முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டீஷ்வர் புஜாராவும் முயலும்

Image result for alastair cook
கதவை திறக்கலாமா வேண்டாமா?
நடந்து வரும் இங்கிலாந்து-இந்தியா முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பிக்க இங்கிலாந்து அணித்தலைவர் கருணை வைத்தால் உண்டு என என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அலிஸ்டெர் குக்கின் தலைமை அதற்கு செவி சாய்த்துள்ளது. நேற்றும் இன்றும் அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து ஒரு தற்காப்பு மனநிலையுடன், வெல்லும் அக்கறையின்றி, ஆக்ரோஷமின்றி ஆடியது. ஒருநாள் நான் என் மனைவியிடம் முயல் கறி வாங்க வா என்றேன். அவள் கடைக்கு சென்று முயலைப் பார்த்தாள். மனம் கருணையில் ததும்பியது. முயலை செல்லப்பிராணியாக வளர்க்க முடிவு செய்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டாள். நேற்றைய நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தலைவர் குக்கின் தலைமை இப்படித் தான் இருந்தது. 

சட்டீஷ்வர் புஜாரா தான் சந்தித்த எல்லா பந்தையும் முன்னங்காலில் ஆடி வந்தார். இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் சில பவுன்சர்களை வீச பந்து தொடர்ந்து புஜாராவின் தலையில் பட்டது. நல்லவேளை காயமின்றி தப்பித்தார். புஜாராவின் பின்னங்கால் ஸ்டம்புக்கு குறுக்கே செல்ல முன்னங்கால் முழுசாய் முன்னே வந்து பந்தை சந்தித்தது. இதனால் பவுனசர் பந்தை சமாளிக்கும் விதமாய் அவரால் முழுக்க பின்னங்காலுக்கு நகர முடியவில்லை. இது ஒரு சிக்கலான சுய பொறி. இங்கிலாந்து வேகவீச்சாளர்கள் தொடர்ந்து பவுன்சர்கள் வீசி இருந்தால் ஒன்று புஜாரா காயம்பட்டு வெளியேறி இருப்பார் அல்லது அவுட் ஆகி போயிருப்பார். ஆனால் தம் ஆக்ரோஷம் காரணமாய் (பவுன்சர் பட்டு இறந்து போன ஆஸ்திரேலியாவின் ஹியூக்ஸ் போல) புஜாராவுக்கு அசம்பாவிதம் நேரக்கூடாது என்பதிலேயே இங்கிலாந்து அணித்தலைவர் குக் கவனமாய் இருந்தார். அவர் பவுன்சர்களை நிறுத்தினார். புஜாராவை சுலபமாய் சதம் அடிக்க அனுமதித்தார்.
அதே போல நேற்று விஜய் இங்கிலாந்தின் லெக் ஸ்பின்னர் ரஷீதின் கூக்ளியை கணிக்க முடியாமல் திணறினார். வெளியே போகும் பந்தை கூட கூக்ளியாக கருதி கால் பக்கம் ஆடினார். கால் பக்கம் பீல்டர்களை அகற்றி off sideஐ வலுப்படுத்தி இருந்தால் குக் கால் பக்கம் அடிக்க முனைந்து கவர் பகுதிக்கு leading edge கொடுத்து வெளியேறி இருப்பார். ஆனால் ரஷீத் அவ்வப்போது தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் இந்த வியூகம் வகுக்கவும் குக் தயங்கினார். அவர் மிட் ஆன், லாங் லெக் என கால் பக்கம் பீல்டர்களை நிறுத்தினார். இதனால் ரஷீதால் விஜய் சதம் அடிப்பதை தடுக்க முடியவில்லை.
இன்று, நான்காவது நாள், கோலி ஆட வர வேகவீச்சாளர்கள் வழக்கம் போல் பந்தை வைடாக டிரைவ் செய்யும் நீளத்தில் வீசி கோலியை கவர் டிரைவ் அடிக்க தூண்டினர். அதுவே அவர் பலவீனம். முன்னங்கால் சரியாக நகராததால் அவர் அடிக்கடி ஸ்லிப்பில் எட்ஜ் கொடுத்து வெளியேறுவார். ஆனால் கோலியை இதற்கு முழுக்க தூண்ட off sideஇல் காலி இடங்கள் விட வேண்டும். கவர் டிரைவ் அடித்தால் நான்கு ரன்கள் கிடைக்கும் என சேதியை கோலிக்கு விட வேண்டும். ஆனால் குக்கோ வைடாக பந்தை வீச செய்து off sideஇல் அதிக தடுப்பாளர்களை நிறுத்தி தடுப்பாட்ட களம் அமைத்தார். கிட்டத்தட்ட ஒருநாள் களம் போல் இது இருந்தது. குக் விரும்பியது கோலியை வெளியேற்ற அல்ல கட்டுப்படுத்த. நியுசிலாந்து அணி சமீபத்தில் இந்த வியூகத்தை அழகாக வகுத்து கோலியை டிரைவ் செய்ய வைத்து வெளியேற்றியது. ஆனால் இங்கிலாந்து அணித்தலைவரின் மட்டமான களத்தடுப்பு அமைப்பு காரணமாய் கோலி ஒரு கவர் டிரைவ் கூட ஆடவில்லை. தப்பித்து விட்டார். (ஆனால் கோலி தானாகவே hit wicket மூலம் வெளியேறினது வேறு விசயம்.)

இப்படி இங்கிலாந்தின் மட்டமான தலைமை உபயம் இந்தியா இந்த டெஸ்டில் தப்பிக்க வாய்ப்பு அதிகம். அதையும் மீறி நாம் இன்னும் மட்டமாய் ஆடி தோற்றால் தான் உண்டு. இப்போதைக்கு யார் அதிக மட்டமாய் ஆடுவது என்றுதான் போட்டி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...