முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிமனிதன் எனும் பிரமை (4)

Image result for sewage workers

நான் அனுதினமும் இடஒதுக்கீட்டை கடுமையாய் எதிர்க்கும் மேற்தட்டு மாணவர்களிடம் உரையாடுகிறேன். அவர்கள் அப்படியே மேற்சொன்ன தனிமனித வாதத்தை பேசுகிறார்கள். மனிதனின் ஆதாரமான திறமையின் அடிப்படையிலே அவனுக்கான வாய்ப்புகள் அமைய வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஆதாரமான திறமை என ஒன்று இல்லை; அது கட்டமைக்கப்பட்டது என அவர்களுக்கு புரிவதில்லை.

நாம் ரேண்டின் உதாரணத்துக்கு மீண்டும் வருவோம். ஒரு இலை பச்சை என எப்படி அறிகிறோம்? இலை “பச்சையாக இருப்பதே” அதை பச்சையாக்கிறது என்பார் ரேண்ட். ஆனால் உலகம் மொத்தமும், காற்றும், மழையும், மேகங்களும், சூரியனும் “பச்சையாக” இல்லை என்பதாலே இலையின் பச்சை நமக்கு துலங்குகிறது என்பது என் பார்வை. அதாவது, இலையை சூழ்ந்துள்ளவை அதைப் போல பழுப்பாக இல்லை என்பதே இலையை பச்சை ஆக்குகிறது. A = A, ஏனென்றால் A × B.
 இந்த முரணியக்கத்தின் அடிப்படையிலே மனிதனின் பகுத்தறிவு செயலடுகிறது. மற்றமை தான் ஒன்றின் தனித்தன்மையை (அப்படி ஒன்று உண்டெனில்) தீர்மானிக்கிறது. உயர்சாதிகள் தாம் தலித்துகளை உருவாக்குகிறார்கள். முன்னவர் இன்றி பின்னவரை நாம் விளக்கவே இயலாது. முரணியக்கத்தை கருத்திற் கொள்ளாமை ரேண்டின் சிந்தனையின் ஒரு அடிப்படை பிழை. 
 இன்றைய இளம் தலைமுறையினரில் சிலர் இடஒதுக்கீட்டை இவ்வாறு பார்க்கிறார்கள்: இந்தியாவில் தன்னை தனியாக, முக்கியமாக உணரும், தன்னளவுக்கு திறமையற்ற மந்தையினர் (இட ஒதுக்கீடு, சமூகநல திட்டங்களின் பெயரில்) அடுத்தவரை உறிஞ்சி வாழ்கிறார்கள். இதை வெறுக்கும் இந்த மேற்தட்டு / மேல்சாதி இளையதலைமுறையினர் இயல்பாகவே ஐயன் ரேண்டினால் ஈர்க்கப்படுகிறார்கள்.
 இங்கு வலதுசாரிகள், தாராளவாத கருத்தியலாளர்கள், முதலாளித்துவாதிகள், இடதுசாரி எதிர்ப்பாளர்கள், இடஒதுக்கீடு மறுப்பாளர்கள் என பலரும் ரேண்டின் தத்துவம் சரி என நம்புகிறார்கள். பொதுப்போக்குக்கு வளைந்து போக விரும்பாதவர்களும் இந்த கட்சியில் சேர்கிறார்கள்.
நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மாணவர் ஆதர்ஷ் இறுதி வகையை சேர்ந்தவர். ஆதர்ஷ் என்னிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார்:
1)   ஒரு தனிமனிதனாக நான் ஏன் பிறரின் போக்குகளால் அலைகழிக்கப்பட வேண்டும்? நான் ஏன் பொதுப்போக்குக்கு வளைய வேண்டும் எனும் நெருக்கடிக்கு ஆளாகிறேன்? நான் ஏன் “நானாகவே” இருக்கக் கூடாது?
2)   என் உடல் முழுக்க என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்னை மீறி யாரும் என் உடலை கையாள இயலாது. ஆனால் இதே உறுதிப்பாடு ஏன் என் மனதுக்கு இருப்பதில்லை? நான் எதை சிந்திக்க வேண்டும், நம்ப வேண்டும் என்பதை தீர்மானிக்க பிறர் ஏன் முனைகிறார்கள்? என் மனதுக்கு ஏன் கடிவாளம் போடுகிறார்கள்?
ஆதர்ஷின் கேள்விகள் எனக்கு எனது பதின்பருவ குரலை நினைவுபடுத்தின. நானும் இப்படியே தான் ஒருகாலத்தில் யோசித்தேன்; என்னை பிறரில் இருந்து விலக்கி வைக்கவும், தனியாய் காட்டிக் கொள்ள தவித்தேன் ஆனால் ஒரு எழுத்தாளனாய் மாறியதும் எனக்கு இதைப் பற்றி ஒரு முற்றிலும் புதிய பார்வை கிடைத்தது.

(தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...