முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாளிதழ்களின் எதார்த்தம்

Image result for reporter cartoon

நாளிதழ்களில் எவ்வளவோ செய்திக்கட்டுரைகள், துணுக்குகள், புகைப்படங்கள், வாழ்க்கைத்தகவல்கள், ஆளுமைகள் தம் வாழ்வை பற்றி பேசும் பேட்டிகள். இவ்வளவையும் சுவாரஸ்யமாய் படித்து கடந்த பின் ஒரு ஜனநெரிசலான தெரு வழி நடந்து வீட்டுக்கு வந்தது போல் இருக்கிறது. ஒன்று கூட நினைவில் தங்குவதில்லை. ஆனால் நாம் உறங்கும் போதும் விழிக்கும் போதும் நாளிதழ்கள் எந்திரம் போல் தகவல்களை உற்பத்தி பண்ணிக் கொண்டே இருக்கின்றன. ஏன் பேட்டிகள், வாழ்க்கை குறிப்புகள், சமூக சித்திரங்கள் கூட நமக்கு உண்மையாய் தெரிவதில்லை? ஏன் மூவாயிரம் பேர் படிக்கும் சிறுபத்திரிகை கதை ஒன்று மனதுக்கு அவ்வளவு நெருக்கமாய் தோன்றுகிறது?
 காரணம் ஒன்று தான். தினப் பத்திரிகைகள் செய்தியை மிகவும் கராறாய் தர முயல்கின்றன. அப்போது அதில் உள்ள உண்மை செத்து விடுகிறது. உதாரணமாய், ஜாம்பஜார் சாலையில் உள்ள 42 குப்பைத் தொட்டிகளில் 31 எப்போதும் நிரம்பி வழிகிறது எனும் செய்தியில் தகவல் தான் இருக்கிறது. உண்மை இல்லை.


மாறாக சற்றே பெரிய செய்திக் குறிப்புகளில் இரண்டாவது மூன்றாவது பத்திகளில் இருந்து புனைவுத்தன்மை தலை தூக்குகிறது. ஒரு கொலை நடந்த இடம், பின்னணி, ஒரு அரசியல் பேரணியின் சூழல், அங்கு உருவான தோரணைகள் பற்றின சித்திரங்கள் வரும் போது ஒரு செய்திக்குறிப்பில் ஒரு flow அந்த ரிப்போர்ட்டருக்கே தெரியாமல் உருவாகிறது. அதில் நம் மனம் திளைக்கிறது. தந்தியின் செய்திக்குறிப்பில் இந்த புனைவுத்தன்மை சற்று முரட்டுத்தனமாய் இருந்தாலும் எனக்கு அது பிடிக்கும். நான் தினத்தந்தியில் சற்று காலம் பணி செய்தேன். ஒருமுறை ஒரு இளம் பெண் தன் தங்கையையும் அம்மாவையும் கொன்று விட்டாள். அவள் காதலனுடன் சேர பெற்றோர் தடுத்ததே காரணம். அவளது அப்பா ஒரு போலீஸ்காரர். அம்மாவை கொல்வதே அவளது முதல் நோக்கம். கொலை நடுவே தங்கையும் வர அவளை மொட்டைமாடி தண்ணீர் தொட்டியில் முக்கி கொல்கிறாள். பிறகு அவள் ரயில்வே தடத்தில் தனியே திரிந்து கொண்டிருக்கிறாள். கைதாகிறாள். இந்த செய்திகளை தொகுத்து மொழியாக்கித் தர என்னிடம் எடிட்டர் கேட்டார். அப்போது ஒரு கதையில் நுழையும் கிளர்ச்சி எனக்கு கிடைத்தது. நீண்ட காலம் ரயில்வே தடத்தில் தனியே திரியும் இளம்பெண்ணின் சித்திரம் என் மனதில் இருந்தது. எனக்கு கொல்லப்பட்டவர்களை விட அப்பெண்ணின் மீது தான் பரிதாபம் அதிகம் ஏற்பட்டது.

ஹிந்துவில் இன்னும் தளுக்கான நேர்த்தியான புனைவுத்தன்மை கொண்ட செய்திக் குறிப்புகள் வரும். ஒரு பெண் தன் குழந்தையை கிணற்றில் தூக்கி போட்டு தானும் குதிக்கிறாள். ஆனால் அவள் காப்பாற்றப்பட்டு விடுகிறாள். அவள் மீது கொலைவழக்கு. இந்த ஒற்றைவரியில் பல வருடங்களுக்கு முன்பு துலாபாரம் என ஒரு படம் வந்தது. ஆனால் ஆறேழு வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தியை நான் ஒரு நாளிதழில் படித்தேன். இதில் வரும் சிறுசிறு உணர்ச்சியற்ற தகவல்கள் வழி சட்டென ஒரு முழுமையான சித்திரம் வாசகனுக்கு கிடைக்கிறது. இது வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. (இந்த பாணியை தான் ஹெமிங்வே தன் கதைகளில் பயன்படுத்தினார்.)

சில பேட்டிகளில் துவக்கமாய் பேட்டி காணப்படுகிறவரின் தோற்றம், உடல் மொழி, சுபாவம், அவர்கள் சந்திக்கப் போகும் இடம் பற்றி ஒரு விவரிப்பு இருக்கும். ஆனால் ஒரு செய்திக்குறிப்பில் உள்ள புனைவுத்தன்மையை இதில் காண முடியாது. செய்திக்குறிப்பின் புனைவில் எந்த தோரணையும் பிரக்ஞையும் இராது. அது இன்னும் உண்மையாக இருக்கிறது.

எனக்கு இதனால் தான் நாவல் படிப்பதற்கு இணையான போதை செய்தித்தாள் படிப்பதில் உண்டு. அதுவும் முதல் மற்றும் நடுத்தாள்களுக்கு இடையிலான தாள்களில் தான் அந்த போதை மிகவும் அதிகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...