முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உப்புமா ஆடுதளத்தில் இந்தியா தோல்வியின் விளிம்பில்


தற்போது ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா ஒரு மீளமுடியாத சிக்கலில் இருக்கிறது. இங்கிலாந்து மோசமாய் கட்டுப்பாடே இன்றி பந்து வீசினால் மட்டுமே இந்தியா தப்பிக்கும். மற்றபடி தோல்வி கிட்டத்தட்ட உறுதி.

ஆடுதளம் தான் முக்கிய காரணம். ராஜ்கோட்டில் நடக்கும் முதல் டெஸ்ட் இது. இந்த நவம்பர் டிசம்பர் காலத்தில் இந்தியா முழுக்கவே மந்தமான பருவச்சூழல் இருக்கும். ஆடுதளத்துக்கு போதுமான வெயில் கிடைக்காது. அதனால் உள்ளுக்குள் சற்று ஈரமாக இருக்கும் ஆடுதளத்தில் ரொம்ப மந்தமாய் மெதுவாய் தான் வரும். இதை சரி செய்ய ஆடுதள தயாரிப்பாளர்கள் தளத்தின் மீதுள்ள புற்களை முழுக்க கத்தரிக்காமல் விடுவார்கள். ஆனால் சரியாக காயாததால் ஆடுதளம் முழுக்க வெடிப்புகளுடன் இருக்கும். இது பந்தை ஏற்ற இறக்கத்துடன் எகிற வைக்கும். இந்த வெடிப்புகள் ரொம்ப விரியக் கூடாது எனும் பதற்றம் தான் ஆடுதள தயாரிப்பாளர்களுக்கு இருக்குமே தவிர ஒரு சிறந்த டெஸ்ட் ஆடுதளமாய் அதை மாற்ற தோன்றாது. தற்காலிக தேவைக்காக அவசர கதியில் பண்ணப்பட்ட இட்லி உப்புமா போன்றது இந்த ஆடுதளம்.
இதில் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகாது. ஸ்பின் ஆகாது. ஆனால் புற்கள் இருப்பதால் கொஞ்சம் ஸ்விங் ஆகும். இந்த புற்களையும் ரோலர் மூலம் மண்ணுக்குள் அழுத்தி வைத்திருப்பதால் ஸ்விங் குறைவாக இருக்கும். ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். ஆனால் அதுவும் குறைவாகவே இருக்கும். வழக்கமாய் இந்திய ஆடுதளங்களில் முதல் நாள் ஸ்பின்னர்கள் ஓரளவுக்காவது பந்து வீச முடியும். இந்த ஆடுதளம் மிக மொட்டையாக இருக்கிறது. இதில் பவுலிங் போடவே இந்தியர்கள் விரும்பவில்லை. அவர்களின் ஏமாற்றம் முதல் நாளே தவற விட்ட காட்சுகளால் அதிகமானது. விரக்தியில் கோலி நிதானம் இழந்தார்கள். அவருடன் சேர்ந்து பிற வீரர்களும் தோல்வி பயத்தில் நடுங்கினார்கள். விளைவாக அடுத்த மூன்று நாட்களும் 600 சொச்சம் ரன்களை எப்படி எடுக்க போகிறோம் என யோசித்து தற்போதைய ஆட்டத்தில் கவனம் இழந்தனர். மேலும் கேட்சுகளை தவற விட்டனர். இன்னும் மோசமாய் பவுலிங் செய்தார்கள்.
மலையாக ரன்களை குவித்த நிலையில் இங்கிலாந்தால் இன்னும் கூலாக பொறுமையாக பந்து வீச முடியும். விரிசல்கள் அதிகமானால் பந்துகள் சிலர் தாழ்வாக செல்லும். நம்மை விட நன்றாக பந்தை ரிவர்ஸ் செய்யக் கூடியவரக்ள் இங்கிலாந்து வேகவீச்சாளர்கள். அவர்கள் நேராக பந்தை வீசினாலே (இப்போதைய விரக்தி மனநிலையில்) இந்தியர்கள் எல்.பி.டபிள்யோ மற்றும் பவுல்ட் ஆகி வெளியேறுவார்கள். மேலும் ஆடுதளத்தில் உள்ள புற்கள் தரும் கோஞ்ச நஞ்ச ஸ்விங்கையும் அவர்கள் நன்றாக பயன்படுத்துவார்கள்.
ஆனால் ஒருவேளை வெயிலில் தொடர்ந்து காய்ந்து ஆடுதளம் கொஞ்சம் வேகமெடுத்தால் அது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் உதவும். அதே போல் ஆடுதள விரிசல்களும் மோசமாகாமல் இருந்தால் உதவும். இந்தியா இப்போதைய இங்கிலாந்தின் ஸ்கோரை முறியடித்து லீட் பெற்று மீண்டும் இந்த ஆடுதளத்தில் ஐந்தாவது நாளில் நம் ஸ்பின்னர்கள் பந்து வீசி இங்கிலாந்தை இரண்டாவது இன்னிங்ஸில் சுருட்டுவார்களா? சாத்தியம் குறைவு தான்.
இந்த ஆட்டம் நிச்சயம் டிரா ஆகாது. அதே போல் இந்தியா வெல்லவும் வாய்ப்பு குறைவே. இங்கிலாந்து தாமாகவே இந்த ஆட்டத்தை நமக்கு பரிசளித்தால் தான் உண்டு.

இனிமேலும் இது போன்ற அவசர கதி உப்புமா ஆடுதளங்களில் நாம் ஆடாமல் இருக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...