Skip to main content

உப்புமா ஆடுதளத்தில் இந்தியா தோல்வியின் விளிம்பில்


தற்போது ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா ஒரு மீளமுடியாத சிக்கலில் இருக்கிறது. இங்கிலாந்து மோசமாய் கட்டுப்பாடே இன்றி பந்து வீசினால் மட்டுமே இந்தியா தப்பிக்கும். மற்றபடி தோல்வி கிட்டத்தட்ட உறுதி.

ஆடுதளம் தான் முக்கிய காரணம். ராஜ்கோட்டில் நடக்கும் முதல் டெஸ்ட் இது. இந்த நவம்பர் டிசம்பர் காலத்தில் இந்தியா முழுக்கவே மந்தமான பருவச்சூழல் இருக்கும். ஆடுதளத்துக்கு போதுமான வெயில் கிடைக்காது. அதனால் உள்ளுக்குள் சற்று ஈரமாக இருக்கும் ஆடுதளத்தில் ரொம்ப மந்தமாய் மெதுவாய் தான் வரும். இதை சரி செய்ய ஆடுதள தயாரிப்பாளர்கள் தளத்தின் மீதுள்ள புற்களை முழுக்க கத்தரிக்காமல் விடுவார்கள். ஆனால் சரியாக காயாததால் ஆடுதளம் முழுக்க வெடிப்புகளுடன் இருக்கும். இது பந்தை ஏற்ற இறக்கத்துடன் எகிற வைக்கும். இந்த வெடிப்புகள் ரொம்ப விரியக் கூடாது எனும் பதற்றம் தான் ஆடுதள தயாரிப்பாளர்களுக்கு இருக்குமே தவிர ஒரு சிறந்த டெஸ்ட் ஆடுதளமாய் அதை மாற்ற தோன்றாது. தற்காலிக தேவைக்காக அவசர கதியில் பண்ணப்பட்ட இட்லி உப்புமா போன்றது இந்த ஆடுதளம்.
இதில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகாது. ஸ்பின் ஆகாது. ஆனால் புற்கள் இருப்பதால் கொஞ்சம் ஸ்விங் ஆகும். இந்த புற்களையும் ரோலர் மூலம் மண்ணுக்குள் அழுத்தி வைத்திருப்பதால் ஸ்விங் குறைவாக இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். ஆனால் அதுவும் குறைவாகவே இருக்கும். வழக்கமாய் இந்திய ஆடுதளங்களில் முதல் நாள் ஸ்பின்னர்கள் ஓரளவுக்காவது பந்து வீச முடியும். இந்த ஆடுதளம் மிக மொட்டையாக இருக்கிறது. இதில் பவுலிங் போடவே இந்தியர்கள் விரும்பவில்லை. அவர்களின் ஏமாற்றம் முதல் நாளே தவற விட்ட காட்சுகளால் அதிகமானது. விரக்தியில் கோலி நிதானம் இழந்தார்கள். அவருடன் சேர்ந்து பிற வீரர்களும் தோல்வி பயத்தில் நடுங்கினார்கள். விளைவாக அடுத்த மூன்று நாட்களும் 600 சொச்சம் ரன்களை எப்படி எடுக்க போகிறோம் என யோசித்து தற்போதைய ஆட்டத்தில் கவனம் இழந்தனர். மேலும் கேட்சுகளை தவற விட்டனர். இன்னும் மோசமாய் பவுலிங் செய்தார்கள்.
மலையாக ரன்களை குவித்த நிலையில் இங்கிலாந்தால் இன்னும் கூலாக பொறுமையாக பந்து வீச முடியும். விரிசல்கள் அதிகமானால் பந்துகள் சிலர் தாழ்வாக செல்லும். நம்மை விட நன்றாக பந்தை ரிவர்ஸ் செய்யக் கூடியவரக்ள் இங்கிலாந்து வேகவீச்சாளர்கள். அவர்கள் நேராக பந்தை வீசினாலே (இப்போதைய விரக்தி மனநிலையில்) இந்தியர்கள் எல்.பி.டபிள்யோ மற்றும் பவுல்ட் ஆகி வெளியேறுவார்கள். மேலும் ஆடுதளத்தில் உள்ள புற்கள் தரும் கோஞ்ச நஞ்ச ஸ்விங்கையும் அவர்கள் நன்றாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஒருவேளை வெயிலில் தொடர்ந்து காய்ந்து ஆடுதளம் கொஞ்சம் வேகமெடுத்தால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் உதவும். அதே போல் ஆடுதள விரிசல்களும் மோசமாகாமல் இருந்தால் உதவும். இந்தியா இப்போதைய இங்கிலாந்தின் ஸ்கோரை முறியடித்து லீட் பெற்று மீண்டும் இந்த ஆடுதளத்தில் ஐந்தாவது நாளில் நம் ஸ்பின்னர்கள் பந்து வீசி இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் சுருட்டுவார்களா? சாத்தியம் குறைவு தான்.
இந்த ஆட்டம் நிச்சயம் டிரா ஆகாது. அதே போல் இந்தியா வெல்லவும் வாய்ப்பு குறைவே. இங்கிலாந்து தாமாகவே இந்த ஆட்டத்தை நமக்கு பரிசளித்தால் தான் உண்டு.

இனிமேலும் இது போன்ற அவசர கதி உப்புமா ஆடுதளங்களில் நாம் ஆடாமல் இருக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...