முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாளிதழ்களின் எதார்த்தம்

Image result for reporter cartoon

நாளிதழ்களில் எவ்வளவோ செய்திக்கட்டுரைகள், துணுக்குகள், புகைப்படங்கள், வாழ்க்கைத்தகவல்கள், ஆளுமைகள் தம் வாழ்வை பற்றி பேசும் பேட்டிகள். இவ்வளவையும் சுவாரஸ்யமாய் படித்து கடந்த பின் ஒரு ஜனநெரிசலான தெரு வழி நடந்து வீட்டுக்கு வந்தது போல் இருக்கிறது. ஒன்று கூட நினைவில் தங்குவதில்லை. ஆனால் நாம் உறங்கும் போதும் விழிக்கும் போதும் நாளிதழ்கள் எந்திரம் போல் தகவல்களை உற்பத்தி பண்ணிக் கொண்டே இருக்கின்றன. ஏன் பேட்டிகள், வாழ்க்கை குறிப்புகள், சமூக சித்திரங்கள் கூட நமக்கு உண்மையாய் தெரிவதில்லை? ஏன் மூவாயிரம் பேர் படிக்கும் சிறுபத்திரிகை கதை ஒன்று மனதுக்கு அவ்வளவு நெருக்கமாய் தோன்றுகிறது?
 காரணம் ஒன்று தான். தினப் பத்திரிகைகள் செய்தியை மிகவும் கராறாய் தர முயல்கின்றன. அப்போது அதில் உள்ள உண்மை செத்து விடுகிறது. உதாரணமாய், ஜாம்பஜார் சாலையில் உள்ள 42 குப்பைத் தொட்டிகளில் 31 எப்போதும் நிரம்பி வழிகிறது எனும் செய்தியில் தகவல் தான் இருக்கிறது. உண்மை இல்லை.


மாறாக சற்றே பெரிய செய்திக் குறிப்புகளில் இரண்டாவது மூன்றாவது பத்திகளில் இருந்து புனைவுத்தன்மை தலை தூக்குகிறது. ஒரு கொலை நடந்த இடம், பின்னணி, ஒரு அரசியல் பேரணியின் சூழல், அங்கு உருவான தோரணைகள் பற்றின சித்திரங்கள் வரும் போது ஒரு செய்திக்குறிப்பில் ஒரு flow அந்த ரிப்போர்ட்டருக்கே தெரியாமல் உருவாகிறது. அதில் நம் மனம் திளைக்கிறது. தந்தியின் செய்திக்குறிப்பில் இந்த புனைவுத்தன்மை சற்று முரட்டுத்தனமாய் இருந்தாலும் எனக்கு அது பிடிக்கும். நான் தினத்தந்தியில் சற்று காலம் பணி செய்தேன். ஒருமுறை ஒரு இளம் பெண் தன் தங்கையையும் அம்மாவையும் கொன்று விட்டாள். அவள் காதலனுடன் சேர பெற்றோர் தடுத்ததே காரணம். அவளது அப்பா ஒரு போலீஸ்காரர். அம்மாவை கொல்வதே அவளது முதல் நோக்கம். கொலை நடுவே தங்கையும் வர அவளை மொட்டைமாடி தண்ணீர் தொட்டியில் முக்கி கொல்கிறாள். பிறகு அவள் ரயில்வே தடத்தில் தனியே திரிந்து கொண்டிருக்கிறாள். கைதாகிறாள். இந்த செய்திகளை தொகுத்து மொழியாக்கித் தர என்னிடம் எடிட்டர் கேட்டார். அப்போது ஒரு கதையில் நுழையும் கிளர்ச்சி எனக்கு கிடைத்தது. நீண்ட காலம் ரயில்வே தடத்தில் தனியே திரியும் இளம்பெண்ணின் சித்திரம் என் மனதில் இருந்தது. எனக்கு கொல்லப்பட்டவர்களை விட அப்பெண்ணின் மீது தான் பரிதாபம் அதிகம் ஏற்பட்டது.

ஹிந்துவில் இன்னும் தளுக்கான நேர்த்தியான புனைவுத்தன்மை கொண்ட செய்திக் குறிப்புகள் வரும். ஒரு பெண் தன் குழந்தையை கிணற்றில் தூக்கி போட்டு தானும் குதிக்கிறாள். ஆனால் அவள் காப்பாற்றப்பட்டு விடுகிறாள். அவள் மீது கொலைவழக்கு. இந்த ஒற்றைவரியில் பல வருடங்களுக்கு முன்பு துலாபாரம் என ஒரு படம் வந்தது. ஆனால் ஆறேழு வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தியை நான் ஒரு நாளிதழில் படித்தேன். இதில் வரும் சிறுசிறு உணர்ச்சியற்ற தகவல்கள் வழி சட்டென ஒரு முழுமையான சித்திரம் வாசகனுக்கு கிடைக்கிறது. இது வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. (இந்த பாணியை தான் ஹெமிங்வே தன் கதைகளில் பயன்படுத்தினார்.)

சில பேட்டிகளில் துவக்கமாய் பேட்டி காணப்படுகிறவரின் தோற்றம், உடல் மொழி, சுபாவம், அவர்கள் சந்திக்கப் போகும் இடம் பற்றி ஒரு விவரிப்பு இருக்கும். ஆனால் ஒரு செய்திக்குறிப்பில் உள்ள புனைவுத்தன்மையை இதில் காண முடியாது. செய்திக்குறிப்பின் புனைவில் எந்த தோரணையும் பிரக்ஞையும் இராது. அது இன்னும் உண்மையாக இருக்கிறது.

எனக்கு இதனால் தான் நாவல் படிப்பதற்கு இணையான போதை செய்தித்தாள் படிப்பதில் உண்டு. அதுவும் முதல் மற்றும் நடுத்தாள்களுக்கு இடையிலான தாள்களில் தான் அந்த போதை மிகவும் அதிகம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...