Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

லெஸ்பியன்களின் சமூக இணக்கம்

லெஸ்பியன்களை அண்மையில் கவனிக்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. அப்போது நான் கவனித்தது என்னவென்றால் 1) ஹெட்டெரோசெக்‌ஷுவல் (ஆண்களை விரும்பும்) பெண்களை விட லெஸ்பியன்கள் தமக்குள் அதிக இணக்கமாக இருக்கிறார்கள். அதாவது, ஆண் விழைவு கொண்ட (ஹெட்டெரோசெக்ஷுவல்) பெண்கள் மத்தியில் சதா போட்டி, பொறாமை, வெறுப்புணர்வுகள் புகைவதை கவனித்திருக்கிறேன். நான்கு பேர் சேர்ந்திருந்தாலும் கூட ஒருவரைப் பற்றி மற்றவர் புறம் பேசாமல் இருப்பதில்லை. நான்கில் ஒரு பெண் சற்று தொலைவில் இருந்தால் மூன்று பேரும் சேர்ந்து அவளைப் பற்றி பழிகூறுவார்கள். அதே போல் இவர்களின் உறவாடல் என்பது வெடிமருந்துக் கிடங்கில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காரியம் தான். எப்போது வெடிக்கும் என கணிக்க முடியாது. ஒரு நாளில் பல முறை முறைத்து வெறுத்து அடித்துக் கொள்வார்கள். பிறகு இணைவார்கள். ஆனால் லெஸ்பியன்கள் அப்படி இல்லை. அவர்களுக்குள் ஒரு அபாரமான இணக்கத்தை கவனிக்கிறேன். சொற்களில் கூர்மையில்லை, விஷம் இல்லை. கண்களில் பொறாமை இல்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் உலகில் ஆண்கள் இல்லை என்பது.

 அவர்களுக்குள் அப்படி ஒரு நேசம். பார்த்ததும் லேசாய் தோளை தழுவிக் கொள்கிறார்கள். ஸ்பரிசம் பெற்றவர் லேசாய் இடையை வளைக்கிறார். கைகளைப் பற்றிக் கொண்டு முணுமுணுப்பாய் பேசுகிறார்கள். கண்களில் ஆசை வழிகிறது. ஏதோ சங்க கவிதை சித்திரத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது.
லெஸ்பியன் ஜோடிகளில் ஒருவர் ஆணின் இடத்தையும் மற்றொருவர் பெண்ணின் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்வார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்பெண்களுக்கு ஒரு புதுப்பெண்ணை பார்த்ததுமே உடல் மொழியில் யார் எந்த விதமானவர்கள் என தெரிந்து போகிறது. ஆண் வகையான லெஸ்பியன் பெண்கள் கொஞ்சம் முறுக்காக இருக்கிறார்கள். உடலை நேராக வைத்து நடக்கிறார்கள். ஆண்களிடம் உரையாடும் போது இஞ்சியை கடித்தது போல் ஆகிறார்கள். ஆனால் பெண் வகை லெஸ்பியன்கள் ஆண்களிடம் சற்று நெருக்கமாக இருப்பார்கள் என கணிக்கிறேன்.
Homoeroticism எனப்படும் இந்த சுயபால்விழைவு சமூக இணக்கத்துக்கு சிறப்பானது. அதாவது சுயபால் விழைவு கொண்டவர்கள் கூட்டாக இணைந்து செயல்படுவது எளிது. அவர்களுக்குள் போட்டியும் வெறுப்பும் “குறைவாக” இருக்கும். இதை நான் சொல்லவில்லை. பரிணாம உளவியல் சொல்கிறது.
ஏன் சுயபால்விழைவு மனித குலத்தில் ஏற்பட்டது எனும் கேள்வி எழுந்த போது பரிணாம உளவியல் அதற்கு ஒரு விடை கண்டது. ஆதிமனிதர்கள் கூட்டாய் இணைந்து வேட்டையாடவும் பல்வேறு பணிகள் செய்யவும் சுயபால் விழைவு ஏற்படுத்தும் இணக்கமும் அன்பும் உதவியது. போட்டி பொறாமை இன்றி இணைந்திருக்க உதவியது. அப்படித் தான் சுயபால் விழைவு நம் மரபணுக்களில் கலந்தது. அதில் மனிதனுக்கு பயன் உண்டு என இயற்கை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
மனிதன் இரண்டு விசயங்களுக்காகத் தான் அடிப்படையில் அடித்துக் கொள்கிறான். 1) நிலம், 2) பெண்ணின் கருப்பை. இரண்டின் மீதான உரிமையின் மீது தான் தன் அதிகாரத்தை அவன் நிலைநிறுத்துகிறான். ஆனால் சுயபால் விழைவில் உடல் கராறாய் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேவையற்றதாகிறது. உதாரணமாய்: இரு ஆண்கள் இணைந்து வேலை செய்கிறார்கள். மிகுந்த இணக்கமாய் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் சிக்கல் வரும். தமக்கென ஒரு குடும்பத்தை அமைக்க நினைக்கும் போது, பெண் ஒருவள் குறுக்கே வரும் போது. இரு பெண்கள் இணைந்து பணி செய்யும் போது ஆண் சிக்கலானவன் ஆகிறான். ஆனால் சுயபால் விழைவு கொண்டவர்கள் மத்தியில் இந்த சிக்கல் ஏற்படுவதில்லை.
ஆனால் இந்த கோட்பாட்டு விளக்கம் கூட கச்சிதமானது அல்ல. லெஸ்பியன்களும் தமது ஜோடியின் விசுவாசம் பற்றி அக்கறை கொள்வார்கள், கட்டுப்படுத்த முயல்வார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் உடல் ரீதியாய் இருவரும் பெண்கள் என்றாலும், மனதளவில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்கிறார். ஆனால் ஹெட்ரோசெக்‌ஷுவல் பெண்களிடத்து உள்ள அளவு பரஸ்பர வன்மமும் கசப்பும் இவர்களிடத்து இல்லை என அவதானிக்கிறேன். அது மட்டுமல்ல, ஒரு குழுவில் லெஸ்பியன்கள் சிலர் இணையும் போது அங்கு ஒரு கனிவான சூழல் உருவாகிறதை கவனிக்கிறேன். ஆனால் ஹெட்ரோசெக்‌ஷுவல் பெண்கள் அதிகமான வேலையிடங்களில் எப்போதும் டைம் பாம் கடிகாரம் டிக் டிக் என ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இதை எதிர்காலத்தில் மனிதவளத் துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும்.


Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...