Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

லெஸ்பியன்களின் சமூக இணக்கம்

லெஸ்பியன்களை அண்மையில் கவனிக்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. அப்போது நான் கவனித்தது என்னவென்றால் 1) ஹெட்டெரோசெக்‌ஷுவல் (ஆண்களை விரும்பும்) பெண்களை விட லெஸ்பியன்கள் தமக்குள் அதிக இணக்கமாக இருக்கிறார்கள். அதாவது, ஆண் விழைவு கொண்ட (ஹெட்டெரோசெக்ஷுவல்) பெண்கள் மத்தியில் சதா போட்டி, பொறாமை, வெறுப்புணர்வுகள் புகைவதை கவனித்திருக்கிறேன். நான்கு பேர் சேர்ந்திருந்தாலும் கூட ஒருவரைப் பற்றி மற்றவர் புறம் பேசாமல் இருப்பதில்லை. நான்கில் ஒரு பெண் சற்று தொலைவில் இருந்தால் மூன்று பேரும் சேர்ந்து அவளைப் பற்றி பழிகூறுவார்கள். அதே போல் இவர்களின் உறவாடல் என்பது வெடிமருந்துக் கிடங்கில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காரியம் தான். எப்போது வெடிக்கும் என கணிக்க முடியாது. ஒரு நாளில் பல முறை முறைத்து வெறுத்து அடித்துக் கொள்வார்கள். பிறகு இணைவார்கள். ஆனால் லெஸ்பியன்கள் அப்படி இல்லை. அவர்களுக்குள் ஒரு அபாரமான இணக்கத்தை கவனிக்கிறேன். சொற்களில் கூர்மையில்லை, விஷம் இல்லை. கண்களில் பொறாமை இல்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் உலகில் ஆண்கள் இல்லை என்பது.

 அவர்களுக்குள் அப்படி ஒரு நேசம். பார்த்ததும் லேசாய் தோளை தழுவிக் கொள்கிறார்கள். ஸ்பரிசம் பெற்றவர் லேசாய் இடையை வளைக்கிறார். கைகளைப் பற்றிக் கொண்டு முணுமுணுப்பாய் பேசுகிறார்கள். கண்களில் ஆசை வழிகிறது. ஏதோ சங்க கவிதை சித்திரத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது.
லெஸ்பியன் ஜோடிகளில் ஒருவர் ஆணின் இடத்தையும் மற்றொருவர் பெண்ணின் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்வார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்பெண்களுக்கு ஒரு புதுப்பெண்ணை பார்த்ததுமே உடல் மொழியில் யார் எந்த விதமானவர்கள் என தெரிந்து போகிறது. ஆண் வகையான லெஸ்பியன் பெண்கள் கொஞ்சம் முறுக்காக இருக்கிறார்கள். உடலை நேராக வைத்து நடக்கிறார்கள். ஆண்களிடம் உரையாடும் போது இஞ்சியை கடித்தது போல் ஆகிறார்கள். ஆனால் பெண் வகை லெஸ்பியன்கள் ஆண்களிடம் சற்று நெருக்கமாக இருப்பார்கள் என கணிக்கிறேன்.
Homoeroticism எனப்படும் இந்த சுயபால்விழைவு சமூக இணக்கத்துக்கு சிறப்பானது. அதாவது சுயபால் விழைவு கொண்டவர்கள் கூட்டாக இணைந்து செயல்படுவது எளிது. அவர்களுக்குள் போட்டியும் வெறுப்பும் “குறைவாக” இருக்கும். இதை நான் சொல்லவில்லை. பரிணாம உளவியல் சொல்கிறது.
ஏன் சுயபால்விழைவு மனித குலத்தில் ஏற்பட்டது எனும் கேள்வி எழுந்த போது பரிணாம உளவியல் அதற்கு ஒரு விடை கண்டது. ஆதிமனிதர்கள் கூட்டாய் இணைந்து வேட்டையாடவும் பல்வேறு பணிகள் செய்யவும் சுயபால் விழைவு ஏற்படுத்தும் இணக்கமும் அன்பும் உதவியது. போட்டி பொறாமை இன்றி இணைந்திருக்க உதவியது. அப்படித் தான் சுயபால் விழைவு நம் மரபணுக்களில் கலந்தது. அதில் மனிதனுக்கு பயன் உண்டு என இயற்கை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
மனிதன் இரண்டு விசயங்களுக்காகத் தான் அடிப்படையில் அடித்துக் கொள்கிறான். 1) நிலம், 2) பெண்ணின் கருப்பை. இரண்டின் மீதான உரிமையின் மீது தான் தன் அதிகாரத்தை அவன் நிலைநிறுத்துகிறான். ஆனால் சுயபால் விழைவில் உடல் கராறாய் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேவையற்றதாகிறது. உதாரணமாய்: இரு ஆண்கள் இணைந்து வேலை செய்கிறார்கள். மிகுந்த இணக்கமாய் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் சிக்கல் வரும். தமக்கென ஒரு குடும்பத்தை அமைக்க நினைக்கும் போது, பெண் ஒருவள் குறுக்கே வரும் போது. இரு பெண்கள் இணைந்து பணி செய்யும் போது ஆண் சிக்கலானவன் ஆகிறான். ஆனால் சுயபால் விழைவு கொண்டவர்கள் மத்தியில் இந்த சிக்கல் ஏற்படுவதில்லை.
ஆனால் இந்த கோட்பாட்டு விளக்கம் கூட கச்சிதமானது அல்ல. லெஸ்பியன்களும் தமது ஜோடியின் விசுவாசம் பற்றி அக்கறை கொள்வார்கள், கட்டுப்படுத்த முயல்வார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் உடல் ரீதியாய் இருவரும் பெண்கள் என்றாலும், மனதளவில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்கிறார். ஆனால் ஹெட்ரோசெக்‌ஷுவல் பெண்களிடத்து உள்ள அளவு பரஸ்பர வன்மமும் கசப்பும் இவர்களிடத்து இல்லை என அவதானிக்கிறேன். அது மட்டுமல்ல, ஒரு குழுவில் லெஸ்பியன்கள் சிலர் இணையும் போது அங்கு ஒரு கனிவான சூழல் உருவாகிறதை கவனிக்கிறேன். ஆனால் ஹெட்ரோசெக்‌ஷுவல் பெண்கள் அதிகமான வேலையிடங்களில் எப்போதும் டைம் பாம் கடிகாரம் டிக் டிக் என ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இதை எதிர்காலத்தில் மனிதவளத் துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும்.


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...