Skip to main content

வெறுமை என்றால் என்ன?


வெறுமைக்கு நிறைய விளக்கங்கள் உள்ளன. அதாவது ஆன்மீக ரீதியாய், தத்துவார்த்தமாய், உளவியல் ரீதியாய். ஆனால் நான் கேட்பது அன்றாட வாழ்க்கையில் நாம் உணரும் வெறுமை. அதாவது “இன்று ஒன்றுமே நினைத்துப் பார்க்கும்படியாய் இல்லை, நான் இன்று ஒன்றுமே உருப்படியாய் செய்யவில்லை, இன்றைய நான் ஒன்றுமில்லாமல் முடிந்து போனதே” எனும் உணர்வு.

இந்த உணர்வு முரணானது. ஏனென்றால் நாம் நாள் முழுக்க எதையோ செய்தபடி தான் இருக்கிறோம். அன்றாட கடமைகள், வேலைக்கு பயணிப்பது, வேலையை செய்வது, வெளியிடத்தில் வெளிநபர்கள், கூட பணி செய்பவர்கள், நண்பர்களுடன் பழகுவது, அவர்களை கையாள்வது என ஒரு நிமிடம் கூட அசராமல் பரபரப்பாய் தான் இருக்கிறோம். ஆனால் ஒரு வேலை நாள் முடிந்து வீடு திரும்பும் போது மேற்சொன்ன உணர்வுகள் வருகின்றன. நினைத்துப் பார்க்கும்படியாய் இன்று ஒன்றுமே இல்லையே என நினைக்கிறோம்.
வேலைக்கு போகாமல் வீட்டில் ஓய்வாய் இருப்பவர்களுக்கும் இதே வெறுமை தோன்றுகிறது. ஒன்று, நேரம் நகராது. எதையாவது உருட்டி புரட்டி நேரத்தை கடத்தியபடி இன்று ஏன் இப்படி வீணாய் கழிந்தது எனத் தோன்றும். அல்லது, நாம் உண்மையில் என்னதான் இந்த வாழ்க்கையில் பண்ணுகிறோம் என கேள்வி எழும்.
இந்த வெறுமை தான் டி.வி, சினிமா, குடி, சூது போன்ற பொழுதுபோக்குகளை நோக்கி, போலி சாமியார்கள், மிதமிஞ்சிய காமத்தை நோக்கி, குற்றங்களை நோக்கி நம்மை செலுத்துகிறது. இன்றைய நாளை நினைத்துப் பார்க்கும்படியாய் செய்ய அரைமணி நேரம் அமைந்தால் போதும் என நினைக்கிறோம். ஆனால் எல்லாம் முடிந்த பின் நாம் இன்னும் அதிக வெறுமையாய் தான் உணர்கிறோம்.
உண்மையில் பிரச்சனை என்ன? நம் வாழ்க்கையில் ஆழமான திருப்தி இல்லை. சரி ஆழமான திருப்தி என்றால் என்ன?
நான் அதை இப்படி வகுத்துக் கொள்கிறேன்.
ஆழமான திருப்தி = ஆழமான நினைவுகள்.
வெறுமை என்பது நினைவுகள் இல்லாத நிலை. அதாவது உறுதியாய் நாம் பற்றிக் கொள்ளும்படியான நினைவுகள் இல்லாத நிலை. ஒரு ஆழமான உக்கிரமான மகிழ்ச்சியான அனுபவம் (படைப்பூக்கமான செயல்கள், தியானம், மனம் திளைக்கும் அன்பான தருணங்கள், ஒரு பிரம்மாண்டமான செயலில் பங்குபெறும் உணர்வு, ஒரு சின்ன வேலையை சரியாய் விருப்பம் போல செய்து முடிக்கும் நிறைவான நிமிடம்) நேரும் போது காலம் அப்படியே உறைந்து நிற்கும். ஆனால் கனமற்ற அனுபவங்கள் (யாருக்காகவோ அர்த்தமின்றி காத்திருப்பது, திறமைக்கு தொடர்பற்ற வேலையை செய்வது, பிடிக்காத உரையாடலில் பங்கு கொள்வது…) நேரும் போது காலம் விரைந்து கொண்டிருப்பதை மனம் உணர்ந்தபடியே இருக்கும். காலத்தை தடுத்து நிறுத்த ஏங்குவோம். ஆனால் முடியாது. இப்படித் தான் ஒருநாள் வீணாய் போனதாய் உணர்வு ஏற்படுகிறது.
ஆக ஆழமான திருப்தி காலத்துடன் சம்மந்தப்பட்டது. காலம் என்பது நினைவுகளை தீர்மானிக்கிறது. காலம் நம் கட்டுப்பாட்டில் இன்றி விரையும் போது வெறுமையான நினைவுகளே எஞ்சுகின்றன. வெறுமையான நினைவுகள் பலூனுக்குள் காற்று போல. நாம் ஒருநாள் முடியும் போது அனுபவிக்கும் வெறுமை நினைவுகள் இல்லாத ஒரு வறுமை தான்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நல்ல நினைவுகளை சம்பாதிப்பது மட்டும் தான். இந்த நினைவுகள் தாம் நம்முடைய சுயத்தை மாட்டி தொங்க விடுவதற்கான ஆணி. நம் மனதின் அடித்தளம் இது.
ஆக இறுதியில் இப்படி சுருக்கமாய் வகுத்துக் கொள்கிறேன்:
மகிழ்ச்சி = கட்டுப்பாட்டில் உள்ள காலம் = நினைவுகள்

வெறுமை = கட்டுப்பாட்டில் இல்லாத காலம் = நினைவின்மை 

Comments

veera said…
வெறுமைக்கு அருமையான விளக்கம்

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...