Skip to main content

கெ.என் சிவராமனின் விஷமத்தனமும் சில விளக்கங்களும்


நான் காலச்சுவடிற்கு நகர முயல்கிறேனா என கெ.என் சிவராமன் ஒரு விஷமத்தனமான கேள்வியை எழுப்பி இருக்கிறார். நான் பிரம்மராஜனை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியது தான் காரணம். அவருக்கு கூறிக் கொள்வது என்னவென்றால்:

1. நூல்களை பிரசுரிக்க பதிப்பகம் நாடி தெருத்தெருவாய் அலையும் அவல நிலையில் நான் இதுவரை இல்லை.


2. கடந்த எட்டு வருடங்களில் பல முறை நான் என் பதிப்பாளருடன் இலக்கிய விவாதங்களில் முரண்பட்டிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறேன். ஆனால் எங்கள் இடையே உறவு அதனால் கசந்ததில்லை. அப்போதெல்லாம் நான் புது பதிப்பகத்தை நாடுகிறேனா என உங்களுக்கு ஐயம் ஏற்படாதது ஏன்? ஒரு சம்மந்தமில்லாத விசயத்தில் நான் காலச்சுவடு நோக்கி போவதாய் உங்களுக்கு சந்தேகம் எழுவது விசித்திரம் தான். நான் சுதந்திரமாய் சிந்திப்பவன். எழுதுபவன். என் கருத்துக்கள் சிலநேரம் எதேச்சையாய் சிலருக்கு ஆதரவாக்வும் சிலருக்கு எதிராகவும் மாறும். அது திட்டமிட்டு செய்வதல்ல. எனக்கு குழிபறிக்கும் / முதுகை வருடும் அரசியலில் ஆர்வமில்லை. என்றும் அதை செய்ததில்லை.



3. உயிர்மையில் மட்டுமே என் நூல்கள் வெளியாகி உள்ளன. உயிர்மையில் வெளியான நூல்களுக்காகவே நான் யுவ புரஷ்கார் மற்றும் பாஷா பரிஷத் விருதுகள் பெற்றேன். உயிர்மையில் தான் நான் எழுத்தாளனாக அறிமுகமானேன். அடையாளம் பெற்றேன். இவ்வளவு ராசியான ஒரு இடத்தை நான் ஏன் விட்டு விலக வேண்டும்? உங்களுக்கு நான் அங்கு இருப்பது உறுத்துகிறது என்றால் கூலிப்படை வைத்து தூக்கி விடுங்கள்.

4. உயிர்மை என் நூல்களுக்கான ராயல்டி தொகையை வழங்குகிறது. எனக்கு அப்பதிப்பகத்துடன் எந்த பிணக்கும் இல்லை. கோபதாபங்கள் இல்லை.

5. இன்னொரு முக்கியமான விசயம்: சிவராமன், நீங்கள் ஒரு எழுத்தாளர் அல்லாததால் இந்த பரிமாணத்தை நீங்கள் அறியாதிருக்கலாம்: ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளனுக்குமான உறவு தாம்பத்யம் போன்றது. அது one night stand அல்ல. ஏன் இமையம் கிரியாவில் மட்டுமே தன் நூல்களை தொடர்ந்து பிரசுரிக்கிறார் என யோசித்திருக்கிறீர்களா? எஸ்.ராவுக்கு உயிர்மையுடனும் ஜெயமோகனுக்கு தமிழினியுடனும் உள்ள நீண்ட கால உறவின் உணர்ச்சிகரமான, படைப்பூக்கம் சம்மந்தமான பரிமாணத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு எழுத்தாளன் தொடர்ந்து படைப்பூக்கத்துடன் இயங்க அவனை ஊக்குவிக்கும், நம்பி ஆதரவு அளிக்கும் ஒரு இயக்கம் வேண்டும். இலக்கியத்தில் ஒரு நல்ல பதிப்பகமே அப்படி ஒரு இயக்கமாக இருக்கும். அதன் பகுதியாக இருந்தே எழுத்தாளன் வளர முடியும். மேலும் இது அன்பு, நம்பிக்கை, அர்ப்பணிப்பு சம்மந்தப்பட்ட விசயம். கடந்த இருபதாண்டுகளில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களை கவனித்தாலே இது புரியும். தமிழில் ஏன் உலக இலக்கியத்தில் கூட எடிட்டர் / பதிப்பாளருடனா கூட்டுறவின் அடிப்படையில் தான் பல எழுத்தாளர்கள் சாதித்திருக்கிறார்கள். உயிர்மையுடன் இருந்த போது சாரு எவ்வளவு எழுதினார், பிரிந்த பிறகு அவரது புத்தகங்களின், கட்டுரைகளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தது என்பதை அறிவேன். சாருவுக்கு பதிப்பிக்க ஆள் இல்லாமல் இல்லை. அவரை தொடர்ந்து ஊக்குவித்து அரவணைத்து எழுத தூண்ட ஒரு ஆள் வேண்டும். அது தான் அவருக்கு இல்லாமல் போனது. எழுத்தாளன் தனியே நின்று இயங்குவதில்லை. அவனுக்கு பின்னால் கண்மூடித்தனமாய் அவனை நம்பும் ஒரு இயக்கம் உள்ளது. அந்த இயக்கத்துடனான அவனது உறவு உணர்ச்சியின், அன்பின், பிரியத்தின், நம்பிக்கையின் அடிப்படையிலானது. வாழ்க்கையில் இந்த உணர்வுகளுக்கு இடமளிக்காதவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளன் ஒரு பதிப்பகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கிறான் என புரியாது. எனக்கு யார் மீது நேசமுள்ளதோ அவர்களுடனே நான் செயல்பட முடியும். நேசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாது.


6. எப்படியாவது எனக்கும் உயிர்மைக்கும் ஒரு புகைச்சலை உண்டு பண்ணி பார்த்து ரசிக்கலாம் என உங்கள் நோக்கம் புரிகிறது. உங்களுக்கு சிண்டு முடிய வராது சிவராமன். அந்த சாமர்த்தியம் உங்களுக்கு போதாது. வழக்கம் போல் யுவகிருஷ்ணாவை தூண்டி விட்டு எனக்கு எதிராய் எழுத வையுங்கள். அல்லது புதிதாக அவரைப் போல் ஒருவரை உருவாக்குங்கள். நான் எழுதுகிற வேறு பத்திரிகைகளின் எடிட்டர்களிடம் சென்று என்னைப் பற்றி புகார் செய்யுங்கள். அது போன்ற ரகசிய சதியாலோசனைகள் தான் உங்களுக்கு நன்றாக கைவரும். வாழ்த்துக்கள்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...