முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெறுமை என்றால் என்ன?


வெறுமைக்கு நிறைய விளக்கங்கள் உள்ளன. அதாவது ஆன்மீக ரீதியாய், தத்துவார்த்தமாய், உளவியல் ரீதியாய். ஆனால் நான் கேட்பது அன்றாட வாழ்க்கையில் நாம் உணரும் வெறுமை. அதாவது “இன்று ஒன்றுமே நினைத்துப் பார்க்கும்படியாய் இல்லை, நான் இன்று ஒன்றுமே உருப்படியாய் செய்யவில்லை, இன்றைய நான் ஒன்றுமில்லாமல் முடிந்து போனதே” எனும் உணர்வு.

இந்த உணர்வு முரணானது. ஏனென்றால் நாம் நாள் முழுக்க எதையோ செய்தபடி தான் இருக்கிறோம். அன்றாட கடமைகள், வேலைக்கு பயணிப்பது, வேலையை செய்வது, வெளியிடத்தில் வெளிநபர்கள், கூட பணி செய்பவர்கள், நண்பர்களுடன் பழகுவது, அவர்களை கையாள்வது என ஒரு நிமிடம் கூட அசராமல் பரபரப்பாய் தான் இருக்கிறோம். ஆனால் ஒரு வேலை நாள் முடிந்து வீடு திரும்பும் போது மேற்சொன்ன உணர்வுகள் வருகின்றன. நினைத்துப் பார்க்கும்படியாய் இன்று ஒன்றுமே இல்லையே என நினைக்கிறோம்.
வேலைக்கு போகாமல் வீட்டில் ஓய்வாய் இருப்பவர்களுக்கும் இதே வெறுமை தோன்றுகிறது. ஒன்று, நேரம் நகராது. எதையாவது உருட்டி புரட்டி நேரத்தை கடத்தியபடி இன்று ஏன் இப்படி வீணாய் கழிந்தது எனத் தோன்றும். அல்லது, நாம் உண்மையில் என்னதான் இந்த வாழ்க்கையில் பண்ணுகிறோம் என கேள்வி எழும்.
இந்த வெறுமை தான் டி.வி, சினிமா, குடி, சூது போன்ற பொழுதுபோக்குகளை நோக்கி, போலி சாமியார்கள், மிதமிஞ்சிய காமத்தை நோக்கி, குற்றங்களை நோக்கி நம்மை செலுத்துகிறது. இன்றைய நாளை நினைத்துப் பார்க்கும்படியாய் செய்ய அரைமணி நேரம் அமைந்தால் போதும் என நினைக்கிறோம். ஆனால் எல்லாம் முடிந்த பின் நாம் இன்னும் அதிக வெறுமையாய் தான் உணர்கிறோம்.
உண்மையில் பிரச்சனை என்ன? நம் வாழ்க்கையில் ஆழமான திருப்தி இல்லை. சரி ஆழமான திருப்தி என்றால் என்ன?
நான் அதை இப்படி வகுத்துக் கொள்கிறேன்.
ஆழமான திருப்தி = ஆழமான நினைவுகள்.
வெறுமை என்பது நினைவுகள் இல்லாத நிலை. அதாவது உறுதியாய் நாம் பற்றிக் கொள்ளும்படியான நினைவுகள் இல்லாத நிலை. ஒரு ஆழமான உக்கிரமான மகிழ்ச்சியான அனுபவம் (படைப்பூக்கமான செயல்கள், தியானம், மனம் திளைக்கும் அன்பான தருணங்கள், ஒரு பிரம்மாண்டமான செயலில் பங்குபெறும் உணர்வு, ஒரு சின்ன வேலையை சரியாய் விருப்பம் போல செய்து முடிக்கும் நிறைவான நிமிடம்) நேரும் போது காலம் அப்படியே உறைந்து நிற்கும். ஆனால் கனமற்ற அனுபவங்கள் (யாருக்காகவோ அர்த்தமின்றி காத்திருப்பது, திறமைக்கு தொடர்பற்ற வேலையை செய்வது, பிடிக்காத உரையாடலில் பங்கு கொள்வது…) நேரும் போது காலம் விரைந்து கொண்டிருப்பதை மனம் உணர்ந்தபடியே இருக்கும். காலத்தை தடுத்து நிறுத்த ஏங்குவோம். ஆனால் முடியாது. இப்படித் தான் ஒருநாள் வீணாய் போனதாய் உணர்வு ஏற்படுகிறது.
ஆக ஆழமான திருப்தி காலத்துடன் சம்மந்தப்பட்டது. காலம் என்பது நினைவுகளை தீர்மானிக்கிறது. காலம் நம் கட்டுப்பாட்டில் இன்றி விரையும் போது வெறுமையான நினைவுகளே எஞ்சுகின்றன. வெறுமையான நினைவுகள் பலூனுக்குள் காற்று போல. நாம் ஒருநாள் முடியும் போது அனுபவிக்கும் வெறுமை நினைவுகள் இல்லாத ஒரு வறுமை தான்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது நல்ல நினைவுகளை சம்பாதிப்பது மட்டும் தான். இந்த நினைவுகள் தாம் நம்முடைய சுயத்தை மாட்டி தொங்க விடுவதற்கான ஆணி. நம் மனதின் அடித்தளம் இது.
ஆக இறுதியில் இப்படி சுருக்கமாய் வகுத்துக் கொள்கிறேன்:
மகிழ்ச்சி = கட்டுப்பாட்டில் உள்ள காலம் = நினைவுகள்

வெறுமை = கட்டுப்பாட்டில் இல்லாத காலம் = நினைவின்மை 

கருத்துகள்

veera இவ்வாறு கூறியுள்ளார்…
வெறுமைக்கு அருமையான விளக்கம்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...