உணர்ச்சிகரமான, படைப்பூக்கம் சம்மந்தமான பரிமாணத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு எழுத்தாளன் தொடர்ந்து படைப்பூக்கத்துடன் இயங்க அவனை ஊக்குவிக்கும், நம்பி ஆதரவு அளிக்கும் ஒரு இயக்கம் வேண்டும். இலக்கியத்தில் ஒரு நல்ல பதிப்பகமே அப்படி ஒரு இயக்கமாக இருக்கும். அதன் பகுதியாக இருந்தே எழுத்தாளன் வளர முடியும். மேலும் இது அன்பு, நம்பிக்கை, அர்ப்பணிப்பு சம்மந்தப்பட்ட விசயம். கடந்த இருபதாண்டுகளில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களை கவனித்தாலே இது புரியும். தமிழில் ஏன் உலக இலக்கியத்தில் கூட எடிட்டர் / பதிப்பாளருடனா கூட்டுறவின் அடிப்படையில் தான் பல எழுத்தாளர்கள் சாதித்திருக்கிறார்கள். உயிர்மையுடன் இருந்த போது சாரு எவ்வளவு எழுதினார், பிரிந்த பிறகு அவரது புத்தகங்களின், கட்டுரைகளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தது என்பதை அறிவேன். சாருவுக்கு பதிப்பிக்க ஆள் இல்லாமல் இல்லை. அவரை தொடர்ந்து ஊக்குவித்து அரவணைத்து எழுத தூண்ட ஒரு ஆள் வேண்டும். அது தான் அவருக்கு இல்லாமல் போனது. எழுத்தாளன் தனியே நின்று இயங்குவதில்லை. அவனுக்கு பின்னால் கண்மூடித்தனமாய் அவனை நம்பும் ஒரு இயக்கம் உள்ளது. அந்த இயக்கத்துடனான அவனது உறவு உணர்ச்சியின், அன்பின், பிரியத்தின், நம்பிக்கையின் அடிப்படையிலானது. வாழ்க்கையில் இந்த உணர்வுகளுக்கு இடமளிக்காதவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளன் ஒரு பதிப்பகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கிறான் என புரியாது. எனக்கு யார் மீது நேசமுள்ளதோ அவர்களுடனே நான் செயல்பட முடியும். நேசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாது.


6. எப்படியாவது எனக்கும் உயிர்மைக்கும் ஒரு புகைச்சலை உண்டு பண்ணி பார்த்து ரசிக்கலாம் என உங்கள் நோக்கம் புரிகிறது. உங்களுக்கு சிண்டு முடிய வராது சிவராமன். அந்த சாமர்த்தியம் உங்களுக்கு போதாது. வழக்கம் போல் யுவகிருஷ்ணாவை தூண்டி விட்டு எனக்கு எதிராய் எழுத வையுங்கள். அல்லது புதிதாக அவரைப் போல் ஒருவரை உருவாக்குங்கள். நான் எழுதுகிற வேறு பத்திரிகைகளின் எடிட்டர்களிடம் சென்று என்னைப் பற்றி புகார் செய்யுங்கள். அது போன்ற ரகசிய சதியாலோசனைகள் தான் உங்களுக்கு நன்றாக கைவரும். வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...