Skip to main content

வெற்றிடத்தை நிரப்பும் தமிழ் எழுத்தாளன்

ஏன் தமிழ் பத்திரிகைகளில் சிறுகதைகள் பிரசுரிக்க இவ்வளவு அலுத்துக் கொள்கிறார்கள் என பிர்தவுஸ் ராஜகுமாரன் ஒரு முகநூல் உரையாடலில் கேட்டிருந்தார். உண்மைதான். கடந்த பத்தாண்டுகளில் இங்கு சிறுகதைகள் குறைவாகவே எழுதப்படுகின்றன. பத்திரிகைகள் அதிகமும் கட்டுரைகளை பிரசுரிக்கவே விரும்புகின்றன. இதனாலேயே சிறுகதையாளர்கள் நாவலுக்கும், கவிஞர்கள் கட்டுரைக்கும் இடம் பெயர்ந்து விட்டார்கள். நம் வரலாற்றிலேயே மிக அதிகமாய் கட்டுரைகள் இப்போது தான் பிரசுரமாகின்றன. இது கட்டுரைகளின் வசந்த காலம்.

 இதை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் துவக்க கட்டங்களில் இங்கு அச்சாக்கம் அறிமுகமான பெரிய எழுத்து பத்திரிகைகளின் உற்சாகமான பருவத்தோடு ஒப்பிட முடியும். அன்று புதிதாய் எழுதப் படிக்க தெரிந்த ஒரு மக்கள் திரள் உருவானது. அவர்களுக்காக உடனடியாய் தமிழ் பத்திரிகைகள், நாட்டுப்புற பாடல்கள், வம்பு இலக்கியம், பரபரப்பு செய்திகள் தாங்கிய பாடல்கள் சிறு நூல்களாய் வெளியாகி பரவலாய் விற்றன. பின்னர் இந்த பிரசுரங்கள் நிலைப்பெற்று பெருவணிக நிறுவனங்களாகின. இன்று அந்த இடத்தை டி.வி, இணையம், சமூக வலைதளங்கள் எடுத்திருக்கின்றன.
 எப்போதெல்லாம் ஒரு சமூக தேவை உருவாகிறதோ அப்போது அந்த இடத்தை நிரப்ப ஒரு தரப்பினர் தற்காலிகமாய் தோன்றுவார்கள். தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெச்சூர் பெரிய எழுத்து பத்திரிகை பிரசுரகர்த்தாக்களுக்கு ஏற்பட்ட சமூக தேவை போன்ற ஒன்று ரெண்டாயிரத்துக்கு பிறகு இலக்கிய எழுத்தாளனுக்கு ஏற்பட்டது. இணையம் மூலம் தகவல்கள் வந்து கொட்ட துவங்கின. மீடிய பலமடங்கு வளர்ந்து விரிவானது. ஆங்கிலத்தில் பரவலாய் கிடைக்கும் தகவல்களை தொகுத்து செய்திக் கட்டுரைகளாய் எழுத இங்கு ஆட்களின் பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழில் பத்திரிகையாளர்கள் / ரிப்போர்ட்டர்கள் போதுமான அளவு தகவல் கட்டுரைகள் எழுதுவதில்லை. ஆக, அரசியல், சமூகம், சினிமா, கலை, விளையாட்டு என தகவல் கட்டுரைகள் எழுதும் பணியை இலக்கிய எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் உலக சினிமா பற்றி ஏகப்பட்ட கட்டுரைகளை நம் எழுத்தாளர்கள் வெளியிட்டார்கள். ஏனென்றால் மக்களுக்கு அன்று உலக சினிமா பற்றி அறியும் ஆர்வம் இருந்தது. பின்னர் மீடியா, சி.டி, கணினி மூலம் உலக சினிமா பரவலாகிய பின் அத்தகைய அறிமுக எழுத்துக்கு தேவையில்லாமல் ஆக, எழுத்தாளர்களும் உலக சினிமா அறிமுகங்களை வெகுவாக குறைத்து விட்டார்கள்.
ஆங்கில மீடியாவில் இத்தகைய கட்டுரைகளை எழுத inhouse எழுத்தாளர்கள் உண்டு. நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையை உதாரணம் சொல்லலாம். பத்திரிகையாள எழுத்தாளர்கள் அங்கு தனி பிரிவு. அவர்கள் ஆளுக்கு ஐந்து நூல்களாவது பிரசுரித்து இருப்பார்கள். ஆங்கில ஹிந்துவின் பரத்வாஜ் ரங்கனை அந்த வகையில் சேர்க்கலாம்.. ஆனால் தமிழில் அப்படி இல்லை. இங்கு இலக்கிய எழுத்தாளன் அந்த பணியை எடுத்துக் கொள்கிறான்.
ஆனால் இந்த நிலை நீண்ட காலம் தொடராது. எதிர்காலத்தில் தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக்கும் ரோபோட்டுகள் வந்து விடும். இப்போதே artificial intelligence மூலம் ஆங்கிலத்தில் கட்டுரைகள் உற்பத்தி ஆவதாய் சொல்கிறார்கள். தமிழிலும் எதிர்காலத்தில் தகவல் கட்டுரைகள் மலிவாகும். மேலும் மக்களுக்கு விரைவில் கட்டுரைகள் அலுத்து விடும். அப்போது கதைகளுக்கான தேவை ஏற்படும். கதைகள் அதிகளவில் பிரசுரமாகும். அப்போது எழுத்தாளன் படைப்பூக்கமுள்ள எழுத்துக்கு மீள்வான்.

தமிழில் வெகுஜன பரப்பில் எப்போதும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை பத்திரிகையாளர்கள் நிரப்புவதில்லை. எழுத்தாளன் லுங்கியை மடித்துக் கட்டி அப்பணியில் இறங்கி விடுகிறான். வெற்றிடம் முழுக்க நிரம்பியதும் அவன் தன் சாய்வுநாற்காலிக்கு திரும்புகிறான்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...