முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெற்றிடத்தை நிரப்பும் தமிழ் எழுத்தாளன்

ஏன் தமிழ் பத்திரிகைகளில் சிறுகதைகள் பிரசுரிக்க இவ்வளவு அலுத்துக் கொள்கிறார்கள் என பிர்தவுஸ் ராஜகுமாரன் ஒரு முகநூல் உரையாடலில் கேட்டிருந்தார். உண்மைதான். கடந்த பத்தாண்டுகளில் இங்கு சிறுகதைகள் குறைவாகவே எழுதப்படுகின்றன. பத்திரிகைகள் அதிகமும் கட்டுரைகளை பிரசுரிக்கவே விரும்புகின்றன. இதனாலேயே சிறுகதையாளர்கள் நாவலுக்கும், கவிஞர்கள் கட்டுரைக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். நம் வரலாற்றிலேயே மிக அதிகமாய் கட்டுரைகள் இப்போது தான் பிரசுரமாகின்றன. இது கட்டுரைகளின் வசந்த காலம்.

 இதை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் துவக்க கட்டங்களில் இங்கு அச்சாக்கம் அறிமுகமான பெரிய எழுத்து பத்திரிகைகளின் உற்சாகமான பருவத்தோடு ஒப்பிட முடியும். அன்று புதிதாய் எழுதப் படிக்க தெரிந்த ஒரு மக்கள் திரள் உருவானது. அவர்களுக்காக உடனடியாய் தமிழ் பத்திரிகைகள், நாட்டுப்புற பாடல்கள், வம்பு இலக்கியம், பரபரப்பு செய்திகள் தாங்கிய பாடல்கள் சிறு நூல்களாய் வெளியாகி பரவலாய் விற்றன. பின்னர் இந்த பிரசுரங்கள் நிலைப்பெற்று பெருவணிக நிறுவனங்களாகின. இன்று அந்த இடத்தை டி.வி, இணையம், சமூக வலைதளங்கள் எடுத்திருக்கின்றன.
 எப்போதெல்லாம் ஒரு சமூக தேவை உருவாகிறதோ அப்போது அந்த இடத்தை நிரப்ப ஒரு தரப்பினர் தற்காலிகமாய் தோன்றுவார்கள். தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெச்சூர் பெரிய எழுத்து பத்திரிகை பிரசுரகர்த்தாக்களுக்கு ஏற்பட்ட சமூக தேவை போன்ற ஒன்று ரெண்டாயிரத்துக்கு பிறகு இலக்கிய எழுத்தாளனுக்கு ஏற்பட்டது. இணையம் மூலம் தகவல்கள் வந்து கொட்ட துவங்கின. மீடிய பலமடங்கு வளர்ந்து விரிவானது. ஆங்கிலத்தில் பரவலாய் கிடைக்கும் தகவல்களை தொகுத்து செய்திக் கட்டுரைகளாய் எழுத இங்கு ஆட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழில் பத்திரிகையாளர்கள் / ரிப்போர்ட்டர்கள் போதுமான அளவு தகவல் கட்டுரைகள் எழுதுவதில்லை. ஆக, அரசியல், சமூகம், சினிமா, கலை, விளையாட்டு என தகவல் கட்டுரைகள் எழுதும் பணியை இலக்கிய எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் உலக சினிமா பற்றி ஏகப்பட்ட கட்டுரைகளை நம் எழுத்தாளர்கள் வெளியிட்டார்கள். ஏனென்றால் மக்களுக்கு அன்று உலக சினிமா பற்றி அறியும் ஆர்வம் இருந்தது. பின்னர் மீடியா, சி.டி, கணினி மூலம் உலக சினிமா பரவலாகிய பின் அத்தகைய அறிமுக எழுத்துக்கு தேவையில்லாமல் ஆக, எழுத்தாளர்களும் உலக சினிமா அறிமுகங்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்.
ஆங்கில மீடியாவில் இத்தகைய கட்டுரைகளை எழுத inhouse எழுத்தாளர்கள் உண்டு. நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையை உதாரணம் சொல்லலாம். பத்திரிகையாள எழுத்தாளர்கள் அங்கு தனி பிரிவு. அவர்கள் ஆளுக்கு ஐந்து நூல்களாவது பிரசுரித்து இருப்பார்கள். ஆங்கில ஹிந்துவின் பரத்வாஜ் ரங்கனை அந்த வகையில் சேர்க்கலாம்.. ஆனால் தமிழில் அப்படி இல்லை. இங்கு இலக்கிய எழுத்தாளன் அந்த பணியை எடுத்துக் கொள்கிறான்.
ஆனால் இந்த நிலை நீண்ட காலம் தொடராது. எதிர்காலத்தில் தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக்கும் ரோபோட்டுகள் வந்து விடும். இப்போதே artificial intelligence மூலம் ஆங்கிலத்தில் கட்டுரைகள் உற்பத்தி ஆவதாய் சொல்கிறார்கள். தமிழிலும் எதிர்காலத்தில் தகவல் கட்டுரைகள் மலிவாகும். மேலும் மக்களுக்கு விரைவில் கட்டுரைகள் அலுத்து விடும். அப்போது கதைகளுக்கான தேவை ஏற்படும். கதைகள் அதிகளவில் பிரசுரமாகும். அப்போது எழுத்தாளன் படைப்பூக்கமுள்ள எழுத்துக்கு மீள்வான்.

தமிழில் வெகுஜன பரப்பில் எப்போதும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை பத்திரிகையாளர்கள் நிரப்புவதில்லை. எழுத்தாளன் லுங்கியை மடித்துக் கட்டி அப்பணியில் இறங்கி விடுகிறான். வெற்றிடம் முழுக்க நிரம்பியதும் அவன் தன் சாய்வுநாற்காலிக்கு திரும்புகிறான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...