முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப்ரியா தம்பியின் சிறந்த பேச்சு

Image result for ப்ரியா தம்பி
நேற்றைய எனது புத்தக வெளியீட்டு விழாவில் ப்ரியா தம்பி அருமையாக பேசினார். எனது இதுவரையிலான நூல் வெளியீடுகளில் பேசப்பட்டதில் சிறந்த பேச்சு அது தான். அவர் இரு கதைகளை எடுத்துக் கொண்டு நுணுக்கமான அவதானிப்புகளை முன்வைத்தார். மொழியை அலசினார். தனக்கு பிடித்த உவமைகளை குறிப்பிட்டார். அப்பா – மகள் உறவு, ஆண்களின் பொதுவான உளவியல் கதைகளில் எப்படி வந்திருக்கிறது என பேசினார். “அப்பாவின் கதைகள்“ கதைசொல்லியின் அடிப்படையான மனச்சிக்கல் என்ன என அவரால் சுலபத்தில் சொல்லி விட்டு கடக்க முடிந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் கதையை தான் கவனிப்பார்கள். ஒரு கூர்மையான வாசகன் மட்டுமே கதையில் உள்ள முக்கிய தருணங்களை, அத்தருணங்களில் மனித நடத்தையில் வெளிப்படும் விசித்திரங்களை கவனித்து பேசுவான். ப்ரியா அதைத் தான் செய்தார். நான் இதற்கு முன் அவரது இலக்கிய விமர்சனங்கள் படித்ததில்லை. அதனால் இத்தகையதொரு லேசர் கதிர் விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


 அது இன்னொரு விசயத்தையும் காட்டியது. அவருக்குள் பல எழுத்துத் தளங்கள் உள்ளன. இவ்வார குமுதம் லைப்பில் அவர் ஜெயலலிதா பற்றி எழுதிய பத்தி கட்டுரையை படித்த போது ஞாநிக்கு பிறகு நமக்குக் கிடைத்த சிறந்த பத்தியாளர் ப்ரியா தான் என தோன்றியது. ஆனால் அது மட்டுமல்ல. அவருக்கு முகநூலில் சரளமாக எழுதும் ஒரு துணிச்சலான முகம் உள்ளது. பெண்களின் பிரச்சனையை பேசும் பெண்ணிய முகம் உள்ளது. சீரியல் போன்று வெகுஜன மீடியாவில் எழுதுகிறார். அரசியல், சமூகம், தன்னனுபவம் எனவும் நன்றாக எழுதுகிறார். எதையும் துணித்து தனித்துவமாய் பேசுவது தான் அவர் சிறப்பு. தன்னைப் பற்றி அடுத்தவர் என்ன நினைப்பார்கள் எனும் கூச்சம் அவருக்கு இல்லை. இது எழுத்தாளனுக்கு தேவையான ஒரு முக்கிய இயல்பு. நமக்கு தயக்கம் வந்ததும் எழுத்து களையிழந்து விடும்.

 நேற்றைய அவர் பேச்சை கேட்ட போது அவர் தொடர்ந்து இலக்கிய மதிப்புரைகள் எழுத வேண்டும் எனப் பட்டது. அது மட்டுமல்ல அவர் வெவ்வேறு எழுத்து வடிவங்களை முயன்று பார்க்க வேண்டும் என தோன்றுகிறது. தரையில் விட்டால் சிதறி ஓடுவது மாதிரியான ஆளுமை அவருடையது என கணிக்கிறேன். இத்தகையோர் இன்னதென ஒரு அடையாளம் அமைக்காமல் எல்லா விசயங்கள் பற்றியும் எழுதி ஒரு விரிவான தளத்தில் இருக்க கூடியவர்கள்.


நேற்றைய கூட்டத்திற்கு முதலில் தன்னால் வரமுடியாத நிலையில் இருப்பதாய் ப்ரியா தெரிவித்தார். எங்கள் வற்புறுத்தலில் பெயரில் தன் தனிப்பட்ட சிக்கல்களை பொருட்படுத்தாமல் வந்து பேசினார். இத்தனைக்கும் எனக்கு அவருடன் நீண்ட நாள் பரிச்சயம் எல்லாம் இல்லை. அவரிடம் இதுவரை பத்து சொற்களுக்கு மேல் பேசியிருக்க மாட்டேன். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் ஊருக்கு வேறு செல்ல வேண்டும். ஆனால் எந்த நெருக்கடியிலும் தன் பணியை செய்து முடிக்கும் ஒரு அர்ப்பணிப்பு அவரிடம் உள்ளது. அதனால் வந்தார். வந்தவரிடம் சந்தித்து பேச கூட எனக்கு வாய்ப்பு அமையவில்லை. அதனால் இந்த சந்தர்பத்தில் சொல்லிக் கொள்கிறேன். ப்ரியா தம்பிக்கு என் அன்பும் நன்றிகளும்!

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
yes she writes well ...thinks honestly.. a bold lady.. best wishes to priya

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...