Skip to main content

சட்டீஷ்வர் புஜாராவும் முயலும்

Image result for alastair cook
கதவை திறக்கலாமா வேண்டாமா?
நடந்து வரும் இங்கிலாந்து-இந்தியா முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பிக்க இங்கிலாந்து அணித்தலைவர் கருணை வைத்தால் உண்டு என என் முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அலிஸ்டெர் குக்கின் தலைமை அதற்கு செவி சாய்த்துள்ளது. நேற்றும் இன்றும் அவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து ஒரு தற்காப்பு மனநிலையுடன், வெல்லும் அக்கறையின்றி, ஆக்ரோஷமின்றி ஆடியது. ஒருநாள் நான் என் மனைவியிடம் முயல் கறி வாங்க வா என்றேன். அவள் கடைக்கு சென்று முயலைப் பார்த்தாள். மனம் கருணையில் ததும்பியது. முயலை செல்லப்பிராணியாக வளர்க்க முடிவு செய்து வீட்டுக்கு கொண்டு வந்து விட்டாள். நேற்றைய நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தலைவர் குக்கின் தலைமை இப்படித் தான் இருந்தது. 

சட்டீஷ்வர் புஜாரா தான் சந்தித்த எல்லா பந்தையும் முன்னங்காலில் ஆடி வந்தார். இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் சில பவுன்சர்களை வீச பந்து தொடர்ந்து புஜாராவின் தலையில் பட்டது. நல்லவேளை காயமின்றி தப்பித்தார். புஜாராவின் பின்னங்கால் ஸ்டம்புக்கு குறுக்கே செல்ல முன்னங்கால் முழுசாய் முன்னே வந்து பந்தை சந்தித்தது. இதனால் பவுனசர் பந்தை சமாளிக்கும் விதமாய் அவரால் முழுக்க பின்னங்காலுக்கு நகர முடியவில்லை. இது ஒரு சிக்கலான சுய பொறி. இங்கிலாந்து வேகவீச்சாளர்கள் தொடர்ந்து பவுன்சர்கள் வீசி இருந்தால் ஒன்று புஜாரா காயம்பட்டு வெளியேறி இருப்பார் அல்லது அவுட் ஆகி போயிருப்பார். ஆனால் தம் ஆக்ரோஷம் காரணமாய் (பவுன்சர் பட்டு இறந்து போன ஆஸ்திரேலியாவின் ஹியூக்ஸ் போல) புஜாராவுக்கு அசம்பாவிதம் நேரக்கூடாது என்பதிலேயே இங்கிலாந்து அணித்தலைவர் குக் கவனமாய் இருந்தார். அவர் பவுன்சர்களை நிறுத்தினார். புஜாராவை சுலபமாய் சதம் அடிக்க அனுமதித்தார்.
அதே போல நேற்று விஜய் இங்கிலாந்தின் லெக் ஸ்பின்னர் ரஷீதின் கூக்ளியை கணிக்க முடியாமல் திணறினார். வெளியே போகும் பந்தை கூட கூக்ளியாக கருதி கால் பக்கம் ஆடினார். கால் பக்கம் பீல்டர்களை அகற்றி off sideஐ வலுப்படுத்தி இருந்தால் குக் கால் பக்கம் அடிக்க முனைந்து கவர் பகுதிக்கு leading edge கொடுத்து வெளியேறி இருப்பார். ஆனால் ரஷீத் அவ்வப்போது தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவதால் இந்த வியூகம் வகுக்கவும் குக் தயங்கினார். அவர் மிட் ஆன், லாங் லெக் என கால் பக்கம் பீல்டர்களை நிறுத்தினார். இதனால் ரஷீதால் விஜய் சதம் அடிப்பதை தடுக்க முடியவில்லை.
இன்று, நான்காவது நாள், கோலி ஆட வர வேகவீச்சாளர்கள் வழக்கம் போல் பந்தை வைடாக டிரைவ் செய்யும் நீளத்தில் வீசி கோலியை கவர் டிரைவ் அடிக்க தூண்டினர். அதுவே அவர் பலவீனம். முன்னங்கால் சரியாக நகராததால் அவர் அடிக்கடி ஸ்லிப்பில் எட்ஜ் கொடுத்து வெளியேறுவார். ஆனால் கோலியை இதற்கு முழுக்க தூண்ட off sideஇல் காலி இடங்கள் விட வேண்டும். கவர் டிரைவ் அடித்தால் நான்கு ரன்கள் கிடைக்கும் என சேதியை கோலிக்கு விட வேண்டும். ஆனால் குக்கோ வைடாக பந்தை வீச செய்து off sideஇல் அதிக தடுப்பாளர்களை நிறுத்தி தடுப்பாட்ட களம் அமைத்தார். கிட்டத்தட்ட ஒருநாள் களம் போல் இது இருந்தது. குக் விரும்பியது கோலியை வெளியேற்ற அல்ல கட்டுப்படுத்த. நியுசிலாந்து அணி சமீபத்தில் இந்த வியூகத்தை அழகாக வகுத்து கோலியை டிரைவ் செய்ய வைத்து வெளியேற்றியது. ஆனால் இங்கிலாந்து அணித்தலைவரின் மட்டமான களத்தடுப்பு அமைப்பு காரணமாய் கோலி ஒரு கவர் டிரைவ் கூட ஆடவில்லை. தப்பித்து விட்டார். (ஆனால் கோலி தானாகவே hit wicket மூலம் வெளியேறினது வேறு விசயம்.)

இப்படி இங்கிலாந்தின் மட்டமான தலைமை உபயம் இந்தியா இந்த டெஸ்டில் தப்பிக்க வாய்ப்பு அதிகம். அதையும் மீறி நாம் இன்னும் மட்டமாய் ஆடி தோற்றால் தான் உண்டு. இப்போதைக்கு யார் அதிக மட்டமாய் ஆடுவது என்றுதான் போட்டி!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...