முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெ.என் சிவராமனின் விஷமத்தனமும் சில விளக்கங்களும்


நான் காலச்சுவடிற்கு நகர முயல்கிறேனா என கெ.என் சிவராமன் ஒரு விஷமத்தனமான கேள்வியை எழுப்பி இருக்கிறார். நான் பிரம்மராஜனை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதியது தான் காரணம். அவருக்கு கூறிக் கொள்வது என்னவென்றால்:

1. நூல்களை பிரசுரிக்க பதிப்பகம் நாடி தெருத்தெருவாய் அலையும் அவல நிலையில் நான் இதுவரை இல்லை.


2. கடந்த எட்டு வருடங்களில் பல முறை நான் என் பதிப்பாளருடன் இலக்கிய விவாதங்களில் முரண்பட்டிருக்கிறேன். நிறைய விவாதித்திருக்கிறேன். ஆனால் எங்கள் இடையே உறவு அதனால் கசந்ததில்லை. அப்போதெல்லாம் நான் புது பதிப்பகத்தை நாடுகிறேனா என உங்களுக்கு ஐயம் ஏற்படாதது ஏன்? ஒரு சம்மந்தமில்லாத விசயத்தில் நான் காலச்சுவடு நோக்கி போவதாய் உங்களுக்கு சந்தேகம் எழுவது விசித்திரம் தான். நான் சுதந்திரமாய் சிந்திப்பவன். எழுதுபவன். என் கருத்துக்கள் சிலநேரம் எதேச்சையாய் சிலருக்கு ஆதரவாக்வும் சிலருக்கு எதிராகவும் மாறும். அது திட்டமிட்டு செய்வதல்ல. எனக்கு குழிபறிக்கும் / முதுகை வருடும் அரசியலில் ஆர்வமில்லை. என்றும் அதை செய்ததில்லை.



3. உயிர்மையில் மட்டுமே என் நூல்கள் வெளியாகி உள்ளன. உயிர்மையில் வெளியான நூல்களுக்காகவே நான் யுவ புரஷ்கார் மற்றும் பாஷா பரிஷத் விருதுகள் பெற்றேன். உயிர்மையில் தான் நான் எழுத்தாளனாக அறிமுகமானேன். அடையாளம் பெற்றேன். இவ்வளவு ராசியான ஒரு இடத்தை நான் ஏன் விட்டு விலக வேண்டும்? உங்களுக்கு நான் அங்கு இருப்பது உறுத்துகிறது என்றால் கூலிப்படை வைத்து தூக்கி விடுங்கள்.

4. உயிர்மை என் நூல்களுக்கான ராயல்டி தொகையை வழங்குகிறது. எனக்கு அப்பதிப்பகத்துடன் எந்த பிணக்கும் இல்லை. கோபதாபங்கள் இல்லை.

5. இன்னொரு முக்கியமான விசயம்: சிவராமன், நீங்கள் ஒரு எழுத்தாளர் அல்லாததால் இந்த பரிமாணத்தை நீங்கள் அறியாதிருக்கலாம்: ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளனுக்குமான உறவு தாம்பத்யம் போன்றது. அது one night stand அல்ல. ஏன் இமையம் கிரியாவில் மட்டுமே தன் நூல்களை தொடர்ந்து பிரசுரிக்கிறார் என யோசித்திருக்கிறீர்களா? எஸ்.ராவுக்கு உயிர்மையுடனும் ஜெயமோகனுக்கு தமிழினியுடனும் உள்ள நீண்ட கால உறவின் உணர்ச்சிகரமான, படைப்பூக்கம் சம்மந்தமான பரிமாணத்தை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு எழுத்தாளன் தொடர்ந்து படைப்பூக்கத்துடன் இயங்க அவனை ஊக்குவிக்கும், நம்பி ஆதரவு அளிக்கும் ஒரு இயக்கம் வேண்டும். இலக்கியத்தில் ஒரு நல்ல பதிப்பகமே அப்படி ஒரு இயக்கமாக இருக்கும். அதன் பகுதியாக இருந்தே எழுத்தாளன் வளர முடியும். மேலும் இது அன்பு, நம்பிக்கை, அர்ப்பணிப்பு சம்மந்தப்பட்ட விசயம். கடந்த இருபதாண்டுகளில் தொடர்ந்து எழுதும் எழுத்தாளர்களை கவனித்தாலே இது புரியும். தமிழில் ஏன் உலக இலக்கியத்தில் கூட எடிட்டர் / பதிப்பாளருடனா கூட்டுறவின் அடிப்படையில் தான் பல எழுத்தாளர்கள் சாதித்திருக்கிறார்கள். உயிர்மையுடன் இருந்த போது சாரு எவ்வளவு எழுதினார், பிரிந்த பிறகு அவரது புத்தகங்களின், கட்டுரைகளின் எண்ணிக்கை எவ்வளவு குறைந்தது என்பதை அறிவேன். சாருவுக்கு பதிப்பிக்க ஆள் இல்லாமல் இல்லை. அவரை தொடர்ந்து ஊக்குவித்து அரவணைத்து எழுத தூண்ட ஒரு ஆள் வேண்டும். அது தான் அவருக்கு இல்லாமல் போனது. எழுத்தாளன் தனியே நின்று இயங்குவதில்லை. அவனுக்கு பின்னால் கண்மூடித்தனமாய் அவனை நம்பும் ஒரு இயக்கம் உள்ளது. அந்த இயக்கத்துடனான அவனது உறவு உணர்ச்சியின், அன்பின், பிரியத்தின், நம்பிக்கையின் அடிப்படையிலானது. வாழ்க்கையில் இந்த உணர்வுகளுக்கு இடமளிக்காதவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளன் ஒரு பதிப்பகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்கிறான் என புரியாது. எனக்கு யார் மீது நேசமுள்ளதோ அவர்களுடனே நான் செயல்பட முடியும். நேசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாது.


6. எப்படியாவது எனக்கும் உயிர்மைக்கும் ஒரு புகைச்சலை உண்டு பண்ணி பார்த்து ரசிக்கலாம் என உங்கள் நோக்கம் புரிகிறது. உங்களுக்கு சிண்டு முடிய வராது சிவராமன். அந்த சாமர்த்தியம் உங்களுக்கு போதாது. வழக்கம் போல் யுவகிருஷ்ணாவை தூண்டி விட்டு எனக்கு எதிராய் எழுத வையுங்கள். அல்லது புதிதாக அவரைப் போல் ஒருவரை உருவாக்குங்கள். நான் எழுதுகிற வேறு பத்திரிகைகளின் எடிட்டர்களிடம் சென்று என்னைப் பற்றி புகார் செய்யுங்கள். அது போன்ற ரகசிய சதியாலோசனைகள் தான் உங்களுக்கு நன்றாக கைவரும். வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...