Skip to main content

ஐ.பி.எல் 2017 – ரெண்டாவது வாரம்


 நான் இதை எழுதும் போது எட்டு புள்ளிகளுடன் வெற்றிப்படிக்கட்டில் முதல் படியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. அதற்கு சற்று பின்னால் ஆறு புள்ளிகளுடன் கொல்கொத்தா அணி உள்ளது. தில்லி, பூனே, பஞ்சாப், ஹைதராபாத் (சன் ரைசர்ஸ்) ஆகிய அணிகள் தலா நான்கு புள்ளிகளுடன் அடுத்த இடத்தை வகிக்கின்றன. ஆக வலுவான அணிகள் முன்னிலையில் உள்ளன.

 ஆனால் இந்த புள்ளி விபரம் கூறுவது போல் முன்னிலை எப்படி அத்தனை துல்லியமாய் இருக்கவில்லை. வெற்றி தோல்விகள் கலவையாக அமைந்தன. மும்பை, கொல்கொத்தா போன்ற வலுவான அணிகள் மண்ணைக் கவ்வவும் செய்தன. சிறிய அணிகள் ஜொலிக்கவும் செய்தன. ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும் போது மும்பை, கொல்கொத்தா அணிகளின் அனுபவமிக்க நட்சத்திர வீரர்கள் தத்தம் அணிகளை கரைசேர்த்தனர். ஆனால் சிறிய அணிகளுக்கு இந்த சௌகர்யம் இருக்கவில்லை. பூனே அணி ஸ்மித்தையும் பவுலர்களையும் முழுக்க நம்பி இருக்கிறது. பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகள் ஒன்று சேர்ந்து சிறப்பாய் ஆடும் போது அட்டகாசமான அணிகளாகவும் சொதப்பும் போது ஒன்றாய் நீரில் மூழ்கும் கப்பலாகவும் தோன்றுகின்றன. அணி தடுமாறும் போது பல்வேறு கட்டங்களில் தோள் கொடுத்து மீட்கும் ரட்சகர்கள் இந்த அணிகளில் குறைவு.
 தில்லி அணியை பொறுத்தமட்டில் சஹீர்கானின் அணித்தலைமையும், கள அமைப்புகளும், ஒரு வேகவீச்சாளராக அவரது கட்டுப்பாடும் கலை நுணுக்கங்களும் வியக்க வைக்கின்றன. சஹீர் பந்து வீசுவதைக் காணும் போது தற்போது இந்திய அணியில் ஆடி வரும் வேகவீச்சாளர்களை விட சிறப்பாய் வீசுகிறாரே, இவர் ஏன் ஓய்வு பெற்றார் என நமக்கு ஏக்கம் ஏற்படாமல் இல்லை.
பாதாளத்தில்…
இரண்டே புள்ளிகளுடன் அதர பாதாளத்தில் கிடக்கும் இரு அணிகள்: பங்களூர் மற்றும் குஜராத்.
பங்களூர் அணியின் கேப்டன் கோலி ஆட்டத்தொடரின் துவக்கத்தில் காயம் காரணமாய் விலகினார். அவர் இடத்தில் வாட்சன் தலைமை தாங்கினார். இப்போது கோலி திரும்ப ஆடத் துவங்கி உள்ளார். முக்கியமான பேட்ஸ்மேன் எ.பி டிவில்லியர்ஸும் முழுமையான உடல்திறத்துடன் இல்லை. கிறிஸ் கெய்லின் ஆட்டநிலை சிறப்பாக இல்லை. இப்படி பேட்டிங், அணித்தலைமை எதிலும் ஸ்திரத்தன்மை இல்லாதது பங்களூர் அணியை பாதித்துள்ளது.
குஜராத் அணியின் தலைவர் சுரேஷ் ரெய்னா கடந்த ஆறு மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். அதற்கு காரணம் அவரது குழந்தை உடல்நலமற்று இருந்தது. இது ரெய்னாவை மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்தது. அவரும் காயமுற்றார். ரஞ்சி கோப்பையிலும் ரெய்னா ஆடவில்லை. இந்திய கிரிக்கெட் அணிக்காய் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் இருந்தும் ரெய்னா நீக்கப்பட்டார். இப்போது ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பி உள்ள ரெய்னாவின் உடல்நிலையும் ஆட்டநிலையும் சிறப்பாக இல்லை. ரெய்னா இப்போது பார்க்க தொப்பையுடன் தஞ்சாவூர் பொம்மை போல் இருப்பது காண அவரது ரசிகர்களுக்கு வியப்பாக இருக்கும். ரெய்னாவின் தடுமாற்றங்கள் அவரது அணியை பாதித்துள்ளன. மேலும் குஜராத் அணி என்பது ஒரு சமநிலையான அணி அல்ல. அந்த அணியில் போதுமான மத்திய வரிசை பேட்ஸ்மேன்கள் இல்லை. பிஞ்ச், டுவெய்ன் ஸ்மித் போன்ற துவக்க வரிசை பேட்ஸ்மேன்கள் மத்திய வரிசையில் ஆடுவது அணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பூரிக்கான கிழங்கை எடுத்து சமோசா செய்தது போன்ற அணி இது. விளைவாக அவர்களின் ஆட்டம் பரிதாபமாய் உள்ளது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தான் ஒரே ஆறுதல். அவரது பேட்டிங் பட்டாசாக உள்ளது.
அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன்களில் மும்பை அணியின் ரானா முன்னிலையில் இருக்கிறார். இவர் ஒரு அதிரடியான அதேவேளை நிலையான பேட்ஸ்மேன். தனது நிலைத்த ஆட்டம் மூலம் மும்பை அணியின் முதுகெலும்பாக மாறி உள்ளார். இவரை அடுத்த கம்பீர், ஸ்மித், பொலார்ட், சாம்ஸன் ஆகியோரின் பேட்டிங்கும் சிறப்பாக உள்ளது. தில்லி அணியில் ஆடும் சாம்ஸன் கேரளாவை சேர்ந்தவர். அவர் பூனே அணிக்கு எதிராக 63 பந்துகளில் அடித்து 102 ஒரு அற்புதமான சதம். சற்றும் அலுங்காமல் நலுங்காமல் அவர் சிக்ஸர் அடிக்கும் பாணி, பந்துக்கு முன் கூட்டியே தயாராகி நின்று நினைத்த இடத்தில் அட்டகாசமாய் டைமிங் செய்து அவர் சிக்ஸர் விளாசுவது பார்க்க கோடி கண்கள் வேண்டும். அதே போல் கொல்கொத்தா அணிக்காக ஆடும் மனீஷ் பாண்டே மும்பைக்கு எதிராக 47 பந்துகளில் அடித்த 81 குறிப்பிடத்தக்கது. ஒரு மெத்தனமான ஆடுதளத்தில் ஆரம்பத்தில் டைமிங் இன்றி திணறிய பாண்டே மெல்ல மெல்ல பார்முக்கு வந்து இறுதியில் தன் அசகாய ஹிட்டிங் மூலம் அணியை ஒரு நல்ல ஸ்கோருக்கு கொண்டு போனார். முறையே 10 மற்றும் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள புவனேஷ்வர் குமார் மற்றும் இம்ரான் தாஹிர் பவுலர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார்கள்.

வரும் வாரத்தில் மும்பை, கொல்கொத்தா அணிகள் மேலும் வெற்றிகளை குவிக்குமா அல்லது சிறிய அணிகளான பூனே, தில்லி, சன்ரைசர்ஸ் ஆகியவை முன்னிலை பெறுமா என காண்போம்.
நன்றி: கல்கி

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...