முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யுத்தத்துக்காக ஆயுதமா ஆயுதத்துக்காக யுத்தமா? (2)

Image result for kane and abel murder


இனி யுத்தத்துக்கு வருவோம்.
உலகின் முதல் கொலை எப்படி நடந்திருக்கும்? ஒரு வலுவான எதிரியை ஒருவன் கட்டையால் அடித்தோ கல்லால் மண்டையை பிளந்தோ, அல்லது கத்தி அல்லது ஈட்டி கண்டு பிடிக்கப்பட்ட பிறகென்றால் குத்தியோ கொன்றிருக்கலாம். ஆனால் இந்த ஆயுதங்கள் எதுவுமே இல்லை. எந்த ஆயுதங்களுமே சாத்தியப்படாத இடத்தில் அவன் வசிக்கிறான். அவன் கொல்ல வேண்டிய ஆள் அவனை விட வலுவானவர். பக்கத்தில் போய் கழுத்தை நெரித்து கொல்ல முடியாது. அப்படி எனில் கொலையே நடந்திருக்காது.

ஆனால் கொலை நடந்தது. ஏனெனில் ஆயுதம் அவன் கண்ணில் பட்டது. உலகின் முதல் கொலையை பற்றி விவிலியம் பேசுகிறது. கேன் தன் சகோதரன் ஏபெலை கொல்கிறான். அவன் காதில் சாத்தான் சொல்கிறான்: “ஏபெலின் தலையை ஒரு கல்லால் அடித்து உடைத்துக் கொல்.” சாத்தான் முதலில் ஆயுதத்தை (கல்) கொடுக்கிறான். அடுத்து தான் கொலையை நிகழ்த்தச் செய்கிறான். நம் சூழலில் இந்த சாத்தானாக ஆயுத நிறுவனங்கள் உள்ளன. அவை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆயுதங்கள் வழங்கி போருக்கு தயார் செய்கின்றன. அவை அமெரிக்காவை அப்கானிஸ்தானிலும், இஸ்ரேலை பாலஸ்தீனிலும் குண்டு போடச் சொல்கின்றன. உலகம் ஆயுத வியாபாரத்தை தடை செய்திருந்தால் அந்த கொடூரமான ஈழப் போர் நடந்திருக்காது. லட்சக்கணக்கான அப்பாவிகள் சிதைந்திருக்க மாட்டார்கள்.
ராணுவத்திற்கு என்று தனியாய் ஒரு சமூகப் பங்களிப்பு உண்டா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. பேசி சமரசமாகிப் போகும் பிரச்சனைகளே தேசங்களுக்கு இடையே உள்ளன. ஆனால் அரசியல்வாதிகள் நல்ல பெயர் எடுக்க சிலநேரம் போர் பீதியை மக்களிடையே தூண்டுகின்றன. வாஜ்பாய் அரசு கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுமதித்து விட்டு பிறகு போரை ஆரம்பித்தது ஒரு உதாரணம். இதுவே 1947இல் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரை ஆக்கிரத்த போதும் நடந்தது. மௌண்ட் பேட்டன் பாகிஸ்தானிய ராணுவம் காஷ்மீருக்குள் நுழைவதை தடுப்பதை தள்ளிப் போட்டார். (அவர்களை படையெடுக்க தூண்டியதே அவர் தான் என்றும் சொல்கிறார்கள்.). நேருவும் அவருக்கு உடன்பட்டார். காஷ்மீரை பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்த பின்னர் இந்தியர்கள் ராணுவத்தை அனுப்பி போரிட்டார்கள். எளிதில் முடக்கி இருக்க வேண்டிய எளிய சிக்கலை பெரிதாய் வளர்த்தெடுத்தார்கள். பிரிவினையையும் பிரிட்டீஷ் அரசாங்கம் வேண்டும் என்றுமே மோசமாய் திட்டமிட்டு கடும் உயிர்சேதத்தை இருபக்கமும் ஏற்படுத்தியது. இது இரு தேசங்கள் இடையிலும் தீராப் பகையை தோற்றுவித்தது. மேலும் பிரிட்டீஷ் அரசு ஒரு பக்கம் இந்தியாவை ஆதரித்து விட்டு இன்னொரு பக்கம் பாகிஸ்தானையும் தூண்டி விட்டது. இல்லாவிட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளாய் நீடித்திருக்க முடியும்.
வலுவான ராணுவம் இல்லாத ஒரு நாட்டை இன்னொரு நாடு ஆக்கிரமிக்கும் என்பதும் ஒரு தொன்மம் தான். இலங்கையை இந்தியா சுலபத்தில் ஆக்கிரமிக்க முடியுமே? ஏன் இல்லை? தேவையில்லை என்பதலே. பெரிய ராணுவங்கள் இல்லாத எத்தனையோ சிறு தேசங்கள் உலகில் பரஸ்பர புரிந்துணர்வு, வணிக ஒப்பந்தங்கள், பண்பாட்டு பரிமாற்றங்கள் மூலம் போர் இன்றி நிலைத்து வருகின்றன. ஆனால் ராணுவத்துக்காக பட்ஜெட்டில் பெருந்தொகையை ஒதுக்கும் தேசங்கள் அவ்வப்போது போரில் ஈடுபடுவதை காணலாம். அமெரிக்கா சிறந்த உதாரணம்.
போருக்காக ஆயுதமா? ஆயுதத்துக்காக போரா?
ஆயுதத்துக்காக போர் என்பதே என் தரப்பு.
முதன்முதலில் ஆயுதம் ஒன்றை காணுற்ற பின்னரே மனிதனுக்கு கொல்லும் எண்ணம் வருகிறது. ஆயுதம் வழியாகத் தான் அவன் கொலையை அறிகிறான். நீங்கள் கேட்கலாம். ஆயுதத்தை அவன் தேடியதையே கொல்லும் இச்சை ஏற்பட்ட பின்னர் தானே?
நண்பர்களே என் பதில் இது: ஆயுதம் இன்றி ஒரு மனிதன் கொலையை கற்பனையே பண்ணி இருக்க முடியாது. அறிந்திருக்க முடியாது. அறியாத ஒன்றை எப்படி நம் மூதாதை (கற்பனை) செய்திருக்க முடியும்? ஆயுதத்திற்கு பின்னர் தான் கொலையே தோன்றி இருக்க முடியும். அதன் நீட்சியாய், ஆயுத வியாபார்கள் ராணுவங்களையும் ராணுவங்கள் போரையும் தோற்றுவித்தனர்.

 (நன்றி: மலைகள்.காம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...