முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லெஸ்பியன்களின் சமூக இணக்கம்

லெஸ்பியன்களை அண்மையில் கவனிக்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. அப்போது நான் கவனித்தது என்னவென்றால் 1) ஹெட்டெரோசெக்‌ஷுவல் (ஆண்களை விரும்பும்) பெண்களை விட லெஸ்பியன்கள் தமக்குள் அதிக இணக்கமாக இருக்கிறார்கள். அதாவது, ஆண் விழைவு கொண்ட (ஹெட்டெரோசெக்ஷுவல்) பெண்கள் மத்தியில் சதா போட்டி, பொறாமை, வெறுப்புணர்வுகள் புகைவதை கவனித்திருக்கிறேன். நான்கு பேர் சேர்ந்திருந்தாலும் கூட ஒருவரைப் பற்றி மற்றவர் புறம் பேசாமல் இருப்பதில்லை. நான்கில் ஒரு பெண் சற்று தொலைவில் இருந்தால் மூன்று பேரும் சேர்ந்து அவளைப் பற்றி பழிகூறுவார்கள். அதே போல் இவர்களின் உறவாடல் என்பது வெடிமருந்துக் கிடங்கில் சிகரெட் பற்ற வைப்பது போன்ற காரியம் தான். எப்போது வெடிக்கும் என கணிக்க முடியாது. ஒரு நாளில் பல முறை முறைத்து வெறுத்து அடித்துக் கொள்வார்கள். பிறகு இணைவார்கள். ஆனால் லெஸ்பியன்கள் அப்படி இல்லை. அவர்களுக்குள் ஒரு அபாரமான இணக்கத்தை கவனிக்கிறேன். சொற்களில் கூர்மையில்லை, விஷம் இல்லை. கண்களில் பொறாமை இல்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் உலகில் ஆண்கள் இல்லை என்பது.

 அவர்களுக்குள் அப்படி ஒரு நேசம். பார்த்ததும் லேசாய் தோளை தழுவிக் கொள்கிறார்கள். ஸ்பரிசம் பெற்றவர் லேசாய் இடையை வளைக்கிறார். கைகளைப் பற்றிக் கொண்டு முணுமுணுப்பாய் பேசுகிறார்கள். கண்களில் ஆசை வழிகிறது. ஏதோ சங்க கவிதை சித்திரத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது.
லெஸ்பியன் ஜோடிகளில் ஒருவர் ஆணின் இடத்தையும் மற்றொருவர் பெண்ணின் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்வார் என கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்பெண்களுக்கு ஒரு புதுப்பெண்ணை பார்த்ததுமே உடல் மொழியில் யார் எந்த விதமானவர்கள் என தெரிந்து போகிறது. ஆண் வகையான லெஸ்பியன் பெண்கள் கொஞ்சம் முறுக்காக இருக்கிறார்கள். உடலை நேராக வைத்து நடக்கிறார்கள். ஆண்களிடம் உரையாடும் போது இஞ்சியை கடித்தது போல் ஆகிறார்கள். ஆனால் பெண் வகை லெஸ்பியன்கள் ஆண்களிடம் சற்று நெருக்கமாக இருப்பார்கள் என கணிக்கிறேன்.
Homoeroticism எனப்படும் இந்த சுயபால்விழைவு சமூக இணக்கத்துக்கு சிறப்பானது. அதாவது சுயபால் விழைவு கொண்டவர்கள் கூட்டாக இணைந்து செயல்படுவது எளிது. அவர்களுக்குள் போட்டியும் வெறுப்பும் “குறைவாக” இருக்கும். இதை நான் சொல்லவில்லை. பரிணாம உளவியல் சொல்கிறது.
ஏன் சுயபால்விழைவு மனித குலத்தில் ஏற்பட்டது எனும் கேள்வி எழுந்த போது பரிணாம உளவியல் அதற்கு ஒரு விடை கண்டது. ஆதிமனிதர்கள் கூட்டாய் இணைந்து வேட்டையாடவும் பல்வேறு பணிகள் செய்யவும் சுயபால் விழைவு ஏற்படுத்தும் இணக்கமும் அன்பும் உதவியது. போட்டி பொறாமை இன்றி இணைந்திருக்க உதவியது. அப்படித் தான் சுயபால் விழைவு நம் மரபணுக்களில் கலந்தது. அதில் மனிதனுக்கு பயன் உண்டு என இயற்கை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
மனிதன் இரண்டு விசயங்களுக்காகத் தான் அடிப்படையில் அடித்துக் கொள்கிறான். 1) நிலம், 2) பெண்ணின் கருப்பை. இரண்டின் மீதான உரிமையின் மீது தான் தன் அதிகாரத்தை அவன் நிலைநிறுத்துகிறான். ஆனால் சுயபால் விழைவில் உடல் கராறாய் கட்டுப்படுத்தும் அதிகாரம் தேவையற்றதாகிறது. உதாரணமாய்: இரு ஆண்கள் இணைந்து வேலை செய்கிறார்கள். மிகுந்த இணக்கமாய் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு கட்டத்தில் சிக்கல் வரும். தமக்கென ஒரு குடும்பத்தை அமைக்க நினைக்கும் போது, பெண் ஒருவள் குறுக்கே வரும் போது. இரு பெண்கள் இணைந்து பணி செய்யும் போது ஆண் சிக்கலானவன் ஆகிறான். ஆனால் சுயபால் விழைவு கொண்டவர்கள் மத்தியில் இந்த சிக்கல் ஏற்படுவதில்லை.
ஆனால் இந்த கோட்பாட்டு விளக்கம் கூட கச்சிதமானது அல்ல. லெஸ்பியன்களும் தமது ஜோடியின் விசுவாசம் பற்றி அக்கறை கொள்வார்கள், கட்டுப்படுத்த முயல்வார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் உடல் ரீதியாய் இருவரும் பெண்கள் என்றாலும், மனதளவில் ஒருவர் ஆணாகவும் மற்றவர் பெண்ணாகவும் இருக்கிறார். ஆனால் ஹெட்ரோசெக்‌ஷுவல் பெண்களிடத்து உள்ள அளவு பரஸ்பர வன்மமும் கசப்பும் இவர்களிடத்து இல்லை என அவதானிக்கிறேன். அது மட்டுமல்ல, ஒரு குழுவில் லெஸ்பியன்கள் சிலர் இணையும் போது அங்கு ஒரு கனிவான சூழல் உருவாகிறதை கவனிக்கிறேன். ஆனால் ஹெட்ரோசெக்‌ஷுவல் பெண்கள் அதிகமான வேலையிடங்களில் எப்போதும் டைம் பாம் கடிகாரம் டிக் டிக் என ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இதை எதிர்காலத்தில் மனிதவளத் துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...