முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (2)

Image result for kane and abel murder


இனி யுத்தத்துக்கு வருவோம்.
உலகின் முதல் கொலை எப்படி நடந்திருக்கும்? ஒரு வலுவான எதிரியை ஒருவன் கட்டையால் அடித்தோ கல்லால் மண்டையை பிளந்தோ, அல்லது கத்தி அல்லது ஈட்டி கண்டு பிடிக்கப்பட்ட பிறகென்றால் குத்தியோ கொன்றிருக்கலாம். ஆனால் இந்த ஆயுதங்கள் எதுவுமே இல்லை. எந்த ஆயுதங்களுமே சாத்தியப்படாத இடத்தில் அவன் வசிக்கிறான். அவன் கொல்ல வேண்டிய ஆள் அவனை விட வலுவானவர். பக்கத்தில் போய் கழுத்தை நெரித்து கொல்ல முடியாது. அப்படி எனில் கொலையே நடந்திருக்காது.

ஆனால் கொலை நடந்தது. ஏனெனில் ஆயுதம் அவன் கண்ணில் பட்டது. உலகின் முதல் கொலையை பற்றி விவிலியம் பேசுகிறது. கேன் தன் சகோதரன் ஏபெலை கொல்கிறான். அவன் காதில் சாத்தான் சொல்கிறான்: “ஏபெலின் தலையை ஒரு கல்லால் அடித்து உடைத்துக் கொல்.” சாத்தான் முதலில் ஆயுதத்தை (கல்) கொடுக்கிறான். அடுத்து தான் கொலையை நிகழ்த்தச் செய்கிறான். நம் சூழலில் இந்த சாத்தானாக ஆயுத நிறுவனங்கள் உள்ளன. அவை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆயுதங்கள் வழங்கி போருக்கு தயார் செய்கின்றன. அவை அமெரிக்காவை அப்கானிஸ்தானிலும், இஸ்ரேலை பாலஸ்தீனிலும் குண்டு போடச் சொல்கின்றன. உலகம் ஆயுத வியாபாரத்தை தடை செய்திருந்தால் அந்த கொடூரமான ஈழப் போர் நடந்திருக்காது. லட்சக்கணக்கான அப்பாவிகள் சிதைந்திருக்க மாட்டார்கள்.
ராணுவத்திற்கு என்று தனியாய் ஒரு சமூகப் பங்களிப்பு உண்டா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. பேசி சமரசமாகிப் போகும் பிரச்சனைகளே தேசங்களுக்கு இடையே உள்ளன. ஆனால் அரசியல்வாதிகள் நல்ல பெயர் எடுக்க சிலநேரம் போர் பீதியை மக்களிடையே தூண்டுகின்றன. வாஜ்பாய் அரசு கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுமதித்து விட்டு பிறகு போரை ஆரம்பித்தது ஒரு உதாரணம். இதுவே 1947இல் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரை ஆக்கிரத்த போதும் நடந்தது. மௌண்ட் பேட்டன் பாகிஸ்தானிய ராணுவம் காஷ்மீருக்குள் நுழைவதை தடுப்பதை தள்ளிப் போட்டார். (அவர்களை படையெடுக்க தூண்டியதே அவர் தான் என்றும் சொல்கிறார்கள்.). நேருவும் அவருக்கு உடன்பட்டார். காஷ்மீரை பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்த பின்னர் இந்தியர்கள் ராணுவத்தை அனுப்பி போரிட்டார்கள். எளிதில் முடக்கி இருக்க வேண்டிய எளிய சிக்கலை பெரிதாய் வளர்த்தெடுத்தார்கள். பிரிவினையையும் பிரிட்டீஷ் அரசாங்கம் வேண்டும் என்றுமே மோசமாய் திட்டமிட்டு கடும் உயிர்சேதத்தை இருபக்கமும் ஏற்படுத்தியது. இது இரு தேசங்கள் இடையிலும் தீராப் பகையை தோற்றுவித்தது. மேலும் பிரிட்டீஷ் அரசு ஒரு பக்கம் இந்தியாவை ஆதரித்து விட்டு இன்னொரு பக்கம் பாகிஸ்தானையும் தூண்டி விட்டது. இல்லாவிட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளாய் நீடித்திருக்க முடியும்.
வலுவான ராணுவம் இல்லாத ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிக்கும் என்பதும் ஒரு தொன்மம் தான். இலங்கையை இந்தியா சுலபத்தில் ஆக்கிரமிக்க முடியுமே? ஏன் இல்லை? தேவையில்லை என்பதலே. பெரிய ராணுவங்கள் இல்லாத எத்தனையோ சிறு தேசங்கள் உலகில் பரஸ்பர புரிந்துணர்வு, வணிக ஒப்பந்தங்கள், பண்பாட்டு பரிமாற்றங்கள் மூலம் போர் இன்றி நிலைத்து வருகின்றன. ஆனால் ராணுவத்துக்காக பட்ஜெட்டில் பெருந்தொகையை ஒதுக்கும் தேசங்கள் அவ்வப்போது போரில் ஈடுபடுவதை காணலாம். அமெரிக்கா சிறந்த உதாரணம்.
போருக்காக ஆயுதமா? ஆயுதத்துக்காக போரா?
ஆயுதத்துக்காக போர் என்பதே என் தரப்பு.
முதன்முதலில் ஆயுதம் ஒன்றை காணுற்ற பின்னரே மனிதனுக்கு கொல்லும் எண்ணம் வருகிறது. ஆயுதம் வழியாகத் தான் அவன் கொலையை அறிகிறான். நீங்கள் கேட்கலாம். ஆயுதத்தை அவன் தேடியதையே கொல்லும் இச்சை ஏற்பட்ட பின்னர் தானே?
நண்பர்களே என் பதில் இது: ஆயுதம் இன்றி ஒரு மனிதன் கொலையை கற்பனையே பண்ணி இருக்க முடியாது. அறிந்திருக்க முடியாது. அறியாத ஒன்றை எப்படி நம் மூதாதை (கற்பனை) செய்திருக்க முடியும்? ஆயுதத்திற்கு பின்னர் தான் கொலையே தோன்றி இருக்க முடியும். அதன் நீட்சியாய், ஆயுத வியாபார்கள் ராணுவங்களையும் ராணுவங்கள் போரையும் தோற்றுவித்தனர்.

 (நன்றி: மலைகள்.காம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...