Skip to main content

விவியன் ரிச்சர்ட்ஸும் விராத் கோலியும்

Image result for kohli extra cover drive
கவர் டிரைவின் போது கோலியின் முன்னங்கால் பாதம் நேராக நடுவரை நோக்கி திரும்பி இருக்கிறது
Image result for rahul dravid cover drive
ஆனால் திராவின் முன்னங்கால் பாதம் கவர் பகுதியை நோக்கி இருக்கிறது
கோலி சமகால கிரிக்கெட் நட்சத்திரங்களில் வெகு உச்சத்தில் இருப்பவர். உலகின் சிறந்த மூன்று பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படுவது சாதாரண விசயம் அல்ல. முன்பு சச்சின் அத்தகைய பெருமைக்குரியவராக இருந்தார். ஆனால் அவருடன் ஆடிய சிறந்த பேட்ஸ்மேன்களான லஷ்மண், கங்குலி, திராவிட் ஆகியோரால் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைய முடியவில்லை. சேவாக் கூட தன் பட்டாசு துவக்க ஆட்டத்துக்காக துணிச்சலுக்காக அறியப்பட்டார். ஆனால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என அவரை யாரும் அழைத்ததில்லை.
டெஸ்ட் ஆட்டங்களில் கோலி பெரிதும் மதிக்கப்பட்டாலும் ஒருநாள் போட்டிகளில் தான் அவர் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். எந்த ஆடுதளத்திலும் நெருக்கடியான நிலையிலும் அசராமல் ரிஸ்கே எடுக்காமல் 100 ஸ்டிரைக் ரேட்டில் அடித்தாட அவரால் முடிகிறது. சிக்ஸர்கள் அடிக்காமலே எதிரணியினரை ஆதிக்கம் செலுத்த முடிகிறது. எவ்வளவு டைட்டாக களத்தடுப்பை அமைத்தாலும் கோலியால் ஒற்றை, இரட்டை ஓட்டங்களை சுலபத்தில் எடுக்க முடிவது அவரது மேதைமையை காட்டுகிறது. இந்த குணங்களால் தான் அவரால் இலக்கை துரத்தும் போது தொடர்ந்து சதங்களாய் குவிக்கவும் அணியை வெல்ல வைக்கவும் முடிகிறது.

சச்சினுக்கு பிறகு எதிரணியினர் ஒரு பேட்ஸ்மேனை வீழ்த்தினால் இந்தியாவை சுருட்டி விடலாம் என நம்புகிறார்கள் என்றால் அது கோலியைத் தான். 175 ஆட்டங்களில் 26 சதங்கள், 37 அரை சதங்கள். அதாவது தான் ஆடிய ஆட்டங்களில் மூன்றில் ஒன்றில் கோலி சதமோ அரைசதமோ அடித்து விடுகிறார். கோலிக்கு 27 வயதாகிறது. இன்னும் எட்டு வருடங்கள் ஆடுவார் என்றால் அவர் நிச்சயம் 50-60 சதங்கள் அடித்து விடுவார். அதாவது சச்சினின் சாதனையான 49 சதங்களை நிச்சயம் முறியடிக்கும் முதல் பேட்ஸ்மேனாக இருப்பார். கோலியின் உடல் தகுதி, ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு ஆகியவற்றை கணக்கில் கொண்டால் அவரால் 40 வயது வரை கூட ஆட முடியும் என ஊகிக்கலாம். அப்படி என்றால் அவர் பொறிக்கப் போகிற சாதனைகளை எண்ணினால் தலை கிறுகிறுக்கிறது.
ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் ஒரு சிக்கல் உள்ளது. கோலியிடம் முக்கியமான ஒரு பலவீனம் உள்ளது. அவர் extra cover drive, square cut, back foot offside punch ஆகிய ஷாட்களை ஆடுவதில்லை. அவற்றை ஆடும் போது அவரது இடது கால் பந்தின் திசை நோக்கி சரியாக நகர்வதில்லை. விளைவாக offsideஇல் பந்து சற்றே வைடாகவோ ஷார்ட்டாகவோ வீசப்படும் போதும் அவரது இடுப்புக்கு கீழ் உடல் வேறுபக்கம் திரும்ப கைகள் மட்டும் எம்பி offsideஇல் பந்தை அடிக்கிறது. அது மட்டுமல்ல பந்தை அடிக்கும் போது அவரது இடது கால் பாதம் சற்றே நேராக (off side நோக்கி அல்லாமல்) திரும்புகிறது. இதனால் தான் பந்து சற்றே வைடாக வீசப்படும் போது அவர் ஸ்லிப்பிலோ கீப்பரிடமோ எட்ஜ் கொடுத்து அவுட் ஆகிறார்.
இந்த பலவீனம் கோலியிடம் ஆரம்பத்திலே இருந்தது தான். ஆனால் கடந்த இரு வருடங்களாகத் தான் எதிரணி பவுலர்கள் இதை விழித்துக் கொண்டு அவரது இந்த பிசிறை குறி வைக்கிறார்கள். அவர் ஆட வந்ததுமே மேற்சொன்ன பாணியில் அவரை வீழ்த்த முயல்கிறார்கள்.
 கோலி இரு விதங்களாய் பவுலர்களின் இந்த வியூகத்தை எதிர்கொள்கிறார். ஒன்று மிகுந்த கட்டுப்பாட்டுடன் இந்த பந்துகளை அடிக்காமல் தவிர்க்கிறார். நேராக வரும் பந்துகளை மட்டுமே ஒற்றை ஓட்டங்களுக்கு தட்டி விட்டு, அதிக நேரம் பவுலிங்கை சந்திக்காமல் தப்பிக்கிறார். இருபது, முப்பது பந்துகளை சந்தித்து தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகமானதும் அடித்தாட ஆரம்பிக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் வைடாக வீச முடியாது, ஒரு சில பவுலர்களை கொண்டு தொடர்ந்து பேட்ஸ்மேனை தாக்க முடியாது என்பதாலும் கோலி அதிக சிக்கல்கள் இன்றி சமாளிக்கிறார்.
 இன்னொரு மார்க்கம் அடித்தாடுவது. கோலி சிலநேரம் தன்னை நோக்கி வைடாக வீசப்படும் பந்துகளை ஆவேசமாய் அடிக்க துவங்குவார். இந்த ஷாட்கள் ஒழுங்காய் அமையாவிட்டாலும் சில பவுண்டரிகள் வீசப்பட்டதும் எதிரணியினர் வியூகத்தை மாற்றி விடுவார்கள். அல்லது இவ்வாறு முயன்று கோலி அவுட்டாகி விடுவார். ஆனால் சமீபமாய் அவர் அதிகமாய் இந்த பாணியில் தான் அவுட் ஆகிறார். தனக்கு எதிராய் இந்த வியூகம் அமைக்கப்படுவதை ஒரு சவாலாக உணரும் அவர் இதனால் எரிச்சலாகிறார். எரிச்சல் கோபமாகிறது. கோபத்தில் தன் நிதானத்தை இழந்து அவுட் ஆகிறார்.
மூன்று விசயங்களை இங்கு முக்கியமாய் குறிப்பிட வேண்டும். 1) உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களாய் அறியப்பட்ட யாருக்கும் இது போன்ற வெளிப்படையான ஒரு தொழில்நுட்ப பலவீனம் முன்பு இருந்ததில்லை. 2) இந்த பலவீனம் இருந்தும் கோலி தொடர்ந்து சதங்கள் விளாசுவது அவரது மனக்கட்டுப்பாடு, அபரித தன்னம்பிக்கைக்கு சான்று. 3) எதிர்காலத்தில் கோலி சச்சினின் சாதனையை முறியடித்து அறுபதுக்கும் மேற்பட்ட சதங்களை அடிப்பது இந்த தொழில்நுட்ப கோளாறை அவர் எவ்வளவு விரைவில் சரிசெய்ய போகிறார் என்பதைப் பொறுத்தது.
கால் பக்க ஆட்டம்
கோலியின் முக்கியமான பலம் அவரது கால் பக்க ஷாட்களை அவர் எவ்வளவு துல்லியமாய் களத்தடுப்பாளர்களை கடந்து place செய்கிறார், எவ்வளவு சரளமாய் டைமிங் செய்கிறார் என்பது. பந்து நேராய் வந்து விழும் முன்னரே அவரது கால்கள் ஷாட்டுக்கு தயாராகி விடும். அதே போல் அவரது மணிக்கட்டும் வலுவானது. சமீபத்தை நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் நேராக வந்த ஒரு பந்தை மணிக்கட்டை சுழற்றி midwicketக்கும் long onக்கும் நடுவில் அநாயசமாய் பவுண்டரி அடித்த ஸ்டைல் விவியன் ரிச்சர்ட்ஸை நினைவுபடுத்தியது.
ஆனால் இந்த கால் பக்க ஆட்ட சிறப்பு தான் அவரது பிரச்சனைக்கான காரணமும். Off sideஇல் பந்து விழும் போதும் அவரது கால்கள் அதை கால் பக்கம் அடிக்க தயாராகின்றன.
தீர்வு என்ன?
Extra cover drive, square cut ஆகிய ஷாட்களை கோலி தன் உறையிலிருந்து வெளியே எடுப்பது தான் சிறந்த தீர்வு. எப்படி முடியும்? கோலி தனக்கு எதிரான இந்த வியூகத்தை நேர்மறையாக, ஆக்ரோசமாய் எதிர்கொள்ள வேண்டும். கோலியின் ஆட்டம் மேற்கிந்திய பேட்டிங் மேதை விவியன் ரிச்சர்ட்ஸின் மேதைமையுடன் ஒப்பிடப்படுகிறது. இம்ரான் கான் சொன்னார் “என் காலத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் இருந்தார். இப்போது அவர் இடத்தில் கோலி இருக்கிறார்”. ரிச்சர்ட்ஸ் கூட கோலி தனது ஆளுமையை, சுபாவத்தை தனக்கே நினைவுபடுத்துவதாய் சொல்கிறார். இதே ரிச்சர்ட்ஸுக்கும் இன்று கோலி சந்திக்கும் தொழில் நுட்ப சிக்கல் இருந்தது.
 ரிச்சர்ட்ஸ் கால் பக்கம் அபாரமாய் ஆடக் கூடியவர். இதை உணர்ந்த இங்கிலாந்தின் ஸிவிங் பவுலர்கள் பந்தை வைடாக off sideஇல் மட்டுமே தொடர்ந்து வீசினர். ஆரம்பத்தில் ரிச்சர்ட்ஸ் இந்த பொறியில் வீழ்ந்தார். ஆனால் விழித்துக் கொண்ட அவர் கால் பக்கம் ஆடுவதை தவிர்த்து off sideஇல் மட்டுமே பந்தை அடித்து நொறுக்க துவங்கினார். எது தனது பலவீனமோ அதையே பலமாக மாற்றினார்.

 கோலியின் அடுத்த எட்டு வருட கிரிக்கெட் வாழ்க்கையின் எழுச்சி அவர் off sideஇல் ரிச்சர்ட்ஸின் எதிர்தாக்குதல் அஸ்திரத்தை கையில் எடுத்து வெற்றி காண்பாரா என்பதை பொறுத்தது! 
நன்றி: கல்கி

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...